Wednesday, November 29, 2017
கண்டவனெல்லாம் புத்தி சொல்லும் நிலைமை
சோ இருந்திருந்தால் தமிழகம் அசிங்கப்
பட்டிருக்காது எஸ்.வி.சேகர்....
..
எப்படி ₹2000 நோட்டில் சிப் இருக்கு சொல்லி அசிங்கபட்டியே அப்படியா.. சோ இருந்தால் உங்களுக்கெல்லாம் ராஜகுருவா இருந்திருப்பார் அவர் சொல்வதை கேட்டு அடங்கி போயிருப்பீர் .. இப்ப இருக்கிற குருமூர்த்தியெல்லாம் உமக்கு சரிபட்டுவரமாட்டா.. புரிகிறது உமது கோவம்..
தலைமைசெயலருக்கு நிகரான அதிகாரத்தை ராஜகோபலுக்கு வழங்கி கவர்னரின் சிறப்பு செயலராக நியமிக்கபட்டபோதே உமது அத்தாச்சியின் யோக்கியதை தெரிகிறது.. தகுதியில்லாமல் பெரிய பொறுப்பை சுமந்து குற்றவாளி படத்தை கையில் பிடித்து நின்றபோது ..எடுபடி வேலைக்குதான் லாயக்கென்று அப்போதே பேசபட்டதுதான்.. இருந்தும் இத்தனைகாலம் இருப்பது பெரியவிடயம்தான்.. அதிகாரபகிர்வு சோ வை நினைக்கவைத்திருக்கிறது ஜெயலலிதா பற்றி வேண்டாத விடயங்களை கசியவிட்டு அதன் பின்னில் அரசியல் செய்வதாக பாஜக மீது விமர்சனம் வருகிறது.. இதில் எந்தளவு உண்மையென தெரியவில்லை எனினும் சோ இருந்திருந்தால் வாய்மூடி பேசியிருப்பீர்..
சோ அல்ல ராஜாஜியை பார்த்துவந்தவர்கள் இன்றைய கேடுகெட்ட அரசு அமைய மிக முக்கியமான காரணர்களில் சோவும் ஒருவர்.. ராஜாஜிக்கு பிறகு வராதுவந்த மாமணி என்று உடல்நிலவுற்றிருந்த போதும் உங்களிடம் யாசித்தவர்தானே.. அதன் பலனைதான் தமிழகம் அனுபவிக்கிறது.. உங்களால் தமிழகமும் தமிழனும் தொடர்ந்து துன்பமடைகிறான்..
எனினும் தங்களின் எண்ணம் ஈடேறாது..
***************************************
கம்பராமாயணம் தந்த "சேக்கிழார்" பிறந்த பூமி தஞ்சை...எடப்பாடி பழநிச்சாமி
அண்ணாவிற்கு அதிகம் புத்தகம் படித்த முதல்வர் எடப்பாடி பழநிசாமியை எண்ணி வியக்கிறேன்..
ஐந்தாம் வகுப்பு குழந்தைக்கு கூட தெரியும் விவரம் எடப்பாடிக்கு தெரியாமல் போனதே .. அதிகம் ஞானம் பெற்று முக்தி அடைந்திருப்பாரோ.. இவர் என்ன மாதிரி புத்தகங்களை படித்திருப்பார் என்கிற
நெருடல் வருகிறது..மேடை கிடைத்தால் எதையாவது பேசிவிட்டு போய்விடலாமென்ற அறிவுசூன்யங்களை எப்படி தயாரித்திருக்கிறார் ஜெயலலிதா .. இந்த வெல்லமண்டியை எப்படி எடப்பாடி மக்கள் தேர்ந்தெடுத்தார்கள்.. தமிழகம் இதுவரை காணத அறிவிலித்தனங்கள் .. அடிமுட்டாள்கள் அமைச்சர்களாக வலம் வரும் கொடுமை ..ஒட்டுமொத்த கமிழகத்தையே தலைக்குனிவிற்கு ஆளாக்கிவைத்திருக்கிறார்களே..
என்ன இவ்வளவு பகை நம்மோடு ஜெயாவிற்கு(ஆரியத்திற்கு)..
மொத்த மடையர்களையும் சிந்திக்கவே விடாமல் வாய்மூடி வைத்திருந்து இதோ பாருங்கள் இதுதான் தமிழர்களின் லட்சணமென பறைசாற்றியிருக்கிறார்கள்.. இதனால்தான் நாங்கள் ஆளவேண்டுமென சொல்கிறோமென நம்மை பார்த்து நகைக்கிறார்கள்..
ஆம்..
பேரறிஞரும் முத்தமிழ்அறிஞரும் ஆட்சி செய்த தமிழகத்தை.. அரிதாரம் பூசி கலர் பவுடரில் கவர்ச்சியை வீசி கவிழ்த்தார்களே அன்று தொடங்கியதல்லவா இந்த ஈனம்.. இன்று வளர்ந்து நிற்கிறது.. காண சகிக்கவில்லை..
கண்டவனெல்லாம் நமக்கு கருத்து சொல்கிறான்
தமிழகம் அசிங்கபட்டிருக்காது என்று ..
என்ன செய்ய மொத்த மடையனையும் வீட்டுக்கு அனுப்புவரை இந்த இழிசொற்களை தாங்கிதான் ஆகவேண்டும்..
..
இப்போது மடைமை எனும் இருள் சூழ்ந்திருக்கிறது..
நிச்சயம் வெளுக்கும்.. அறிவெனும் கதிரவன் தன் கதிரொளியை பாய்ச்சுவான்.. மடைமையெனும் இருள் அகலும்.. அறிவு சுடர்விடும்..
..
#காத்திருப்போம்_கதிரவனுக்காக..
..
Aalanci Spm
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment