Monday, November 27, 2017
திறமையல்ல..
அயோக்கியனின் திறமைகளை சிலாகிப்பதில்தான் உலகமகா அயோக்கியதனம் ஒளிந்திருக்கிறது...
தமிழ் மறவன்
..
யார் திறமையானவர் எது திறமை சாமார்த்தியமாக பதிலளிப்பதற்கு பெயர் திறமை அல்ல அது நழுவல்
விவேக் பற்றி கேட்டவுடன் திமிறி எழுந்தது அது தற்காப்பே தவிர திறமை அல்ல.. ஒரு கட்சியின் மிகப்பெரிய தனக்கு வழங்கபட்டதும் அதை திறமையோடு வழிநடத்த திறனற்று .. தொடர்ந்து சறுக்கலை சந்தித்து.. யாரை நம்பலாமென்று என்று கூட தெரிந்து வைத்திராமல் மொத்தமும் கை கழுவி போன பிறகு இருக்கிறவைகளை காப்பாற்றிக்கொள்ள போராட வேண்டிய சூழல் எதனால் வந்தது அதீத ஆசை.. ஆர்.கே நகரில் நிற்காமல் இருந்து திரை மறைவு அதிகாரத்தை செலுத்தியிருந்தால் கட்சி கையை விட்டு போயிருக்குமா.. ஆனாலும் பாண்டேவை மன்னிப்பு கேட்கவைத்ததை வெகுமக்கள் சிலாகித்து வரவேற்கிறார்கள்..
..
ஊடகவியலாளர்கள் தங்களை எல்லாம் அறிந்தவனென்ற மனமான்பையோடு நடந்துகொள்ளும் விதம் தொடர்ந்து வருகிறது ரபி பெர்னாட் தொடங்கி வைத்ததென நினைக்கிறேன்.. சிலர் சுதாங்கன் போன்றோர் எழுத்தில் காட்டிய விவேகத்தை நேர்காணலில் மறந்து போனார்கள் ..ஒருதலைசார்புநிலை ஊடகங்களில் கட்சிகளில் தொலைகாட்சியில் அதிகமதிகம் வளைந்து நின்றதும் பாண்டே போன்றவர்கள் பெரியளவில் பேசபட காரணமானது.. பாண்டே தொடர்ந்து எதிரில் அமர்ந்திருப்பவரை தாழ்ந்தவனாக எண்ணும் பாசிச மனபான்மையோடு நடந்துக்கொள்வதும் தனக்கு வேண்டியவர்களுக்காக பொய்யாயினும் அதை மிகைபடுத்தி நழுவிசெல்வதும் தான் மட்டுமே யோக்கியன் என்ற திமிரும் அவருக்கு என்றாக்காவது சறுக்கும்.. அல்லது சம்மட்டி அடி கிடைக்குமென எதிர்பார்த்ததுதான்..
அது திரு.ப.சிதம்பரம் அவர்களின் பேட்டியிலேயே தெரிந்தது.. மிக திறமையாக புரிகிறமாதிரி தெளிவாக பேட்டி தந்தார் அதில் திறமை மிளிர்ந்தது நேர்மையும் உண்மையும் இருந்தது .. ஆதாரங்களோடு சொல்லவந்ததை எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் விதம் ..அதே வேளை எல்லாம் தெரிந்தவன் நானென்ற நினைப்போடு எதிரில் கேள்விகளோடு அமர்ந்திருந்த பாண்டேவை நீ.. ஒன்றும் தெரியாத மரமண்டை என எல்லாருக்கும் தெரியபடுத்தினார்.. அவர் திறமையானவர்..
..
ஆனால் தினகரன் திறமையானவரோ அல்லது அவர் சொல்வதெல்லாம் உண்மையென்றோ யாருமே நம்பமாட்டார்கள் .. எல்லா கேள்விகளுக்கும் சமாளித்து பதிலளிக்கிறார் .. தொடர்ந்து சோதனை, வழக்கு நீதிமன்றம் பிணை ..தண்டனை..
என நீண்ட பயணம் வந்தவர்களுக்கு அதிலுள்ள நெளிவுசுழிவுகள் அத்துபடியாகும் அதுதான் தினகரன் பேட்டி முழுவதும் தெரிந்தது .. கடைசிவரை விவேக் முதலாளி இல்லையென்றவர் யார் முதலாளியென சொல்லவும் இல்லை பாண்டே கேட்கவும் இல்லை..
தினகரன் போன்றவர்களை ஏன் வரவேண்டுமென விரும்புகிறார் என்றால் பன்னீர் எடப்பாடி போன்ற கேடுக்கெட்டவர்களின் கையில் பெரிய கட்சி சென்று சிதைந்துவிட கூடாதென்பதற்காகவே தவிர.. தினகரன் திறமையானவரென்பதற்காகவோ அல்லது சிறந்த ஆளுமை என்பதாலோ அல்ல இந்த கேடுக்கெட்டவர்கள் பாசிசத்திடம் மொத்தத்தையும் அடகுவைத்து .. அடிமைசாசனம் எழுதிதந்துவிட்டு அடிமைகளாய் .. சொரணையற்று உலா வருவது கண்டு சகிக்காமல் உள்ளதிலி மெச்சபட்டவர் என்பதால் அடிமைகளை அடக்கிவைக்கவேணும் இவர் தேவை என்பதால் தினகரனின் செயல்களை சிலர் ரசிக்கிறார்கள் அவ்வளவுதான்
..
தினகரன் ஆளுமை அல்ல
..
Aalanci Spm
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment