Thursday, November 16, 2017
சோனியாவிக்கு கடிதம்
எழு தமிழரை விடுதலை செய்ய கருணையுடன் உதவுங்கள்- சோனியாவுக்கு உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி தாமஸ் கடிதம்..
நன்று..
பாதிக்கப்பட்டவரிடம் மன்னிப்பு கேட்பதுதான் சரியும்கூட.. இழப்பின் வலியை உணர்ந்து அதை காலம் சரிசெய்யுமென நம்புகிறவர்கள். கருணையோடே நடந்துக்கொள்வார்கள்..
..
இங்கே சில இம்சைகள்.. காங்கிரஸையும் சோனியாவையும் தொடர்ந்து குற்றம் சுமத்துவதும் முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு காங்கிரஸ் காரணம் போலவும் பேசி வெந்த புண்ணில் வெந்நீர் ஊற்றுகிறார்கள் .. முள்ளிவாய்க்கால் படுகொலையில் பிரபாகரனுக்கும் பெரும்பங்குண்டு..மனிதர்கள் ஒரே இடத்தில் திரட்டி மனிதகேடயமாக முயற்சித்தது பெரியளவிலான உயிர் இழப்பிற்கு காரணமாகியது..
..
தமிழ் அமைப்புகள் காங்கிரஸை மட்டுமே குறைகூறுவது சரியான செயல் அல்ல என்பதை நிறைய முறை விளக்கியாகிவிட்டது.. சார்க் மாநாட்டில் தீவிரவாதித்திற்கெதிராக ஒருங்கிணைந்து செயல்படுவதாக ஒப்பந்தம் செய்தபோதே விழித்திருக்கவேண்டும்..இந்திய அரசு புலிகளை தொடர்ந்து தீவிரவாத அமைப்பாகவே அறிவித்ததும்.. மக்கள் மனதில் வெறுப்பையே வளர்த்தது.. தமிழகத்தி் சக போராளிகளை கொன்றது அதையெல்லாம் கண்டு இங்கிருந்த சொற்ப ஆதரவையும் .. சில சுயநலமிகள் தங்களின் வருவாய் பெருக்கத்திற்காக பயன்படுத்தியதையும்
வெகுமக்களிடையே விடுதலைப்புலிகள் மீதான பார்வை கடும்கோபம் கொண்டதாக இருந்ததும் சிலர் உணர்ச்சி வயப்பட்டபோதும் யாரும் பெரிதாக கண்டுக்கொள்ளவில்லை..
..
யாரையும் பேரடுத்து குற்றம் சொல்ல தயாரில்லை ஆனால் விடுதலைப்புலிகள் தொடர்ந்து எதிர்த்தவரையே ஈழத்தாய் என புகழ்ந்து ..
சொந்த காசை செலவுசெய்து ஈழ உறவுகளை காத்த திமுககார்களையே .. பிரபாகரனை கடும் சொற்களால் விமர்சனம் செய்கிற அளவிற்கு கொண்டுவந்து விட்டது யார்..
..
ராஜீவ் கொலையை துன்பயியல் சம்பவமென பிரபாகரன் சொன்னபோது கூட குற்றவாளிகளில் இவர்கள் எல்லாம் சம்பதமில்லையென ஏதேனும் கருத்து சொல்லியிருக்கலாம்..
..
இன்றைக்கும் கொடுஞ்சிறையில் வாடுவது சீமானின் உறவோ.. நெடுமாறனின் குழந்தைகளோ அல்ல ..இவர்களுக்கு இது வியாபாரம் .. ஒரு தாலி அறுத்ததற்கு ஊர் தாலியெல்லாம் அறுக்கணுமா என உணர்ச்சியை தூண்டிவிட்டு சுகமான வாழ்க்கை வாழ்கிறார்கள்.. வருமானமே இல்லாமல் பங்களாக்களில் சொகுசு கார்களில் உலா வருகிறார்கள்
ஆனால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் இனியேனும் இதை உணர்ந்து .. சோனியாவிடம் முறையிடலாம்.. வீண் வீராப்பு பேசி திரிந்தால் உண்மை பொய்யாகிவிடாது காலம் கடந்தேனும் தவறை உணர்வோம்.. மிகப்பெரிய அரசியல்தலைவரின் கொலையில் .. சம்பந்தபட்டவர்கள் யாரும் தலையிட வில்லையென்றே இருக்கட்டும் ஆம் #இட்டுகட்டியாதாகவே இருக்கட்டும் நீதிமன்றமும் அரசும் கடுமை காட்டும் போது சம்பந்தபட்டவரிடம் முறையிட்டு பயன்பெறுவோம்..
..
முன்னாள் நீதிபதியின் தாமஸின் குரல் நம்முடையதாகவும் இருக்கட்டும்..
..
Aalanci Spm
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment