Sunday, March 18, 2018
திராவிடம் 2.0
ஆதிக்கத்திற்கெதிரான குரல் ஓங்கி ஒலிக்க தொடங்கியிருக்கிறது.. ஆனால் இங்கே அமைதியாக வாய்மூடி மௌனம் காக்கிறார்கள் அடிமைகள் .. கொஞ்சமும் ரோசமின்றி வெந்ததை தின்று வீணாய் போன வீணர்களாய்
சிலருக்கேனும் இரத்தம் சூடேறினால் எஜமான் விசுவாசத்தில் கட்டம் கட்டி நீக்கி பல்லளித்து எஜமானனை குளிர்விக்கிற கொடுமை நடக்கிறது..
..
மடையனாய் இருப்பவனை கூட கொஞ்சம் செப்பனிட்டு அறிவின் தொடக்கத்தில் நிறுத்திவிட முடியும் ஆனால் இங்கே மூடனாய் முடமாய்.. நினைவிழந்தவனாய் ...மானத்தை விற்று வயிறு வளர்ப்பவனாய் அதிமுககாரன் இருக்கிறான்.. காலம் அவன் கையில் ஆட்சியை தந்தது
ஆதிக்கவாதிகளுக்கு அல்வா சாப்பிடுவதைப்போல இனிக்கிறது.. கர்நாடக முதல்வர் தனிக்கொடியென்று .. விந்திய மலை நாடுகள் என்றும் உணர்வை கொட்டுகிறார் அதற்குமுன்பே .. நாங்களென்ன உண்பதென்ன நாக்பூர் தீர்மானிக்க முடியாதென்று ..உரக்க சொல்லி .. திராவிடர் நாங்களென பிரணாய் விஜயன் முன்மொழிந்தார்.. மாநில உரிமைகளை மத்தியில் யாசித்து பெறுவது இழுக்கென்று உணர தொடங்கி புதிய தொடக்கத்தை பேரறிஞர் அண்ணாவின் திராவிட நாடு முழக்கத்தை தென்னகம் ஒலிக்க தொடங்கும் நேரத்தில் இங்கே அண்ணாவின் பெயர் சொல்லி தொடங்கிய கட்சி மூச்சுவிட கூட பயந்து குலைநடுக்கி கிடக்கிறது..
..
திராவிட நாடு முழக்கம் மீண்டும் உயிர்பிக்க தொடங்கியதான் காரணம் என்ன..? பாஜகவும் பிராமணர் தலைமையகமான நாக்பூரும் தான்.. பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து உணவு உடை மொழி கலாச்சாரமென்று எல்லாவற்றிலும் ஆரிய திணிப்பதை தருவதும் ..அதை எதிர்ப்பவர்களை மிரட்டுவதும் .. அறிவுடையோரை கொல்வதும்.. எளியவர்களை அடித்துதைப்பதும்.. வலுத்த கூட்டம் எதிர்நின்றால் பம்முவதும்.. இந்த நான்காண்டில் நாடு கண்டு தன் தவறை உணர்கிறது.. ஜனநாயகத்தின் அத்தனை மரபுகளும் மீறபடுகிறது .. எதிர்க்கட்சியினரை.. எதிர்த்து வென்றவரை மொத்தமாக விலைக்கு வாங்கும் கேடுகெட்ட செயல்.. திருடர்கள் என்று தெரிந்தும் அவர்கள் ஆதரவு தேவையென கருதி பெருபான்மை இழந்து நிற்கும் போதும் நமக்கு கிடைத்த அடிமைகள் சிறந்தவர்களென எண்ணி
.. ஆட்சியில் வைத்து தங்களின் எண்ணங்கள் செயல்திட்டங்களை சத்தமே வராமல் அரங்கேற்றுவதும் .. அதே பாணியை பிற தென்னக மாநிலங்களில் நிகழ்த நினைத்ததே பெருவினாயாய் போனது..
..
சரியான காலமிது பழைமைவாதம் பேசும் அடிப்படைவாதிகளின் செயல்கள் நம்மை ஒருங்கிணைத்திருக்கிறது.. பெரியாரின் பேரன்கள் .. திரண்டு திராவிடம் 2.0 தொடங்கியிருக்கிறார்கள்.. அரசியலை கடந்து சமூக சிந்தனைக்கொண்ட இளைஞர்கள் மத்தியில் புதியதொரு எழுச்சி ஏற்பட்டிருக்கிறது..
பெரியாரின் பெருந்தீ.. யை அணையாமல் காத்திட இவர்களால் முடியுமென்ற நம்பிக்கை வெளிச்சம் நமக்கு மகிழ்ச்சியை தருகிறது
சமூகநீதியை நிலைநாட்ட மதவெறி கும்பலின் பேரிரைச்சலுக்கு மத்தியிலும் குறிப்பாக இளைஞர்கள் ஒருங்கிணைந்து இசைக்க தொடங்கியிருக்கிறார்கள்.. நல்லது நடக்குமென்ற நம்பிக்கை பிறக்கிறது.. எந்தவொரு சித்தாந்தமும் அடுத்த தலைமுறையினரிடம் .. கொண்டு சேர்க்க சின்ன தீப்பொறி அளவிலாவது தந்துவிட்டு போகவேண்டும்.. ஆனால் இங்கே .. பெருஞ்சுடராய் கொண்டு சேர்த்திருக்கிறது .. இதற்கு காரணமான கலைஞர் ஆசிரியர் உள்ளிட்ட அனைவருக்கும் எமது நன்றி உண்டு..
நம்பிக்கை பிறக்கிறது..
புதியதொரு விடியல் விரைந்து வருமென்ற
நம்பிக்கை கீற்று ஒளி வீசுகிறது..
திராவிடமே இந்த மண்ணுக்கு உகந்தது.. இந்த மண்ணின் இயல்பு அது ..அதை மீறிய எதுவும் அறிவுடைமையாகாது.. ஏற்காத எதிரிகளும் உணரும் வரை.. நாம் தொடர்ந்து திராவிடம் 2.0 இளைஞர்களிடையே விதைப்போம்..
..
மலரும்.. மலர்ந்துதானே ஆகவேண்டும்..
..
Aalanci Spm
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment