Tuesday, November 21, 2017
தேவையில்லாத களை
கலைஞர் மீண்டு வந்தால் தமிழகம் மீளும்.. வைரமுத்து..
என்ன சொல்ல வருகிறார்.. கலைஞர் வந்தால் தான் தமிழகம் மீளுமென சொல்லவருகிறாரா..
மேம்போக்காக பார்த்தால் புகழ்வதுபோல் தோன்றும் .. அதற்குள் ஒளிந்துகிடக்கும் நுண்ணரசியல்.. மற்றவர்களை குளிர்விக்க பேசப்பட்ட கருத்தென்பதும் .. ஊரோடு ஒத்துபோவேன் என்கிற சமாளிப்பும் தெரியும்..
..
முதலில் நிகழ்கால அரசியலை உணர்தல் வேண்டும் அல்லது அரசியல் நிகழ்வுகளின் போக்கை அறிந்தவராக இருக்கவேண்டும் மக்களின் எண்ணவோட்டம் எதுவென்பதைப்பற்றிய தெளிவாவது வேண்டும்..
மேடை கிடைக்கிறதென்பதற்கு வாய்ப்பு தந்தவரை புகழ்தலை செவ்வனே செய்பவர் அது அவரின் விரும்பமாக அல்லது தேவையாக இருக்கட்டும்.. நட்டு வச்ச சிலையை வணங்கிவிட்டு போகட்டும் .. #இரத்தகறைகள் அகிம்சையை போதிப்பதாக சொல்லட்டும் அதிலெல்லாம் கவலையில்லை அது அவரின் இயல்பு .. வாய்ப்பு கிடைக்கிறது வார்த்தை வழங்கிநிற்கிறதென்பதற்காக தகுதியின்மையை தரமேறியவை என புகழ்வது எதையோ எதிர்பார்த்து நிற்பவனின் பிதற்றல்..
#காக்கை பருக்கையை தேடுவது எப்படி இயல்போ அதைப்போல .. அவர் புகழட்டும்
அதனால் பயன்பெறட்டும் நமக்கு கவலையில்லை..
பிழைக்கதெரிந்தவன் என ஒதுங்கிப்போவோம்..
ஆனால் கலைஞரோடு முடிந்ததென்ற பலரின் அறுந்த பல்லவியை புதிய சுரத்தில் பாட வருகிறாரே அதை அதை ஏற்கமுடியாது..
..
திராவிட இயக்கம் தன் பரிமாண வளர்ச்சியின் அடுத்த கட்ட நகர்வை திறம்பட செய்துக்கொண்டிருக்கிறது.. நான்காம் தலைமுறையின் தலைவனை தேர்வு செய்திருக்கிறது .. ஓயாமல் உழைத்துக்கொண்டிருக்கும் தோல்வி வெற்றி எதிலும் களைப்படையாத .. அதே உற்சாகத்தோடு உத்வேகத்தோடு பணி செய்து கிடப்பது எமது தலையாய பணியென தொண்டாற்றி.. கொஞ்சம் கொஞ்சமாய் மெருகேற்றிய தலைவனை காலம் தேர்வு செய்திருக்கிறது....
ஆம்.. #தளபதி..
..
கலைஞர் வயதின் மூப்பும் உடல் நலிவும் சிலருக்கு மகிழச்சியை தந்து முடிந்ததென எண்ணி திரிந்தோர் ..மறந்து போனார்கள்.. திராவிடம் இயக்கமென்பதையும் மக்களின் உணர்வோடு கலந்ததென்பதையும்.. திராவிட பெருவுடையார் கலைஞர் இத்தனை ஆண்டுகாலம் எம்மை வழிநடத்தி .. அடுத்தகட்ட நகர்வை நோக்கி எம்மை செலுத்தியிருக்கிறார்..
கலைஞரோடு முடிந்ததென எண்ணினால்.. பெரியோருக்கு பிறகோ அண்ணாவிற்கு பிறகோ முடிந்திருக்கவேண்டும் .. சரியான தலைமை தமிழனுக்கு /தமிழ்நாட்டிற்கு கிடைத்ததால் பலஆண்டுகள் பின்னிட்டும் வலுவோடு நிற்கிறது.. தலைவர்களை தேர்வு செய்து காலம் எமக்களிக்கும்..இன்னும் சில நூறாண்டுகள் எம் இன பகைவரோடு போராட வேண்டியிருக்கிறது..சிறிய வாய்ப்பு கிடைக்காதா என எம்பகைவர் கூட்டம் காத்துக்கிடக்கிறது..சரியான தருணத்தை எதிர்பார்த்து காத்துகிடப்போருக்கு வலிய சென்று உதவும் துரோகிகளை நாம் இனம்கண்டு கொண்டுதானிருக்கிறோம்..அருகிலிருந்தே சங்கறுக்க நினைப்பவனை .. அயர்ந்து தூங்கும் போது கல்லெடுக்கிறவனை நாம் அறிவோம்..
புரிந்துக்கொள்ளுங்கள்..
..
எமது வரலாற்றில் நெடுக
துரோகிகளால் வீழ்த்தபட்டதே அதிகம் ஆனாலும் மீண்டும் மீண்டும் திமிரிதெழுந்து வருகிறோமே புரியவில்லையா.. கும்பலகாக சிலர் வைகோவோடு சென்றபோது கலைஞர் சொன்ன வாசகம் நினைவுக்கு வருகிறது.. #களைகள்_தானாக_கலைகின்றது..
..
#தேவையில்லாத_களை…
..
#கலைந்துபோன_வைகறை_மேகம்..
..
Aalanci Spm
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment