Monday, November 13, 2017
திராவிடம் தோற்றதா...
திராவிடயிசம் எங்கே உள்ளது என நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியதை பத்திரிக்கையாளர் Sa Sufiyan நியாயபடுத்தியிருக்கிறார்.. அதற்கு அவர் சொல்லும் காரணம் .. கருணாநிதி குடும்பம் தொடங்கி எம்ஜிஆர் ஜெயலலிதா என எல்லோருமே கோவிலுக்கு போகிறார்கள் என்கிறார் ஜோதிடத்தை நம்புவதாகவும் சாதிய அடிப்படையிலேயே தேர்தலில் வாய்ப்பு வழங்கபடுவதாகவும் சொல்கிறார்.. கூடவே நிர்மலா உண்மையை பேசியிருப்பதாகவும் சப்பைகட்டுகிறார்..
..
முதலில் திராவிட கொள்கை என்பதை கடவுள் மறுப்பிற்குள் சுருக்கபார்க்கும் பார்பனர்களின் பழைய பல்லவியை வேறு சுரத்தில் பாடுகிறார்..
நீதிக்கட்சியின் வளர்ச்சியான திராவிட இயக்கத்தின் மிக முக்கியமான கொள்கை non bhramin பிராமணர் அல்லாதோருக்கான இயக்கம்.. அதாவது கல்வி வேலைவாய்ப்பில் பிராமணர் அல்லாதோருக்கான உரிமையை பெற்று தருதல் அதிலிருந்து வளர்ச்சியை எட்டிய திராவிட இயக்கம் .. பிராமணர்களுக்கெதிராக என்பதையும் தாண்டி.. இடஒதுக்கீடு பெண்ணுரிமை சமதர்மம்.. அனைவருக்குமான சமநீதி..என செயல்பாடுகளை விரிவாக்கியது.. இதற்கெல்லாம் இடைஞ்சல் தருகிற கடவுள் மறுப்பையும் பெரியார் முன்னெடுத்தார்..
..
அதற்காக அவர்கூறும் காரணத்தை கூர்ந்து கவனித்தால் அதிலுள்ள உண்மை புலப்படும்.. இந்த சமூகத்தில் நிலவும் ஏற்றதாழ்வுகளை கலையவேண்டுமென விரும்பினேன் .. அது சாதிய கட்டமைப்புக்குள் இருப்பதை கண்டேன்.. சாதிய மறுப்பை கையிலெடுக்கலாமென்ற போது அது வேதம் சொன்னதென்றார்.. அந்த வேதத்தை கொளுதிதலாமெென்ற போது அது கடவுள் அருளியதென்றார் அந்த கடவுளை எதிர்ப்பதென முடிவுக்கு வந்தேன் எனக்கென்ன கடவுள்மேல் தனிப்பட்ட வெறுப்பா என்றார்...
..
இன்றைய திராவிடம் பேசுவோர் மதநம்பிக்கையில் இருக்கிறார்கள் என்பதை மறுக்கவில்லை .. அவர்களின் தனிப்பட்ட செயல்பாடுகளில் உரிமைகளில் இயக்கம் எப்போதும் இடபடாது ..
அதேவேளை மதவெறியோடு செயல்படுவோருக்கு எதிராகவே எப்போதுமிருக்கும்.. மற்றொரு குற்றசாட்டு சாதி பார்த்து ஆளை நிறுத்துகிறார்கள் என்கிறார்.. மறுக்கவில்லை அந்தந்த பகுதிகளில் வாழும் சமூகத்தின் பிரதிநிதிகளுக்கு வாய்ப்பு வழங்கபடுவது இயல்பான ஒன்று அவர்களுக்குரிய பிரதித்துவம் வேண்டுமென்பதற்காகவே தவிர .. சாதியை தூக்கிபிடிக்கவேண்டுமென்பதற்காக அல்ல.. அப்படி சாதிய சிந்தனையோடு செயல்பட்டிருக்குமாயின் எப்போதோ துடைத்தெறியபட்டிருக்கும்.. இப்போது கூட சாதிய சங்கங்கள் கட்சியை தொடங்கி நடத்திவந்தாலும் அவர்களால் சாதியை சொல்லி வெற்றிபெற முடியவில்லையே.. ஏன்..இங்கே சாதியை தூக்கிப்பிடித்தால் மக்கள் புறக்கணிப்பார்கள்..
மதத்தை கொண்டோ சாதியை மைய்யபடுத்தி இங்கே வெற்றி பெற முடியாமல் போகிறதே .. இதிலிருந்தே திராவிடம் இன்னமும் இங்கே அசைக்கமுடியாத சித்தாந்ததமாய் இருப்பது தெரியவில்லையா..
..
திடீரென்று ஒருநாள் மக்களை சந்திக்காமல் புறவாசல் வழியே அரசியலுக்கு வந்தவருக்கு வேண்டுமானால் இதெல்லாம் தெரியாமல் இருக்கலாம் .. சுபியான் போன்ற ஊடகவியலாளருக்கு தெரியாமல் போனதை ஏற்கமுடியவில்லை..
..
Aalanci Spm
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment