Saturday, November 18, 2017
ஜெயலலிதா கிரிமினல் 1
போயஸ் கார்டன் ரெய்டை ஏன் எல்லோரும் பதைபதைப்போடு எதிர்க்கிறார்கள்.. ஆளும் அமைச்சரோ.. தெய்வத்தின் வீடு .. கறைபடியாத கரம் என்றெல்லாம் பீத்துகிறார்.. கவலையளிப்பதாக எதிர்க்கட்சி தலைவர்.. எப்படி ஜெயலலிதா வாழ்ந்த இடத்திற்கு சோதனைக்கு போகலாமென சிலர்.. செத்தவரை ஏன் களங்கபடுத்தவேண்டுமென சிலர் ..
..
ஒன்றை எல்லோரும் மறந்துபோகிறார்கள்.. இப்போது நடக்கிற இனியும் தொடர போகிற எல்லா (ரெய்டு) பரிசோதனைகளுக்கும் முழு பொறுப்பாளர்.. செல்வி.ஜெயலலிதா தான்
குன்ஹாவின் தீர்ப்பை முழுமையாக படிக்காதவர்கள் அல்லது அரைகுறையாக படித்தவர்களின் வெற்று கூச்சல் இது ..
குன்ஹா ஜெயலலிதாவை A1 ஐ.. பற்றி குறிப்பிடும் போது .. ஜெயலலிதாவிற்கு தெரியாமல் அல்ல தெரிந்தே முறைகேடுகள் நடந்ததென கூறுகிறார்..
அதோடு அவருக்கு பங்குண்டு .. பதவியை முறைகேடாக பயனிபடுத்தியிருக்கிறாரென தொடர்ந்து 14 பக்கங்களுக்கு ஜெயலலிதாவை குற்றம் சொல்லி.. அதிகபட்ச தண்டனை தரவேண்டும்.. மூன்று பிரிவுகளில் குறைந்தது ஒவ்வொரு பிரிவிற்கும் பத்தாண்டுகளும் ஒரு பிரிவில் எழாண்டுவரை தரவேண்டும்.. பெண் என்பதை கருத்தில் கொண்டும் மிக மிக குறைந்த தண்டனையாக நான்காண்டும்.. ₹100 கோடி அபராதமும் விதிப்பதாக தன் தீர்ப்பில் சொல்கிறார்.. அந்த தீர்ப்பைதான் உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது.. தண்டனையை குறைத்தோ அல்லது அபராத தொகையில் கழிவோ இல்லாமல் அப்படியே தீர்ப்பை வழங்கியது..
..
இன்றைக்கு மன்னார்குடி மாபியாவை குறைச்சொல்பவர்கள் ஜெயலலிதாவை புனிதராக்க முயல்வது உச்சகட்ட அயோக்கியத்தனம்.. இதைவிட யாரும் தமிழக மக்களையோ நீதித்துறையையோ கேவலபடுத்தமுடியாது.. உடனே இறந்துபோனவரை விமர்சிக்கலாமா என கேட்கிறார்கள் அப்படியெனில் கோட்சேவும் ஹிட்லரும் புகழபடவேண்டியவர்களா..
ஜெயலலிதா குற்றவாளியென அறிவித்து இதோ .. இவர்தான் மக்கள் வழங்கிய அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியவரென சொல்லியிருக்கவேண்டாமா..நினைவு மணிமண்டபம் உலகிலேயே குற்றம் நிரூபிக்கபட்ட ஒருவருக்கு அரசு செலவில் என்பது ஏற்புடையதா..
எனது வரிப்பணத்தை கொள்ளையடித்தவரை .. தெய்வம் கர்ப்பகிரஹம் கோவில் என்றெல்லாம் சொல்பவர்களை விரட்டியடிக்கவேண்டாமா..
..
இன்றைக்கு அதிமுக சிதறி அதன் மூலம் பலன் பெறலாமென்ற பாஜகவின் கனவு தகர்வதும்.. அதிமுகவில் சிலரை விலைபேசி அல்லது மிரட்டி பணியவைக்கலாமென்ற நினைப்பில் சிலர் வளைந்து வர மறுப்பது இடையூறாகி விசாரணை சோதனை என்றெல்லாம் காய் நகர்த்த அது பலனை ..தினகரன் கோஷ்டிக்கு கொண்டுபோகிறது... சசிகலாவை கொள்ளைக்காரியாக சித்தரிக்கிற போது கூடவே ஜெயலலிதாவும் சேர்ந்தே நாறுகிறார் என்பதை உணர மறுக்கிறார்கள் இந்த அடிமைகளும் அடிமைகளை ஆட்டிவைப்போரும்..
..
சசியோடு ஜெயா சேராமல் இருந்திருந்தால் நல்லவராக நல்லாட்சி செய்திருப்பாரென சிவர் சொல்வது சிறந்த நகைச்சுவை..
அரசியலே வேண்டாமென்று ஓடியவரை அழைத்துவந்தது சசிகும்பல் தான்..
இங்கே ஜெயலலிதாவை சிறந்த ஆளுமையாக சொல்கிறவர்கள் சசியை மறந்து போகிறார்கள்.. தன் கட்டுபாட்டில் வைத்திருந்ததற்கு என்ன பெயர் சொல்லி அழைப்பார்கள்..
..
சசிகலா வகையறா மட்டுமல்ல ஜெயலலிதாவையுமே சேர்த்தே குற்றவாளியாக நாம் கொண்டாட வேண்டும்..
அப்போதுதான் எதிர்வரும் காலங்களில் ஜெயலலிதா என்ற நபர் திருடியாக மக்கள் பணத்தை கொள்ளையடித்தவராக வரலாற்றில் பதியமுடியும்.. சிலர் தெய்வமென புகழ்வது உண்மையில் பதவியை தேடியும் பதவியை காத்துக்கொள்ளவுமே தவிர உண்மையில் அவர்கள் அறிவார்கள்.. ஜெயலலிதா எனும் மகா திருடரை..
#Jayalalitha_no1criminal
..
Aalanci Spm
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment