Sunday, November 12, 2017

அரிதாரம் கலையும்

திரைப்பட நடிகர்கள் அரசியல் தலைவராவது நாட்டிற்கு ஏற்படும் பேரழிவு.. நடிகர் பிரகாஷ்ராஜ்.. சரியென்றே,தோன்றுகிறது..காரணம் நிறைய பார்த்துவிட்டோம் எம்ஜிஆர் என்டிஆர் ஜெயலலிதா சிரஞ்சீவி வரை.. சினிமாவை போலவே பொய்களால் கட்டபட்டதால் அவர்கள் தொடர்ந்து வரலாறு நெடுக தவறிழைத்து கொண்டே போனார்கள்.. கவர்ச்சியை மூலதனமாக்கி அன்றைய நிலையை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படுவதால் .. தொலைநோக்கு சிந்தனையோ எதிர்கால நலனைப்பற்றிய அக்கறையோ சிறுதுமின்றி ஆட்சி செய்வார்கள்.. தமிழகம் ஒன்றே போதும்.. எம்ஜிஆர் எனும் மாயையும் ஜெயலலிதாவை தொடர்ந்து வந்தது ஆட்சி முழுக்க கோணலாகவே போனது.. அரசியலுக்கு அறிவுடையோர் தேவையில்லை அடிமைகள் போதும் அல்லது சிந்திக்க தெரியாத சிந்தித்து செயல்படாதோர் போதுமென்ற நிலை உருவாகிவிட்டது.. .. இதோ இப்போது கண்கூடாக பார்க்கிறோமே.. ஜெயலலிதா எத்தனை கேவலமான ஆட்சி செய்திருக்கிறாரென்று .. எல்லாநிலைகளும் மிக மோசமான விளைவுகளை சந்தித்துக்கொண்டிருக்கிறது.. அனுபவம் ஏதுமில்லாமல் ஆசை ஒன்றையே நோக்காக கொண்டதால் தமிழகம் சீரழிவை சந்திக்கிறது.. இந்நிலையில் நடிகர்கள் நாடாள ஆசைபடுவதைதான் பிரகாஷ்ராஜ் விமர்சித்து கருத்துகூறியிருக்கிறார்.. .. சினிமா ரசிகனை .. கவர்ந்திழுக்கும் கைங்கர்யம் அரசியலில் தோல்வியை தந்திருக்கிறது.. என்ன லட்சியத்திற்காக வருகிறார்கள்.. நாட்டை நன்னாக்கவா..இதுவரை எங்கிருந்தார்கள் முகம் சாயம் வெளுக்கும் போது இழந்த மதிப்பை சரிசெய்ய அரசியல் ,பொதுதொண்டென்பது இதுவரை அக்கறையில்லாத தன் நலம் சார்ந்த சுயநலத்தை மட்டுமே நமக்கு சொல்கிறதல்லவா.. மேற்கூரிய இருவருமே அரசியலை தங்களின் சுயலாபத்திற்காக சம்பாதியத்தை உயர்த்திபிடிக்க பயன்படுத்தினார்களே தவிர நிச்சயம் சமூகநலமோ .. நல்லெண்ணமோ சிறுதும் இருந்ததில்லை.. .. இவர்களின் கொள்கை என்ன .. எந்தமாதிரியான செயல்திட்டம் இவர்களிடம் உண்டு ஏதேனும் மக்கள் பணியாற்றியிருக்கிறார்களா.. என்ன காரணத்திற்காக வருகிறார்களென்பதை தெளிவுபடுத்தவேண்டாமா... சினிமாவில் கதைநாயகன் வேசம் கட்டினால் நல்லதை மட்டுமே செய்வானென்ற பழைய கஞ்சியை கொண்டு விருந்துவைக்காதீர் .. இப்போதெல்லாம் ஆண்டி ஹீரோ வே தேவலாம்.. சினிமாவும் கவர்ச்சியும் ரசிகனும் மட்டுமே மூலதனமென்றால் இது எழுபதுகள் அல்ல.. நிழலை நிஜமென்று நம்பி வாய் பிழந்து நின்றது.. இப்போதெல்லாம் வருவதற்குமுன்னே நிறைய எதிர்கேள்விகள் கேட்க தொடங்கிவிட்டார்கள்... இதோ பெருமழைக்காலத்தில் என்ன செய்தீர்கள்.. இருக்குமிடத்தில் கூட மக்களோடு சேர்ந்து அவர்களின் துன்பங்களை கவலையோடு பார்த்தீர்களா.. குளுகுளு அறையில் அமர்ந்துக்கொண்டு அரசியல் செய்வதெல்லாம் மக்கள் ஏற்கமாட்டார்கள்.. ஆம்.. இவர்கள் போன்ற அரிதார பூச்சுக்கள் பேரழிவையே தரும்.. #எச்சரிக்கை.. .. Aalanci Spm

No comments:

Post a Comment