Wednesday, November 1, 2017
தகிடுதித்தோம்
தமிழ்நாட்டில் ஊடகங்களுக்கு கடுமையான நெருக்கடியை மத்திய தொலைத் தொடர்பு துறை கொடுப்பதாக தகவல் வருகிறது ஒரு கவுன்சிலர் சீட் கூட வெற்றி பெற முடியாத பாஜக பிரதிநிதிகளை அழைத்து ஏன் எல்லா பிரச்சினைகளுக்கும் கருத்து கேட்க வேண்டும் ..
விவாதித்தில் பங்கேற்க செய்யவேண்டும்
திருமுருகன் காந்தி ..
..
அவர் சொல்வதில் தவறில்லை ..
யாரென்றே தெரியாதவர்கள் திடீரென பொருளாதார நிபுணராக ..அவரே அரசியல் விமர்சகராக, நடுநிலையாளராக சமூக ஆர்வலராக பாஜகவாக வருகிறார் ஒருவருக்கு எத்தனை முகங்கள்.. வலுகட்டாயமாக பாஜகவை சேர்ந்தவர்களை அழைத்துவந்து அவர்கள் கருத்துக்களை மக்களிடம் திணிக்கும் செயலை தொலைக்காட்சி ஊடகங்கள் செய்கிறது.. எந்த சேனலும் விருப்பட்டு செய்வதாக தெரியவில்லை மாறாக கட்டாயபடுத்தி தங்களின் பிரதிநிதிகளை பாஜக திணிப்பதாகவே தெரிகிறது இது யதேச்சயமாக நடப்பதாக தெரியவில்லை எல்லா விவாதங்களிலும் திமுக அதிமுக பங்கேற்கிறதோ இல்லையோ பாஜகவின் ஆட்கள் பங்கேற்கிறார்கள்..
..
அதிகாரம் கையிலிருப்பதால் அழுத்தம் Pressure
தந்து தொடர்ந்து பங்கேற்க செய்வதால் பாஜக வளர்கிறதென்ற தோற்றத்தை ஏற்படுத்தலாமென எண்ணுகிறார்கள் ஆனால் பெரிய பலனை தராது இடைவிடாது கூச்சல் போடுவதால் சலிப்பையே தரும் அமைப்பு ரீதியாக காங்கிரஸூக்கு இருக்கிற பலம் கூட பாஜகவிற்கில்லை.. குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்தவர்கள் நிறைய பேர் பாஜக போன்ற மதத்தை கையிலெடுக்கிற கட்சியை பின் நிற்கிறார்களே தவிர பெருவாரியான பிற சமூக மக்களிடம் பெரியதொரு தாக்கமில்லை அதைவிட தமிழகமக்கள் சாதி மதம் சொல்லி பிரிவினை உண்டாக்குவோரை திரும்பி கூட பார்க்கமாட்டார்கள்..
..
நிறைய குறுக்கு வழிகளை கையாண்டு பார்க்கிறார்கள் உளவுத்துறை ரிப்போர்ட் என்று சில நாட்களாக கசியவிடுகிறார்கள் அதில் எடப்பாடி அரசை பிடிக்கவில்லையென 89 % பேர்
இதில் 80 % மீண்டும் அதிமுகவிற்கு வாக்களிக்க போவதில்லையாம் அதில் 46 % பேர் தி மு க வுக்கும் வாக்களிக்க மாட்டார்களாம்.
இதில் ரஜினிகாந்த் 19 % சதவீதம் ,. விஜய் 9 %,. கமல் 4 % சதவீதமும் பெறுவார்களாம்
பா ஜ க மத்திய உளவுத்துறை அறிக்கையை பார்த்து விட்டு திகைத்து போய் விட்டதாக சொல்லி செய்தியை கசிய விட்டிருக்கிறார்கள் ..
அதாவது ரஜினிக்கு 19 % பேர் ஆதரவு இருப்பதாக உளவுத்துறையை கொண்டு பிரசாரம் செய்யும் உக்தி எப்படியாவது ரஜினியை கொண்டுவரவேண்டுமென்று பாஜக பல முயற்சிகளை மேற்கொள்கிறது அதில் இதுவும் ஒன்று ..
..
நிறைய உளவுத்துறை ரிப்போர்ட்களை பார்த்தவர்கள்.. இதெல்லாம் எதற்காக செய்படுகிறதென்று அறிவோம்.. தினம் ஒரு ஆளை அனுப்பி ஆதரவாக பேசவைத்தாலும் மக்களிடம் எடுபடாது .. காரணம் மிக எளிது இது தமிழகம் பெரியாரிய தாக்கம் இல்லாமல் எதுவும் நடக்காது..
அந்தளவிற்கு எம்மைபண்படுத்தியிருக்கிறார் #பெரியார் ..
இங்கே #தகிடுதித்தோம் வேலைக்காகாது..
..
அமைப்பு ரீதியாக பலமில்லாதவர்கள் வெற்றிபெற முடியாதென்கிற எளிய உண்மை தெரியாமல் தினம் தினம் உள்ளேன் அய்யா சொன்னாலும் கரைசேர முடியாது.. சர்வ அதிகாரமும் தங்களுக்கிருப்பதாக எண்ணி ஊடகங்களை மிரட்டலாம் உளவுத்துறையை பயன்படுத்தலாம்.. களம் வேறுமாதிரியான பதிலடியை தரும்..
..
#திராவிடமண்
..
Aalanci Spm
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment