Tuesday, November 7, 2017
மா.நன்னன்
முனைவர்.மா.நன்னன்..
..
பேராசிரியர் முனைவர்.மா.நன்னன்.. நிறைய கற்று தந்தவர் திராவிட இயக்கத்தின் முன்னோடிகளில் அறிவார்ந்த சமூகத்தை கட்டமைக்க பாடுபட்டவர்..
அய்யா அவர்களோடு நிறைய முறை சந்தித்து அளவளாவியிருந்தாலும் இரண்டுமுறை உரையாடிய இனிய அனுபவம் மறக்கமுடியாதவை..
திராவிடர் கழகம் ஜெயலலிதா ஆதரித்து நின்ற போது சந்தித்து கொஞ்சம் கடுமையாக விவாதித்தது நினைவுக்கு வருகிறது.. அப்போது அவர் சொன்ன வார்த்தை இப்போதும் சரியென்றே தோன்றுகிறது.. இங்கே யாரும் பெரியாரில்லை ..எத்தனை ரத்தின சுருக்கமாக சொன்னார் என்பதை இப்போது நினைத்துபார்க்கிறேன்.. சில வரலாற்று தவறுகள் எல்லா இயக்கப்பணியிலும் நடக்கும்.. அதையெல்லாம் மீறி கொள்கை மிளிரும்.. எல்லாவற்றையும் கடந்து போக நம்மை தயார்படுத்தி கொள்ளவேண்டும் என்பார்.. எந்த சூழலிலும் கொள்கை பிறழ் வராமல் பார்த்துக்கொண்டவர்..
..
இரண்டாண்டு முன்பு பெரியார் திடலுக்கு என் மகளோடு சென்றிருந்தேன் மறுநாள் மாட்டிறைச்சியும் மத அரசியலும் என்ற தலைப்பில் ஆசிரியர் உரையாற்றுகிறார்.. முதல் நாளே சில தகவலுக்காக சென்றிந்தபோது பேராசிரியர் வருகை தந்திருந்தார் அவரை ஆனால் சந்திக்க முடியவில்லை.. மறுநாள் ஆசிரியர் உரை முடிந்த பிறகு கூட்டம் கலைந்த பிறகு சந்திக்கலாமென காத்திருந்தேன்.. ஆசிரியரோடு உரையாடிவிட்டு வெளியேறிய சமயத்தில் அருகில் சென்று நலம் விசாரித்தேன் என்னையும் நலம் விசாரித்தார் .. எழுத்தில் கொஞ்சம் கவனம் தேவை என்றார்.. கடும் கோபத்தில் இருக்கும் போது எழுத்தை தவிர் .. எதையாவது வாசி என்றார்.. சிரித்துக்கொண்டே நகர்ந்தேன்..
..
சிலநேரங்களில் கடிதம் மூலம் கோபத்தை காட்டியிருக்கிறேன் மாறனின் தவறான முடிவென்று பாஜகவோடு திமுக கூட்டணி வைத்தபோது எழுதியிருக்கிறேன்.. நம்மை விட அரசியலை அறிந்தவர் கலைஞர் .. நம்பலாமென மறுபடி தந்தார்.. ஆம் கொள்கையை விட்டுகொடுக்காமல் நம்மை நேர்வழிபடுத்துபவர்.. முதன் முதலில் சந்தித்ததும் பெரியார் திடலில் தான் இறுதியாக நான் சந்தித்ததும் பெரியார் திடலில் தான்..
..
இப்போதுகூட நல்ல நினைவாற்றலோடு இருக்கிறேன் இயக்க செயல்பாடுகளுக்கு என்னை பயன்படுத்தி கொள்ளுங்களென தளபதியிடம் சொல்லியிருக்கிறார்.. தமிழை எப்படி உச்சரிக்கவேண்டும்.. நாம் அன்றாடும் பேசும் வழக்கில் கூட வந்துவிடும் தவறுகளையெல்லாம் சரி செய்தவர்.. எழுத்தறிவித்தலில் #நன்னன்_முறையை என்ற புதியமுறையை அறிமுக படுத்தியவர்
தமிழ்கூறும் நல்லுலகம் என்றும் நினைவில் கொள்ளும் ..
..
கடைசி வரை பெரியாரின் பெருந்தொண்டராகவே வாழ்ந்து மறைந்தவர்..
..
போய்வாருங்கள் ஆசானே..
..
Aalanci Spm
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment