Friday, November 24, 2017

தளபதி..

ஸ்டாலின் மௌனம் சரியானதாக தெரியவில்லை இப்படியொரு விமர்சனம் தொடர்ந்து எழுப்பபடுகிறது.. அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் சின்ன சின்ன லெட்டர்பேட் கட்சிகள் கூட தினம் தினம் அறிக்கை தருகிறார்கள்.. எந்த பிரச்சனையானாலும் முந்திக்கொண்டு கருத்து கெரிவிக்கிறார்கள் 2 விழுக்காடு வாக்கு இல்லாதவர்கள் கூட எதையாவது பேசிக்கொண்டே திரிகிறார்கள் என்கிறார்கள் கூடவே கலைஞர் .. பத்தாண்டுகாலம் எதிர்கட்சியாக இருந்தபோதுகூட தினம் தினம் அறிக்கை உடன்பிறப்பிற்கு கடிதமென உயிரிப்புநிலையிலேயே வைத்திருந்தார்.. .. மேம்போக்காக பார்த்தால் கவலைக்கொள்வதில் நியாயம் கூட கண்டகண்டதெல்லாம் கருத்து சொல்கிறதே .. 46 விழுக்காடுகளுக்குமேல் ஆதரவுள்ள திமுக எந்த விடயத்திலும் கருத்தை கடைசியில் சொல்கிறதே என்ற கவலை புரிகிறது.. சிலரின் பேச்சுகள் மிகப்பெரிய மாற்றத்தை தரும் அரசியலில் சிலரின் கருத்து எதிராளிகளின் செயலை புரட்டிபோடும்.. எந்தவொரு விடயமானாலும் கலைஞரின் கருத்தே சரியானதென காலம் நமக்கு உணர்த்தியுமிருக்கிறது. .. சரி.. .. திரு.ஸ்டாலின் கலைஞரைப்போலில்லை என்கிற வாதம் கேட்டு சலித்தது ..ஸ்டாலின் என்றில்லை யாருமே இங்கே கலைஞர் ஆகமுடியாது கலைஞரின் சாதூர்யம் இந்திய அரசியலில் எவருக்குமில்லை .. எழுத்தும் பேச்சும் அதிலுள் இடையோடும் நையாண்டியும்.. எதிர்த்தடிக்கும் கம்பீரமும் .. எவருக்கும் வராது.. அவரைப்போலில்லை என சொல்லி திசைதிருப்பும் செயலை கடந்துபோவோம்.. .. தளபதி.. நிதானமாக அதே நேரம் நேர்மையோடும் ஒவ்வொரு அடியும் தடுமாற்றமில்லாமல் .. புதியதொரு அரசியல் இலக்கணத்தை தனக்கான வழியை பொய்த்துபோய்விட்ட அல்லது புரையோடிபோய்விட்ட அரசியல் நாகரீகத்தை மீட்டெடுக்கிறார்.. காழ்ப்புணர்ச்சி அரசியலை தொடர்ந்து எம்ஜிஆர் காலம் தொட்டு .. அது ஜெயலலிதா அரசியலில் உக்கிரமடைத்த நிலையில் மெல்ல மெல்ல தன் நாகரீக செயல்பாட்டால் அதை திருத்தி சரியான பாதையை செதுக்கிக்கொண்டிருக்கிறார் நிறைகுடமாக.. .. சிலரைப்போல அல்லாமல் அழகான அரசியல் என்கிற ஜனநாயக பாதையை .. அளவோடு அதேநேரம் கம்பீரமாய் .. தன் கொள்கையில் உறுதியோடு இருக்கிறார் அதனால் தான் s.v சேகர் போன்றவர்கள் நட்பை அரசியலுக்கு பயன்படுத்திய போது தெளிவான அறிக்கை மூலம்.. கொள்கைக்கெதிராக என்னால் செயல்படமுடியாதென்றும் ..நட்பு என்பது வேறு அதை அரசியலோடு போட்டு குழப்பிக்கொள்ளாதீர்களென பொட்டில் அடித்தாற்போல சொல்லமுடிந்தது.. திராவிட இயக்கத்தை எந்த கொம்பனாலும் தொட்டுபார்க்ககூட முடியாதென தெளிவாக சொல்லியிருக்கிறார்.. மோடி வீட்டிற்கு வந்து சென்ற சிலமணிநேரத்திலேயே மத்திய அரசிற்கெதிரான ஆர்ப்பார்ட்டம் என அறிவித்து கலைஞரின் அரசியலை கையிலெடுத்தார்.. .. எப்போதும் பரபரப்பாக பார்த்தே பழகிவிட்ட நம்மால் நிதானமான ஒவ்வொரு அடியையும் ரசிக்கமுடியவில்லை ..ஆனால் நீண்டகால பலன்தரும் என்பதும்..சரியான எதிரியே இல்லாத போது ஏன் கம்பு சுற்றவேண்டும்.. கொண்ட கொள்கையில் உறுதி தெளிவான சிந்தனை .. செல்லும் பாதைபற்றிய அறிவு.. மக்களிடையே நன்மதிப்பும் நம்பிக்கையும் சிறந்ததொரு அரசியல்வாதியாக தம்மை நிலை நிறுத்த காலம் கடந்து பேசபடவேண்டிய நபராக .. திறந்த அரசியல் தலவர்களில் .. கனித்தன்மையோடு கூடிய தலைவர்களில் ஒருவராக தளபதி திகழ்வார்.. .. செதுக்க செதுக்கதான் சிலை கூட மிளிரும்.. தளபதி காலம் செதுக்கிய சிறந்த அரசியல் தலைவர்.. .. Aalanci Spm

No comments:

Post a Comment