Saturday, March 3, 2018
திரிபுரா சொல்லும் சேதி
திரிபுரா சொல்லும் சேதி..
இனியும் மக்கள் பாஜகவை நம்புகிறார்கள் என்றா.. ஒரு உறுப்பினர் கூட இல்லாத சிறு மாநிலத்தில் .. ஒரேயடியாக அதிகாரத்தில் எத்தியது எப்படி.. மிக சாதூர்யமாக பிரகாஷ்காரத்தை .. ம.கம்யூனிஸ்ட் தலைமைக்கு அனுப்பிய போதே.. இன்னொரு கோர்பசேவ் என அப்போதே சில பழம்பெரும் பொதுவுடைவாதிகள் எச்சரித்தார்கள். நவீன படுத்தபடுத்தபட்ட தங்கள் சித்தாந்தம தோல்வியாக இவர்களே மிக கச்சிதமாக காய் நகர்த்துகிறார்கள்.. மதசார்பின்மையை கட்டிகாக்க இவர்கள் தவறியதும்.. காங்கிரஸ் எதிர்ப்பை மட்டுமே முன்னெடுத்து .. அது பாசிசத்திற்கு வழி வகுக்கும் என அரசியல் பாலபாடம் படிப்பவர் கூட அறிந்திருக்கும் போது.. விவேகமற்று எதிர்ப்பென்ற பெயரில் பாஜகவை வளர்க்க தங்கள் கட்சியை பலிக்கொடுக்கிறார்கள்..
..
வங்கத்தில் என்ன நடந்தது.. காங்கிரஸை எதிர்ப்பதாக சொல்லி காய் நகர்த்த மம்தா காங்கிரஸை விட்டு வெளியேறி தனிகட்சி கண்டதும் எல்வாம் இலகுவாகுமென நினைத்தார்கள்..ஆனால் மம்தா தன் நிலைபாட்டை உறுதி செய்து மக்களின் தலைவராக வலம் வந்தார்.. இப்போது கம்யூனிஸ்ட் மூன்றாமிடத்திற்கு தள்ளபடுகிற சூழல்.. இப்போது திரிபுரா..
..
திரிபுராவில் நிறைய உள்குத்தும் .. காங்கிரஸ் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கியும் கம்யூனிஸ்ட்களிடம் பேரம் பேசபட்டும் .. அதோடு வாக்கு இயந்திர செயல்பாடும் கச்சிதமாக வெற்றி பெற உதவியிருக்கிறது.. வழக்கம் போல் பொலிட்பீரோ விவாதிக்குமென பருப்புவடையையும் மசாலா டீ யையும் குடித்துவிட்டு வழவழ அறிக்கையொன்றை தருவார்கள்.. மிச்சமிருக்கும் கேரளாவையும் தாரை வார்த்துவிட்டு கம்யூனிஸத்திற்கு இறுதி சடங்கை செய்யலாம்
..
பெரியார் மிக சிறந்த தொலைநோக்கு பார்வை கொண்டவர்.. கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கனவே பிராமணர்கள் கையில் தான் இருக்கிறது அவர்களை மீறி எதுவும் நடக்காது என்றார்.. இப்போது நடக்கும் நிகழ்வுகளை பார்த்தால் பெரியாரின் பார்வை எவ்வளவு சரியென்று புரியும்.. கம்யூனிஸ்ட் கட்சியில் மிகப்பெரிய பொறுப்புகளில் தொடர்ந்து பார்பனர்கள் இருப்பதும் தொடர்ந்து பொலீட் பீரோ வின் முடிவுகள் பாஜகவிற்கு பலம் சேர்ப்பதும் கூர்ந்து கவனிக்கவேண்டிய விடயம்..சட்டென்று ஒருநாளில் நிகழ்ந்துவிடவில்லை சில பத்தாண்டுகாலமாய் மெல்ல மெல்ல பாசிம் வளர ஒருவகையில் கம்யூனிஸ்ட்களே காரணமாகி இருக்கிறார்கள்.. காங்கிரஸை வீழ்த்தவேண்டுமென்று சொல்லி சொல்லியே அறிந்தே பாஜகவை வளர்த்து வந்திருக்கிறார்கள்.. காலில் தரையில் இல்லையென்பதை உணராமலேயே.. கம்பு சுத்துகிறார்கள்.. இனி மிச்சமிருப்பது கேரளம் தான் அதையும் காவு கொடுத்துவிட்டால் அவர்களுக்கு கொடுக்கபட்ட வேலை முடிந்துவிடும்..
..
பாசிசத்தை வளர்தெடுத்ததில் பெரும்பங்கு பொதுவுடைமை போர்வையில் ஒளிந்திருக்கும் பார்பனர்களே காரணம்....
//
பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு
ஊதியம் போக விடல்..
என்றான் வள்ளுவன்..
கேடு விளைவிப்பது எது? நன்மை தருவது எது? என்று தெளிவடையாமல் நன்மையை விடுத்துத் தீமையை நாடுவதே பேதைமை
..
நாட்டின் நன்மையை நாடாது தீமைக்கு துணை போவது அறிவுடையோர் செயல் அல்ல அறிக பொதுவுடைமைகளே..
..
கடைசியாக ..
திமுகவினருக்கு..
மிக சரியாக திட்டமிடாமல் எப்போதும் போல பழைமை பேசிக்கொண்டு திரிந்தோமேயானால்.. கட்சியை செப்பனிடாமல் கயவர்களை இனம் காணாமல் உள்முரண்பாடுகளை களையாமல்
காலம் தருமென நம்பி வீற்றிருந்தால் தமிழகத்திலும் அச்சம் தரும் செய்தியை நாளை காணவேண்டிவரும்.. திமுக கடைசி நம்பிக்கையாக இருப்பதை .. எந்த விலைகொடுத்தும் எந்த அளவிற்கு இறங்கியும் பாஜக களமாற்றும்.. கவனம்.. இங்கே விழித்தெழும் நேரம் வந்துவிட்டதென்பதை நமக்கு உணர்த்துவதே திரிபுரா சொல்லும் சேதி..
..
Aalanci Spm
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment