Wednesday, February 28, 2018
தளபதி
#தமிழினத்தின்_தளபதி..
..
அகவை அறுபத்தாறில்
நீண்ட நெடிய அரசியல் பயணம் சட்டென்று ஒற்றை இரவில் நடந்துவிடவில்லை.. நட்டதும்பூத்ததில்லை..
நல்விதையாய் மண்ணில் விதைத்து நீரூற்றி காத்து.. செழித்து வளர்ந்து வானுயற எழுந்து நிற்கும் வைரம்பாய்ந்த தேக்குமரமாய்..
வழிநெடுக முள்களால் ஆனது.. ஆனாலும்
ரோஜாவைபோல மக்கள் மனம்கவர்ந்த தலைவனாய்..
..
ஆரம்பம் தொட்டே விமர்சனங்களோடு அரசியல் பயணத்தை தொடர்ந்தாலும் எங்கும் எதிலும் சமரசரம் செய்துக்கொள்ளாத போராளியாய்.. கிடைக்கிற வாய்ப்பை மிகச்சரியாக பயன்படுத்திக்கொள்ளும் பேராற்றலாய்.. எடுத்த காரியத்தை சிரத்தையோடு நடத்திமுடிக்கிறவராய் ..
கடும் உழைப்பை, வெற்றி தோல்வி பற்றி கவலைக்கொள்ளாமல் மக்கள்பணியாற்றுகிற தொண்டனாய் வலம்வருகிறார் தளபதி..
..
தளபதி சாலச்சிறந்த பெயர் ..
திராவிட இயக்கத்தின் தளபதியாய் கலைஞரின் கரமாய்
சுழன்று வரும் சூரியனாய்.. தமிழகத்தின் இருள் போக்க வந்த கதிரவனாய்.. தமிழர்களின் தளபதியாய் தமிழகத்தின் ஒரே நம்பிக்கையாய் தன்னை உருவாக்கியிருக்கிறார்.. அரசியலில் மாற்றுகருத்தை கொண்டோர் கூட திரு.ஸ்டாலின் அரசியலை ஏற்கிறார்கள்.. மிக நிதானமாக ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கிறார்.. நேர்மையான, ஒளிவுமறைவற்ற அரசியலை தமிழகத்தில் கொண்டுவர பாடுபடுகிறார்..
மிகச்சிறந்த தலைவர்கள் வரிசையில் இடம்பெற கூடிய அனைத்து தகுதிகளையும் கொண்டிருக்கிறார்....
..
கட்சி அரசியலை தாண்டி இவரது அரசியல் நேர்மை தனித்துவம் வாய்ந்தது.. கமிழகம் கண்ட நீண்டகால பகை அரசியலை.. அதாவது சரியாக சொல்லவேண்டுமெனில் எம்ஜிஆர் தனது கட்சிகாரர்கள் பொதுவெளியில் கலைஞரை சந்தித்தாலே கட்டகட்டி கழட்டிவிடுகிற செயலை செய்தார் பிறகு அதிமுகவினர்கள் திமுககாரர்களை கண்டாலே காததூரம் ஓடுவார்கள்.. அந்த நிலையை மாற்றி .. கடுமையான வினையாற்றியவர்களிடம் கூட நயமாக நடந்துக்கொள்ளும் விதம் அரசியலைதான் கடுமையாக எதிர்க்கிறேனே தவிர தனி நபரை அல்ல என்ற உயர்கோட்பாடோடு செயல்படுகிற தளபதி அவர்கள் .. நீண்டநாட்களுக்கு பிறகு ஆரோக்கியமான அரசியல்களத்தை வடிமைக்கிறார்.. புதியபாதை இது..
..
தமிழகம் எதிர்ப்பார்க்கிற நல்லதொரு விடியலை தர இவரால்தான் முடியுமென மக்கள் நம்புகிறார்கள்.. அனைத்துதரப்பு மக்களும் ஏற்றுக்கொள்கிற ஒருவராக தன்னை அடையாளப்படுத்தி கொண்டிருக்கிறார்..
மிக நிதானமான அதேநேரம் தெளிவான தீர்க்கமான அரசியல் பயணத்தை மேற்கொள்கிறார்.. திடீரென ஒருவெற்றியை/பதவியை அவர் விரும்பவில்லை மாறாக மக்கள் அங்கீகரித்து வழங்குகிற சிம்மாசனத்திற்காக காத்திருக்கிறார்..
காலம் தரும் அந்த சிம்மாசனம் நீடித்து நிலைத்து நிற்கும்
மக்கள் போற்றும் மாபெரும் தலைவராக வருவார்
நல்லதொரு விடியலை தருவார்..
கிழக்கு வெளுக்கும்
கீழ்வானம் சிவக்கும்..
கதிரவனின் ஒளி வீசும்
தளபதி தரணி ஆள்வார்..
..
#தமிழின_தளபதி..ஆம்.
எம்இனத்தின் தளபதி..
..
#வாழ்த்துகள்
..
Aalanci Spm
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment