Friday, November 3, 2017

எனது உரிமை..

கமல் மீது வழக்கு.. உ.பி. வாரணாசியில் ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். அப்படியென்ன சொல்லிவிட்டார்.. விகடனில் கேரள முதல்வருக்கு எழுதிய செய்தியில் இனி இந்து தீவிரவாதிகளை காட்டுங்களென அவர்களால் இனி சொல்லமுடியாதென கூறியிருக்கிறார்.. அதாவது இந்து தீவிரவாதமும் இருக்கிறதென எழுதியது அவர்களுக்கு கோபத்தை வரவழைத்திருக்கிறது அதனால் அவரை தீவிரவாதியென்றும் தீவிரவாத்திற்கு துணைபோகிறவர் என்றும் அவரிடம் #தேசபக்தர்கள்..? கவனமாக இருக்கவேண்டுமென்றும் பாஜகவினர் சொல்கிறார்கள்.. தேசபக்திக்கு ஒட்டுமொத்த குத்தகையெடுத்தவர்கள்.. .. முதலில் கமலில் கருத்துரிமையை எதிர்க்கிறார்கள் அதோடு மிரட்டுகிறார்கள் அதாவது யாரும் இந்து மதவெறியைப் பற்றி எந்த எதிர்கருத்தும் சொல்லகூடாதென்று அதுமட்டுமல்ல மதத்தை சொல்லி இவர்கள் நடத்தும் கேடுகெட்ட அரசியலை குறைகூற கூடாதென்கிற சர்வாதிகார திமிரும் இதில் வெளிபடுகிறது.. எழுத்துரிமை பேச்சுரிமைக்கெதிராக விடப்பட்டிருக்கும் மிரட்டல் .. தபோல்கர் தொடங்கி கௌரி லங்கேஷ்வரை எதிர்கருத்தாளர்களை கொன்று மற்றவர்களை பேச கூடாதென்கிற மறைமுக மிரட்டலை விடுக்கிற இவர்கள் தீவிரவாதிகள் இல்லையா.. .. கமலின் கருத்தோடு நிறைய வேறுபட்டிருக்கலாம் ஆனால் வழக்கென்றும் தீவிரவாதியாக சித்திரிப்பதும் ஒரு வகை கோழைத்தனம்.. இந்துமதத்தை கேவலபடுத்துவதே கமலுக்கு வேலையாக போய்விட்டதாகவும் கேரள முதல்வரை சந்தித்தின் விளைவு அவர் கம்யூனிஸ்டாக காட்டிக்கொள்ள இப்படி பேசுவதாகவும் .. ₹2000 யில் சிப் இருக்கென்ற மேதை எஸ்.வி.சேகர் .. சுப்ரமணிய சுவாமி.. நாடு கடத்தவேண்டுமென்ற ரேஞ்சுக்கு பேசுகிறார்.. .. ஒன்று மட்டும் புரிகிறது மதத்தை முன்னெடுக்காமல் இவர்களால் ஒரு மயிரும் புடுங்கமுடியாது.. இவர்கள் உண்மையில் ஆட்சி அதிகாரமிருக்கிறதென்பதற்காக எதை செய்தாலும் அதை அப்படியே நம்பவேண்டுமென எண்ணுகிறார்கள்.. அறிவிற்கு வேலை தராது மக்களை சிந்திக்க வைக்காமல் மத நம்பிக்கையென்ற பெயரில் பொய் பித்தலாட்டத்தை மக்களிடம் பரப்பும் இவர்கள் உண்மையிலேயே ஒழிக்கப்படவேண்டியவர்கள்.. இந்துமதம் வாழ்வியல் முறையாம் .. எப்படி தலையில் பிறந்தவன் மட்டுமே வாழ வழிச்சொல்லும் முறை மிக சிறந்த வாழ்வியல் முறையா.. ஏற்றதாழ்வில்லாமல் அனைவரும் சமமான உரிமையோடு வாழ சொல்லாத ஒரு வழிமுறையை எதன் பெயரில் கொண்டுவந்தாலும் அதை எதிர்க்க மட்டுமல்ல பின்பற்றாதீர்களென கூற இங்கே எஸ்லோருக்கும் உரிமை உண்டு.. .. கமலில் கொள்கையில் நமக்கு உடன்பாடில்லையென்றாலும் அவரது கருத்தை புறந்தள்ள முடியாது அவரின் கருத்துரிமையும் கூட.. .. #My_right… .. Aalanci Spm

No comments:

Post a Comment