Tuesday, November 28, 2017

செல்வி ஜெயலலிதா

#Character_assassination .. செல்வி ஜெயலலிதா அம்மையார் மறைவுக்கு பிறகு அவரை Character assassination பண்ணுவது போல செய்திகள் வருவது வருந்தத்தக்கது ஒரு பெண் தனது தாய் இவரென்கிறார் அது உண்மைதானா .. இல்லையா என்பதை சம்பந்தபட்டவர்களும் நீதிமன்றமும் தீர்மானிக்கட்டும் இதில் நாம் ஏன் நுழையவேண்டும் ஒருவரின் தனியுரிமைகளை அவரின் அந்தரங்கங்களை நாம் ஏன் அறிந்துக்கொள்ளவேண்டும் .. ஜெயலலிதா அரசியலோடு நாம் கடுமையாக நடந்துக்கொள்வோம் அவரை மிக கடுமையான சொற்களால் விமர்சனம் செய்வோம்.. அவர் தமிழ்நாட்டிற்கு செய்துவிட்டு போன கெடுதிகளை தொடர்ந்து தோலுரிப்போம்.. தமிழகம் கண்ட மிக கேடுகெட்ட அரசியல்வாதி இவரென வருங்கால தலைமுறைக்கு எடுத்து செல்வோம் ..அவரின் அரசியல் பயணம் நிறைய தடுமாற்றங்களை கொண்டது நிறைய ஏமாற்றங்களை தந்தது மக்களை மடையர்களாக்கிய அவரின் நரித்தனத்தை ..திட்டமிட்டு திருடி இரண்டுமுறை பதவிநீக்கம் செய்யபட்டதை, வழக்கின் விசாரணையை தான் நினைத்ததுப்போல் நடத்தி.. தீர்ப்பை விலைகொடுத்து வாங்கியதை.. கிரிமனல் no1 என உச்சநீதிமன்றமே உரத்து கூறியதை.. சர்வாதிகாரியைப்போல் நடந்து ஜனநாயக அமைப்பையே கேலிகூத்தாக்கியதை .. நெஞ்செல்லாம் வஞ்சம் கொண்டு பகையோடு கடைசிவரை வாழ்ந்தது மறைந்ததை... அரசியல் நாகரீக பண்பை அடியோடு மாற்றி .. தான்தோன்றித்தனமாய் ..தன் பிறப்பு தனக்கு கைகொடுக்கும் யாராலும் ஏன் நீதிமன்றத்தாலே கூட எதுவும் செய்யமுடியாது .. மநு காக்குமென நம்பி ஆடாத ஆட்டமாடியதை கொஞ்சமும் தயங்காமல் விமர்சிப்போம்.. சகட்டுமேனிக்கு மற்றவர்களை வயதோதிகத்தை .. எள்ளிநகையாடிய கீழ்த்தரமான தரகுறைவாக செயலை..ஜெயலலிதாவின் அறம் சாராத அரசியலை கடுமையாக விமர்சிப்போம் .. .. ஆனால் அவர் செல்வியா திருமதியா அவருக்கு குழந்தை இருக்கிறதா இல்லையா .. யாருக்கு பிறந்ததென ..நாம் ஏன் சிந்திக்கவேண்டும்.. யாராரோ வருகிறார்கள் .. அவர்கள் நீதிமன்றத்தை நாடுகிறார்கள் அவரின் சொத்து சம்பந்தபட்டு உரிமை கொண்டாடலாம்.. அதனால் நமக்கென்ன வந்தது.. ஊடகங்கள் அவரின் உறவினர் என ஒருவரை பேட்டி காண்கிறது அது அசிங்கத்தின் உச்சம்.. அவர் பெண்குழந்தை பிறந்ததாக .. பெரியம்மா பிரசவம் பார்த்ததாக சொல்கிறார்.. ஏன் இதுவரை சொல்லவில்லை என நாம் எப்படி கேட்க கூடாதோ அதை போல மறைந்தவரை பற்றி பேசபடும் அவரின் தனிநபர் வாழ்க்கையை நாம் தெரிந்துக்கொள்வதில் தவறில்லை ஆனால் காதில் விழும் செய்திகளாக கேட்டு கடந்துபோக வேண்டுமே தவிர... அவரை இந்தவொரு விடயத்திற்காக தரம்தாழ்ந்து விமர்சிப்பதும் அவரை கேலி செய்வதும் அவரின் நடத்தையை பற்றி அவதூறு சொல்வதும் தவறு பெரும் தவறு.. .. ஜெயலலிதா என்ற அரசியல் வாதியின் பொதுவாழ்வைப்பற்றி விமர்சனங்களை முன் வைக்கலாமே தவிர ..அவரின் தனிபட்ட அந்தரங்கங்களை குடும்பத்தை.. விமர்சிப்பதோ கருத்துகூறுவதோ கேடுக்கெட்டத்தனம்.. நாகரீகமற்ற செயல்.. பண்பட்ட அரசியலை கற்று தந்த திராவிட பேசுவோர் கூட விமர்சிப்பதும் நகைப்பதும் ஏற்புடையதாக இல்லை. .. இங்கே யாருமில்லை உத்தமர்.. எல்லோரும் தனித்தனியே யோக்கியர்கள் தான் #மற்றவர்_அறியாதவரை.. .. Aalanci Spm

No comments:

Post a Comment