Saturday, November 4, 2017

காலத்தின் வெகுமதி

கலைஞர் எங்களை கவிதை நயத்தோடு திட்டுவார், ஸ்டாலின் பட்டவர்த்தனமாக திட்டுகிறார்..என்கிறார் அமைச்சர் செல்லூர் ராஜூ. .. கலைஞரின் விமர்சனங்கள் நயத்தோடு இருக்கும் எதிர்ப்பை கடுமையாக அதேவேளை இலக்கிய நயமாக சொல்லிவிடுவார்.. தன் சிலை உடைக்கபட்டபோது கூட .. #செயல்படவிட்டோர் சிரித்து மகிழ்ந்து நின்றாலும் அந்த சின்ன தம்பி என் முதுகில் குத்தவில்லை நெஞ்சில் தான் குத்துகிறான் அதுவரை நிம்மதியெனக்கு என்று பாட முடிந்தது.. .. அதே போல் மகோராவை (எம்ஜிஆரை) மானமிகு வாலியை மறைந்து நின்று தாக்கிய மாண்புமிகு ராமசந்திரனை மாவீரனென்று மகாகவி கம்பனே ஏற்றுக்கொள்ளவில்லையென பாடமுடிந்தது.. .. கவி நயத்தோடு சொற்களை அள்ளி வீசுபவர் கலைஞர் அவரைப்போல இனி யாரும்,இப்படி தனி ராஜாங்கம் நடத்தமுடியுமா என தெரியாது ஆனால் அவர் காட்டிய வழியில் .. அவர் பயிற்சியில் அவரது மேற்பார்வையில் தளபதி வேகமாக செயல்படுகிறாரென்பது அமைச்சரே ஒப்புக்கொண்டிருக்கிறார்.. .. தளபதி விமர்சனங்களை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்வதில்லை .. தனக்களிக்கப்பட்ட வாய்ப்பை மிக சரியாக பயன்படுத்துகிறார் அவசரமில்லாமல் அதே வேளை ஆணித்தரமாக சொல்லவந்ததை சொல்லிவிட்டு போகிறார்.. தளபதியின் வளர்ச்சி சிலருக்கு உறுத்தலாம் ஆனால் காலம் செய்த தேர்வு தளபதி.. அவரைச் சுற்றிதான் இனி தமிழக அரசியல் .. அவரின் கருத்து மட்டுமே இனி அரசியலின் திசையை தீர்மானிக்கும்.. தளபதியை தவிர்த்து ஒரு அரசியல் இனி தமிழகத்தில் இல்லை.. அவரின் கருத்துகள்/பேச்சுகள்/நடவடிக்கைகள் கூர்ந்து கவனிக்கபடுகிறது தமிழகம் காத்து நிற்கிற தலைவராக உருவாகிறார்.. ஆம் யாரும் தலைவராக உருவாக முடியாது அதை காலம் தான் தீர்மானிக்கும் அப்படி காலம் உருவாக்கிய தலைவர்தான் தளபதி அவர்கள்.... .. நிறைய புலம்பல்கள் வரும் அது சாதீய மத உணர்வுகளை தூண்டகூடும்.. இனத்தை மொழியை ஆயுதமாக்கி போரிட முயற்சிக்கும்..பழைய வரலாற்று கசப்புகளை தோண்டியெடுக்கும் எங்கோ எப்போதோ நடந்த சில நிகழ்வுகளை முன்னிலைபடுத்தும்..பிரதான எதிரிகளோடு சேர்ந்து வீழ்த்தலாமெனஆசை கொள்ளும்.. வாரிசு அரசியல் .. திராவிட அரசியல் என்றெல்லாம் கூப்பாடு போடும்.. எப்படியேனும் வீழ்த்திவிட முடியாதா என ஜோதிடம் என்ற பொய்யை பரப்பகூடும்.. இதோ இவரை விட இவரின் பங்காளி சரியான தேர்வு என முடிச்சு போடும்.. இவர் பின்னால் அணிவகுக்கும் சாமானியனை சொறிந்துவிடும்.. ஆனால் இவையாவும் தவிடுபொடியாக்கி. தள்ளிக்களைய வேண்டியவை.. எத்தனை இடையூறுகள் வந்தாலும் அத்தனையும் தாண்டி ..எல்லாவற்றையும் கடந்து நிமிர்ந்து உயர்ந்து நிற்கும் நம் தளபதி #காலத்தின்_கட்டாயம்… .. #தளபதி_காலம்தந்த_பரிசு.. .. Aalanci Spm Mansoor Mohammed

No comments:

Post a Comment