Monday, November 6, 2017

பொதுவுடைமை போலிகள்

அறிவியல் பூர்வமான சமூக விஞ்ஞானமான மார்க்சிய தத்துவமே, இந்தியா சந்திக்கும் சவால்களில் இருந்து விடுதலை அளிக்கும் என இடது கம்யூ தமிழ்மாநில பொதுசெயலர் ஜி.ராமகிருஷ்ணன்.. நூற்றாண்டு பின்னிட்டும் இவர்கள் எங்கே நிற்கிறார்கள் .. இந்தியாவில் இவர்களின் நிலை ஏன் பரிதாபகரமானது அல்லது சுருங்கிப்போனது.. இந்த பொதுவுடமைவாதிகள் எங்கே நிற்கிறார்கள் என்று பாருங்கள் இவர்களின் தத்துவத்திற்கும் செல்வி ஜெயலலிதாவிற்கும் ஏதாவது சம்பந்தம் இருந்ததா ஆனால் அழைக்காமலேயே ஓடிபோய் நின்றார்களே ஏன்.. எந்தவொரு அரசியல் முடிவையும் அன்றைய சூழலை மட்டுமே ஆலோசித்து எடுத்தால் தொலைநோக்கு புதைந்து போகும் அப்படி தொலைநோக்கு சிந்தனையில்லாத திட்டங்களும் செயல்பாடுகளும் பொதுவுடமை சித்தாந்தத்தை புதைத்து விட்டதென எண்ணுகிறேன்.. இந்தியாவில் மார்க்சியம் தோற்று வெகுநாட்களாகிவிட்டது இன்றைய காம்ரேட்களுக்கு தெரியவில்லைபோலும்.. ஏறக்குறைய இருபத்தைந்தாண்டுகள் வங்கத்தை ஆண்ட இவர்களால் மனிதனை மனிதனே இழுக்கும் இழிவிலிருந்து மீட்க முடியவில்லை.. பொலிட்பீரோ என்கிற அதிகாரபீடத்தில் பார்பனர்கள் கையில் இருந்தது/ அவர்கள் அதை வெகு சாமர்த்தியமாக வளரவிடாமல் பார்த்துக்கொண்டார்கள்.. பொதுவுடமை சித்தாந்ததிலிருந்து வெகுவாக விலகி கரைந்து மறைந்து போனார்கள் ... உலகெங்கும் கம்யூனிஸம் வெகுவாக மறைய தொடங்கும் வேளையில் தோழரின் பேச்சு சற்று நகைச்சுவையாக தோன்றுகிறது உலகமயமாக்கல்/தாராளமயமாக்கல் நோக்கிய உலகநாடுகளில் அதிவேக பாய்ச்சல் தொழிலாள வர்க்கத்தை மிகவும் அடிமைத்தனத்திற்கு அல்லது மிருகத்தைவிட கேவலமாக நடத்தபடுகிற நிலைக்குதான் கார்ப்பரேட் நடந்துக்கொண்டிருக்கிறது/நடத்திக்கொண்டிருக்கிறது.. இதை கம்யூனிஸ நாடுகள் கூட பின்பற்ற தொடங்கிவிட்ட காலகட்டத்தில் ராமகிருஷ்ணன் பேசியிருக்கிறார்.. .. இந்திய வர்த்தக சந்தையை குறிவைத்து உலகின் பிரபல கார்பரேட்டுகள் வியாபார அரசியலை செய்துக்கொண்டிருக்கிறார்கள் .. விரும்பியோ விரும்பாமலோ மக்களும் அதை நோக்கி நகர்ந்துக்கொண்டிருக்கும் போது மார்கிசியம் பேசுகிறார்..கொள்கை அரசியலிருந்து பின்னோக்கி பயணிக்கும் ராமகிருஷ்ணனும் சகாக்களும்.. இந்தியாவிற்கு ஏற்றது மார்க்சியம் என்பதை எப்படி எடுத்துக்கொள்வது. கேரளாவில் இடதுசாரிகள் எல்லாம் கார்பரேடுகளோடு கைகுலுக்கி சந்தை செய்கிறார்கள் வங்கத்திலோ புறக்கணிக்கப்பட்டு.. அவர்களின் #தீதியோடு கைகோர்த்துவிட்டார்கள்.. .. இந்தியா சந்திக்கும் மிகப்பெரிய சவால் மதவாதம் ஆனால் மறைமுகமாகவோ நேரடியாகவோ ஆதரிக்கும் சிலரோடு கைகோர்க்கும் கம்யூனிஸ்ட்டுகள் இந்திய சந்திக்கும் சவால்களுக்கும் அதுவும் அறிவியல்பூர்வமான சமூகவிஞ்ஞான பூர்வமான சவால்களுக்கு தங்களின் சித்தாந்தமே சரியென்கிறார்.. இந்தியாவில் தோல்விகண்ட கம்யூனிஸம்.. கம்யூனிஸ்ட் உச்சபட்ச அதிகார மையத்தில்/சபையில் (பொலீட்பீரோ) இருப்பவர்களை /இருந்தவர்களைஒருமுறை கவனித்தாலே போதும் உயர்மட்டத்தில் உயர்வகுப்பினரே ஆட்சி செலுத்துவார்கள் .. பொலீட்பீரோவில் ஒரு பெண் வருவதற்கு கூட விடுதலை அடைந்து 50 ஆண்டுகள் காத்திருக்கவேண்டியிருந்தது.. இவர்கள் பேசும் பொதுவுடமை என்பது #நோக்கு_கூலி ரகம்.. அதிலும் ராமகிருஷ்ணன் போன்றவர்கள் பொதுவுடமையின் போலிகள்.. .. #சாயம்வெளுத்த_செஞ்சட்டைகள்… .. Aalanci Spm

No comments:

Post a Comment