Wednesday, November 8, 2017

செல்லாகாசு

சென்ற ஆண்டு இதேநாளில் எழுதியது.. .. 1978 ல் திரு.மொராஜி தேசாய் 5000 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாதென்றார்.. கள்ளபணத்தை ஒழிக்கமுடியவில்லையென காரணம் சொன்னார்.. 78 ல் ₹5000 ₹1000 என்பதெல்லாம் பெரியதொகை சாதாரண மக்களிடம் இருக்காது அதனால் பெரியளவில் தாக்கத்தை /பாதிப்பை தரவில்லை .. ஏறக்குறைய 38 ஆண்டுகள் பின்னிட்டும் கள்ளநோட்டுகளை கள்ளபணத்தை ஒழிக்கமுடியவில்லை.. திரு.மோடி உருக்கமாக பேசி நாட்டுமக்கள் சிரமத்தை பொறுத்துக்கொள்ளவேண்டுமென்கிறார் நன்று சிரமங்கள் சாதாரண இந்தியனுக்கு பழகியதுதான்.. ஏனெனில் அவன் மட்டுமே பாதிக்கபடுகிறான். பெருத்தவர்களுக்கு இதெல்லாம் ஒரு பெரியகாரியமே அல்ல. இந்த நடவடிக்கையால் கள்ளபண புழக்கத்தை இது சரிசெய்துவிடுமா என்றால் இல்லையென்றே பதில் வரும் .. காரணம் பணிவர்த்தனையை இலகுவாக்கியிருக்கிறார்.. ₹2000 நோட்டுகள் அதிகளவில் கடத்த மாற்ற வகை செய்யும் .. ஒரு குறிப்பிட்டகாலத்திற்கு பிறகு சர்வசாதாரணமாக மக்கள் கைகளில் வந்துவிடும்.... வரி ஏய்ப்பு செய்து கள்ளபணமாக வைத்திருப்பார்கள் என நம்புவது எவ்வளவு கிறுக்குத்தனம்.. எலேலோருமே பினாமிகள் பெயரில் சொத்துக்களாக #asset ஆக வைத்திருப்பதே சாத்தியம் அல்லது தங்கங்களாக.. பணமாக வைத்திருக்கமாட்டார்கள் .. நேற்றையதினம் ஏழையும் நடுத்தரமும் தான் தெருவில் நின்றது.. பெரும் முதலைகளை கிரிடிட்கார்டுகளில் காலம்தள்ளுபவர்கள் தெருவிற்கு வரவேண்டிய அவசியமில்லை.. .. இந்த அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்பு சிலருக்கு தெரியுமென்கிறார்கள் அந்த சிலர் யார் நிச்சயமாக நீங்களோ நானோ பக்கத்துவீட்டுபரமசிவனோ அல்ல..#அறியவேண்டியவர்கள்_அறிந்துக்கொண்டார்கள் இந்த நடவடிக்கையால் அம்பானிகளும் அதானிகளும் பாதிக்கபட்டிருப்பார்கள் என நினைத்தால். நாம் தான் கூறுகெட்டவர்கள் அம்பானி வேலைக்காரன் ரிசர்வ் பேங்க் ஆளுனராக இருக்கும் போது காத்து #கருப்புக்கள் அண்டாது.. நேர்மையாக வரிசெலுத்தாதவன் தானாக வந்து வாழ்த்துச்சொல்கிறான்..கருப்பு வெள்ளையும் கலந்து நிற்பவன் .. நம்முன் நடிக்கிறான்.. .. ஒரே நேரத்தில் பில்லியன் கணக்கில் பணம் வங்கியை தேடிவருகிறது இத்தனை பணத்தை யாருக்கெல்லாம் கடனாக தரபோகிறது என்பதை கொஞ்சம் கவனித்தால் இதன் நோக்கம் புரிந்துவிடும். . அம்பானிகளும் அதானிகளும் தொழில் தொடங்க இனி பணத்திற்கு பஞ்சமில்லை...ஜனநாயக நாட்டில் ஜனநாயக வழியில் ஒரு சர்வாதிகாரம்.. நினைத்ததும் முடிக்கலாம்.. ஒன்றுமட்டும் உண்மை.. ஏழைகளில் சேமிப்பு செல்லாகாசானது .. #பெரும்தொழில்அதிபர்கள்_ஆட்சிசெலுத்துகிறார்கள். .. Aalanci Spm

No comments:

Post a Comment