Monday, November 6, 2017

திராவிட பெருவுடையார்

திராவிட பெருவுடையாரை சந்தித்தார் பாரத பிரதமர்.. இன்றைய தினம் மகிழ்ச்சி பெருக்கில்.. காரணம் பிரதமரே வந்து சந்தித்தார் என்பதால் அல்ல.. எங்கே அந்த செய்தி பெரியதொரு விடயமாக பேசபடுமோ தாக்கத்தை தந்திடுமோ என்று கூட யோசித்தேன் ..ஆனால் கலைஞரின் வருகை சில நொடிகளிலேயே வெளியே வந்து தொண்டர்களை மக்களை சந்தித்து கையசைத்தார் பாருங்கள் அங்கே எல்லாம் அடிபட்டு போனது.. அதுதான் கலைஞரின் அரசியல் எதை எப்போது செய்யவேண்டுமென்பதில் எதை செய்தியாக்கி முன்னிலைபடுத்த வேண்டுமென்பதை கலைஞரைப்போல தீர்மானிக்க இந்திய அரசியலில் எவருமே இல்லை.. மோடி வந்து போனதை கூட மறந்து சிரித்து நிற்கிறான் உடன்பிறப்பு.. .. திடீரென பிரதமர் வருவதாக சொன்னதும் சிலர் வேறுமாதிரியான சூழல் உருவாக போகிறதென்றெல்லாம் சொல்லி திரிந்தார்கள்.. ஆண்டவரை தரிசிக்க யார் வேண்டுமானாலும் வரலாம் தரிசனம் பொதுவானது வருகிறவர்களை வரவேற்பதும் வீடு வரை வந்தவரை மரியாதை நிமித்தமாக சந்தித்து உரையாடுவதும் கோபாலபுரத்து பெருவுடையாரின் பழக்கம்.. மோடிக்கு தெரியும் தமிழகம் வருகை பெரிய விளம்பரம் வேண்டுமெனில் .. இதுவரை தம்மை துரத்திக்கொண்டிருக்கிற திராவிட போராளிகள் சத்தத்தை குறைக்கவேண்டுமெனில் பெருவுடையாரை தரிசிப்பதை தவிர வேறுவழியில்லையென்று.. GST , பணமதிப்பிழப்பு ..என..தொடர்ந்து வரும் கடும் கண்டனங்களை எதிர்கொள்ள வேண்டிவருமென்பதால் பெருவுடையாரிடம் சரணாகதியாகி நின்ற காட்சியை ரசிக்க தோன்றியது.. ஆம்.. அவருக்கு புரியும் எந்த சூழலிலும் கொள்கை மாறாத .. போர்க்குணத்தோட படை நடத்தும் இந்த பெருமகனை .. வயோதிகம் ஒன்றும் செய்துவிடாது ..எந்நேரமும் மக்களின் துடிப்பை அறிந்து செயலாற்றும் பெரும் கருவி .. தமிழகம் செய்த பெரும் தவத்தால் கிடைத்த பெருவுடையார்.. அவரை சந்தித்து பாவம் போக்கலாமன்றிருப்பார்கள்.. .. ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தை ஈர்த்த நிகழ்வு.. கலைஞரின் கை அசைவு.. ஒரு கை அசைத்தே கவனத்தை தம் பக்கம் ஈர்க்கமுடியுமென சமிக்கை தந்திருக்கிறார்.. இனியும் சூரியனைச் சுற்றி எதுவுமே நடக்கும் தமிழக அரசியல் இந்த #சூரியனைச்சுற்றித்தான்.. .. #தெற்கிலிருந்தும்_சூரியன்_உதிக்கும் … .. Aalanci Spm

No comments:

Post a Comment