Friday, November 10, 2017

லட்சுமி

லட்சுமி.. குறும்படம்.. என்ன சொல்லவருகிறது.நீ சரியா இருந்தா நானும் சரியா இருப்பேன் இல்லைன்னா நானும் அப்படிதான் .. இதுதான் பெண்ணியமென்று இயக்குனருக்கு யாரோ தவறாக சேதி சொல்லியிருக்கிறார்கள் .. ஒருவரின் தனிப்பட்ட உரிமைகளை தலையிட கூடாதென்பதின் அளவுகோல் இதுவல்ல.. .. போக்குவரத்து நிறுத்தபட்டு கட்டியவள் வர முடியாமல் தவிக்கிற போது கூட வந்து அழைத்துச்செல்ல மறுக்கிற கணவரை .. தூக்கியெறிநிது விட்டு நானொன்றும் உன் உணர்ச்சிகளின் வடிகால் இல்லையென .. வாழ்க்கையென்பது புரிதல் ..சமமான உரிமைகளை தருவது என வெளியேறியிருப்பாராயின் .. லட்சுமியை கொண்டாடியிருக்கலாம்.. சாதாரண சக மனிதன் கூட அக்கறையோடு பஸ் ரயில் ஓடல பார்த்து போமா என கூறுகிற நிலையில் எநித கணவனும் அதுக்கென்ன .. என்பதும் எங்கம்மாவீட்டில தங்கிட்டு வரேன் என்றவுடன் காலையில யார் சமைப்பா என்பதும் காலையில சீக்கிரம் வந்திடுறேன் என பதில் சொல்கிற கணவனோடு வாழ்வது வீண் என சொல்லியிருக்கவேண்டும்.. .. அது ஒரு இரவில் பாரதியார் கவிதை சொல்லி .. முற்போக்குத்தனமாக பேசினால்.. எந்த பெண்ணையும் படுக்கைக்கு கொண்டுவந்திடலாம் அவ்வளவு பலவீனமானவளா பெண்.. எத்தனையோ பெண்கள் விடாபிடியாக வென்று காட்டியிருக்கிறார்கள்.. பெண்ணை பலவீனமாக சித்தரிப்பது சினிமாவில் மட்டுமே காணமுடியும் தனியாக சாதித்துகாட்டியிருக்கிற பெண்கள் .. குடும்ப சூழலிலும் அமைதியாக வென்றிருக்கிற எத்தனையோ பெண்மணிகளை அன்றாடம் நாம் பார்க்கிறோம்.. அதேவேளை பெண்ணுக்கு மட்டுமே கற்பெற்கிற நாற்றமடித்த சிந்தனையை ஏற்கமுடியாது.. செக்ஸ் மட்டுமே வாழ்க்கை என்கிற ஒழுக்கமில்லாத வாழ்க்கை வாழ்வது இருவருக்குமே சலிப்பை தரும் .. அதைவிட பொறுப்பற்ற இணையரோடு இருவருமே வாழ்வது ஒருவகை போலித்தனம் .. .. ஒரு குறும்படம் அதிகம் விமர்சிக்கபட்டதும் இப்போதுதானென நினைக்கிறேன் அதிலும் பெண்ணை (லட்சுமி) பரத்தை என்கிற விமர்சிக்கிற சூழல் பக்கா ஆணாதிக்க திமிர்.. ஒரு தவறு (தவறென்போருக்கு) ஒருபெண்ணைப்பற்றி (பாத்திரத்தை ) எடைபோட முடியுமென்பதோ தீர்மானிப்பதோ சரியான அணுகுமுறையல்ல.. சராசரி மனிதனாக கூட நடந்துக்கொள்வதரோடு வாழ்வது ..அல்லது ஒருவரையொருவர் ஏமாற்றிக்கொண்டு வாழ்வதென்பது கடைந்தெடுந்தெடுத்த கயமைத்தனம்.. .. தூக்கியெறிந்து விட்டுவெளியேறியிருந்தால் லட்சுமியை கொண்டாடியிருக்கலாம்.. .. Aalanci Spm

No comments:

Post a Comment