Sunday, March 25, 2018

திராவிட இயக்கத்தை வெல்ல முடியாது

'திராவிட இயக்கத்தை வெல்ல முடியாது! ஆனால் மக்களிடம் அதன் மதிப்பைக் குறைக்கும் வேலையைத் தொடர்வோம்' _ துக்ளக்கை ஆட்டை போட்ட ஆடிட்டர் குருமூர்த்தி.. நிறைய தண்ணீர் குடி .. வயித்தெறிச்சல் தெரிகிறது .. .. இந்த நாட்டின் பூர்வகுடி மக்கள் திராவிடர்களென்பதும் 4500 ஆண்டுகளுக்கு முன்பே அதாவது மனிதனைப்பற்றி ஆய்வில் தொடக்ககாலமென அறிய படுகிற காலத்தில் வாழ்த்தவன் திராவிடன் எத்தனைதான் பொய்யும் புரட்டும் அதிகாரமும் ..லாபிகளும் அரங்கேற்றினாலும் உண்மை கிழித்துக்கொண்டு வெளிவந்தே தீரும்... .. இந்த வந்தேறிகள் தொடர்ந்து திராவிடத்தின் மீதான போரை செய்துகொண்டே இருப்பர் .. ஆனால் அவர்களை மீறி திராவிட தொன்மை வெளிவந்துக்கொண்டே இருக்கும் எந்தவொரு நாட்டிலும் தொல்பொருள் ஆய்வின்போது கிடைக்கும் வரலாற்றை ...மீண்டும் புதைப்பதில்லை ஆனால் இந்தியாவில் தான் இதெல்லாம் சாத்தியம்.. நம் கீழடி தந்த செய்தியை மூடி மறைக்க இனத்தின் துரோகிகளை கொண்டே மண் மூடிய வரலாறு எங்கும் கண்டதில்லை.. .. அரசியலில் ஏன் இவர்கள் திராவிடத்தை கொடூரமாக பார்க்கிறார்கள் அவர்களின் வரலாறு தெரிந்து விரட்டபட்டுவிடுவோமோ என அஞ்சுவது வெளிப்படையாக தெரிகிறது இங்கே பெருங்கிழவன் பெரியாரின் பேராற்றலால் .. திராவிடத்தை அரசியல் சமூக ரீதியாக கட்டமைத்தது ஆரியர்களின் வாழ்வை புரட்டி போட்டது .. யாருமே எதிர்க்காத வளையத்தில் நின்று கொண்டு உச்சிகொட்டியவர்களின் தலையை தட்டி கீழிறக்கி கொஞ்சம் கொஞ்சமாய் பூர்வீக குடிகளை கல்வி வேலைவாய்ப்பில் அமர்த்தியது திராவிடம் ..அதனால்தான் எப்படியும் திராவிடத்தை இல்லாமாக்க எண்ணி.. தமிழ்தேசியம் சாதிய நிலைபாடு என பல்வேறு வழிகளில் காய் நகர்த்தினாலும் கடைசியில் அவர்களுக்கு புரிந்து போனது.. திராவிடத்தை வீழித்த முடியாதென்று ..திராவிட இயக்கத்தை வெல்ல முடியாது.. .. ஈராயிரம் அடிமைபடுத்தியவர்களை தன் வாழ்நாளுக்குள்ளாகவே ஓட ஓட விரட்டியவர் தந்தை பெரியார் .. கத்தியின்றி இரத்தமின்றி ஒரு மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியவர்.. இந்த சமூகத்தின் கடைநிலை மனிதனையும் அவன் உரிமையையும் மீட்க போராடியவர்... சாதி மதம் சமூகம் கடவுள் வேதம் என எவையெல்லாம் சமூக மாற்றத்திற்கு ..சமதர்மத்திற்கு இடையூறாய் இருக்குமோ அதையெல்லாம் தூக்கியெறிந்து மனித மேம்பாடொன்றே லட்சியமாய் செயல்பட்ட மாமனிதர் உருவாக்கிய திராவிட இயக்கம்.. இன்னமும் இந்த மண்ணில் சாதி மதம் மனிதர்களிடையே ஏற்றதாழ்வு இருக்கும் வரை.. திராவிட இயக்கத்தின் பணி தேவை.. ஆரியத்தை எழ விடாமல் செய்திட திராவிட இயக்கம் தேவை .. அதை எதிர்க்கிறவர்கள் இருக்குமிடம் தெரியாமல் கரைந்து போவார்கள் .. .. இளந்தலைவர் தளபதி அவர்கள் மாநாட்டில் சொன்னதைப்போல.. 3% விழுக்காட்டினரிடம் இருக்கும் ஒற்றுமை 97% விழுக்காட்டிடம் இருந்திருக்குமேயானால்.. வடக்கு நோக்கி எப்போதே அவர்களை விரட்டி இருக்கலாம் அந்த காலம் வரும்.. அப்போதுதான் திராவிடத்தின் முழுவெற்றி அடைந்ததாக பொருள்.. கலைஞரின் கட்டளையை ஏற்று தமிழனை தமிழை உயர்த்தி பிடித்து மதவெறியை மாய்த்து மனிதம் வளர்த்து அதிகார குவியலை அடித்து நொறுக்கி வளமான தமிழகத்தை வார்த்தெடுப்போம் .. இனி..வெற்றிதான் இலக்கு.. .. Aalanci Spm

No comments:

Post a Comment