Saturday, November 11, 2017
அரசு சொத்து அடமானத்தில்
₹2,453 கோடிக்கு அரசு போக்குவரத்துக்கழக சொத்துகளை அடமானம் வைத்துள்ளது தமிழக அரசு...
இதுதான் இன்றைய நிலை..
..
#கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு.
நாட்டுநிலை ஆராயாமல் கொடுங்கோல் புரியும் அரசு, நிதி ஆதாரத்தையும் மக்களின் மதிப்பையும் இழந்துவிடும். என்றான் வள்ளுவன் ..
கோமாளிகள் கையில் சிக்கி தமிழகம் சீரழிகிறது..
நடுநிலையற்ற தான் தோன்றித்தனமாய் நடக்கிற அரசு நிதி ஆதாரத்தை இழந்தே நிற்கும்..
..
ஒவ்வொரு தமிழனின் தலையிலும் ₹60,000 கடன்.. எதாவது நல்ல திட்டமிருக்கிறதா இந்த சூழலில் கூட எம்ஜிஆர் நூற்றாண்டு விழா என்ற பெயரில் மக்களின் பணம் வீணடிக்கபடுகிறது.. அமைச்சர்கள் இருக்கிற ஆதாயமென ஆற்றுமணல் தொடங்கி எல்லாவற்றிலும் கமிஷன் தொகை பேசபட்டு வெளிபடையாகவே கொள்ளையடிக்கிறார்கள்.. முன்பெல்லாம் அடித்த கொள்ளையில் பங்கு மேலிடத்திற்கு (ஜெ-சசி) கொடுக்கவேண்டும் இப்போது அது தேவையில்லை நேரடியாகவே கொள்ளையடிக்கிறார்கள்..
..
ஊழலுக்காக அதிமுக அமைச்சகர்கள் தண்டிக்கபட்டது புதிதல்ல முன்பு மருங்காபுரி பேராசிரியர் பொன்னுசாமியும்..நாகூர் பிச்சையும் நீதிமன்றத்தாலே தண்டிக்கபட்டு சிறைசென்றார்கள. இதோ இப்போது சசிகலா ...
உயிரோடிருந்திருந்தால் கிரிமினல் ஜெயலலிதாவும் சிறையில் இருந்திருப்பார்.. ஆனாலும் கொஞ்சம் கூட குற்றபோதமில்லாமல் கொள்ளையடிக்கிறார்கள்
..
அரசு இயந்திரம் ஊழலால் கட்டமைக்கபட்டிருக்கிறது எதற்கும் அஞ்சுவதில்லையென ஊழல் எல்லாவற்றிக்கும் ஒரு விலை ..அரசு இயங்க அரசின் சொத்துக்களை அடமானம் வைக்கவேண்டிய சூழலை ஏற்படுத்திருக்கிறார்கள்..நிர்வாக சீர்கேடு எல்லாத்துறையும் நஷ்டத்தில் இயங்குகிறது முறையாக வரிவசூல் வந்தும் வருவாயை பெருக்க முயற்சிக்காமல் எப்போது ஆட்சி கவிழுமோ என்ற அச்சத்தில் கிடைக்கிற வரை லாபமென செயல்படுவதால் ..ஒட்டுமொத்த நிர்வாகமும் செயல்படாமல் நிற்கிறது..
..
அமைச்சர்கள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லோருமே ஏதேனும் தேறுமா என்றுதான் எண்ணுகிறார்களே தவிர எதுவும் நடந்தபாடில்லை..
கம்பம் ஜக்கையன் எம்எல்ஏ காசு வாங்கிகொண்டுதானே வாக்களித்தீர்கள் பிறகு ஏன் கேள்வி கேட்கிறீர்கள் என்கிறார்.. எவ்வளவு அவமானம்.. இந்த கேடுகெட்டவர்களை ஆட்சி அமைர்த்த விலைபோன வாக்காளனை எண்ணி வேதனை கொள்ளவேண்டிருக்கிறது..
யாரும் எதற்கும் அஞ்சாமல் எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல் .. வந்தவரை லாபகணக்கில் செயல்படுவதால் நிர்வாகம் சீர்கெட்டு கிடக்கிறது..
இன்னும் மிதமுள்ள காலத்திற்குள் அரசை திவாலாக்கிவிடுவார்கள்..
..
நாம் நட்டதே முளைத்தது..
குற்றம் சொல்லி பலனில்லை..
விலைபோகிவிட்டபிறகு ..யாரை குறைச்சொல்ல
₹500 க்கும்₹1000 க்கும் நம்மை அடகுவைத்ததால் அவன் அரசு சொத்தையே அடகுவைக்கிறான்..
..
இனியேனும் கவனமாய் இருப்போம்..
..
Aalanci Spm
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment