Tuesday, October 31, 2017
கிறுக்கர்கள் கையில் நாடு
மழை பெய்தால் நீர் தேங்கதான் செய்யும் ஜெயகுமார்....
மழை நீர் தேங்காதவண்ணம் அமெரிக்கா லண்டனை விட சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எஸ்.பி.வேலுமணி..
..
இரண்டு அமைச்சர்களுமே தான் தோன்றித்தனமாக பேசி மக்களை கேவலபடுத்தியிருக்கிறார்கள் ஒருவர் மிகைப்படுத்தி பேசி அரசு செயல்படுகிறதென்ற தோற்றத்தை உருவாக்க முயற்சித்தும் ஜெயகுமாரோ முடியாதென முன்னெச்சரிக்கையாக சொல்லி தப்பித்துக்கொள்கிறார் ..
..
அரசுஇயந்திரம் செயல்பட்டு பல மாதங்களாகிறது அதிகாரிகளோ யார் பேச்சை கேட்பதென தெரியாமல் விழிக்கிறார்கள் .. இவர்களுக்கு(அமைச்சர்கள்) இப்போதைய கவலையெல்லாம் எத்தனை காலம் தாக்குபிடிக்கும் அதுவரை எவ்வளவு சேர்க்கமுடியுமென விரைந்து செயல்படுகிறார் காசொன்றே குறியாய்.. எப்படியும் யாருமே நம்மை திரும்ப சட்டமன்றம் அனுப்ப போவதில்லை ஏன் காரியமாய் செயல்படவேண்டுமென நினைத்து ஆளுக்கொரு கருத்தை சொல்லி திசை திருப்புகிறார்கள்..
..
தமிழகம் விவரகேடுகளின் கையில் சிக்கி தத்தளிக்கிறது ஒருவர் கூட அறிவார்ந்து பேசாவிட்டாலும் யதார்த்த உணர்ந்தாவது பேசலாம் எல்லோரையும் சுழியமாகவே வைத்திருந்த ஜெயலலிதா எண்ணி கோபமே வருகிறது.. எல்லோரையும் அடிமைகளாக குனிய வைத்தே பழக்கியதால் நிமிர்ந்து பார்க்கவே அவர்களால் இயலவில்லை.. தமிழகத்தின் உண்மையான நிலையென்ன .. மக்களின் என்னென்ன அவதிக்குள்ளாகிறார்கள் என்றெல்லாம் சிந்திக்கவே இவர்களால் முடியவில்லை..
..
அமெரிக்காவை விட சாலை வசதிகள் உள்ளதாக மத்திய பிரதேச முதல்வர் சொன்னதும் நாங்களென்ன இலுச்சவாயர்களா என்று நம்ம அமைச்சர்களும் உளற ஆரம்பித்துவிட்டார்கள்..
பொய்யர்களின் அடிமைகளால் உண்மை பேசமுடியாது..
..
#கிறுக்கர்கையில்_நாடு
..
Aalanci Spm
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment