Friday, November 3, 2017
யது கிருஷ்ணன்
யது கிருஷ்ணன்..
இந்த பெயரை கேட்டிருப்பீர்கள் முதல் தலித் அர்ச்சகர்
கேரள இடதுமுன்ணணி அரசு கோவில் அர்ச்சகராக ஒரு பட்டியலினத்தை சேர்ந்த நியமித்தது அப்போதே சிலர் பார்பனர்கள் இனி கேரளா சென்றால் கோவில்களுக்கு செல்லகூடாதென்றெல்லாம் ட்விட் செய்தார்கள்..
இப்போது இவர் கையால் பிரசாதம் வாங்குவதை சில குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் குறிப்பாக பெண்கள் தவிர்த்து அருகிலுள்ள கோவில் பிராமண அர்ச்சகர் கையால் வாங்கி செல்வதாக வருத்தபட்டிருக்கிறார்..
அதாவது அவர் பூஜை செய்யும் நெல்லிக்கனி தேவி கோயிலில் இவரிடம் யாரும் பிரசாதம் வாங்குவதில்லையாம் ..
தேவி கோயிலில் சாமி கும்பிட்டு விட்டு அருகில் இருக்கும் சாஸ்தா கோவில் பிராமணர் அர்ச்சகர் இடம்போய் பிரசாதம் வாங்கி செல்வதாக மிகவும் மனம் வருந்திகூறுகிறார் யது கிருஷ்ணன்..
..
அதிகம் படித்தவர்கள் கொண்ட மாநிலமென்றாலும் முற்போக்கு சிந்தனையுடையவர்கள் அதிகமிருப்பதாக சொல்லிக்கொண்டாலும்.. இன்னமும் மூடபழக்கவழக்கங்களை அதிகம் நம்புகிற அதில் மூழ்கி கிடக்கிற கூட்டம் சற்று அதிகம் அங்கே உண்டு.. எந்தவொரு நிகழ்விற்கும் பணிக்கரை அழைத்து சோலி உருட்டி நேரம் பார்க்கும் அதி முட்டாள்த்தனம் கொண்டவர்கள் அதிகம்.. அதனால் தான் இதுபோன்ற விசமத்தனமான பிரச்சாரங்களை நம்பி யதுவிடம் பிரசாதம் வாங்க யோசிக்கிறார்கள்.. இது மூடத்தனம் மட்டுமல்ல ஒருவகையான யுத்தமும் கூட .. கடவுளின் கருவரைக்குள் காலம்காலமாய் தாங்கள் மட்டுமே ஆட்சி செய்ததை அதுவும் தொட்டாலே தீட்டென்கிறவனை நுழைய விட்டதை ஏற்றுக்கொள்ள மறுத்து இவர்கள் செய்யும் விசமத்தனம் இது .. திட்டமிட்டே குறிப்பாக பெண்களிடத்தில் இவர் கையால் வாங்கினால் அது தோஷம் என்று செய்தியை கசிய விடுகிறார்கள் .. சட்டென்று நம்பிவிடும் பெண்களின் மனநிலையை பயன்படுத்தி
குழப்பம் விளைவிக்கிறார்கள்..
இனியும் இதுபோன்று தலித் நியமனங்கள்
நடக்ககூடாது .. நியமிக்கபட்டவர்களையும் பின்மாற செய்யவேண்டுமென்று சதி செய்கிறார்கள்..
..
அரசு உடனே இதுபோன்று பரப்புரையில் ஈடுபடுவோரை இனம் காண வேண்டும் அவர்கள் மீது தீண்டாமை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யவேண்டும்.. காலகாலமாக ஏமாற்றி பிழைத்த பிழைப்பில் மண் விழுந்துவிட்டதென்றெண்ணி இவர்கள் நடத்தும் நாடகத்தை உலகறிய செய்யவேண்டும்..இனியும் நிறைய பட்டியலின சகோதர்களை அர்ச்சகர்களாக Priests நியமிக்க வேண்டும்..
..
யதுவிற்கு
இதுபோன்று நிறைய சங்கடங்களை தருவார்கள் மறைந்துநின்றே தாக்கி பழக்கமுடையவர்கள் புறவாசல் அரசியல் மட்டுமே செய்ய தெரிந்தவர்கள்..
நேர்நின்ற கதைக்க அஞ்சுகிற கூட்டமது.. ஏற்றதாழ்வுகளை கடவுள் பெயரால் பரப்பி அதில் தாங்கள் மட்டுமே வாழவேண்டுமென நினைக்கிறவர்கள்.. நிறைய அம்புகள் பலதிசையிலிருந்தும் வரும்.. எய்தவன் யாரென்றே தெரியாது.. எதுவாயினும்
தொடர்ந்து பணியாற்று.. ஆம்..
துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு போய் கொண்டே இரு..
..
#இனி_நமது..
..
Aalanci Spm
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment