Sunday, November 19, 2017
திராவிட இயக்கம்
கிறுக்கர்களுக்கு பதில் சொல்லதேவையில்லை.. ஆனால் கிறுக்கை தெளிய வைக்கவேண்டுமல்லவா..
..
// அதிமுக அழிந்துவிட்டது திமுகவை அழித்துவிடுவோம் பொன்னர்..
முதல் கூற்றே தவறு அதிமுக அழியவில்லை சிதறியிருக்கிறது சரியான தலைமை இல்லாததால் கண்டவனும் கொண்டவன் போல் பேசுகிற நிலை..
சசிகலா வெளியே வந்தாலோ அல்லது ஒரு மிகப்பெரிய தோல்விக்கு பிறகோ ஒருங்கிணையும் வாய்ப்பு உண்டு காரணம் இன்னமும் அடிமட்டத்தில் ஈரத்தோடு இருக்கிறவர்கள் உண்டு அவர்கள் கொள்கை வழி வந்தவர்கள் இல்லையெனினும். விவரகேடுகள் எனினும் அதிமுக என்ற அமைப்போடு சிநேகம் கொண்டவர்கள் அதனால் சரியான தலைமை கிடைக்குமாயின் உயிர்த்தெழலாம்..
..
திமுக.. சொல்லும் போது எதிரிக்கும் கம்பீரம் தரும் இயக்கம்.. மிசா காலத்திலேயே இன்று நூற்றாண்டு காணும் இரும்பு மனுஷி அசைத்துபார்த்தது தான் எத்தனை ரெய்டுகள்.. கோழைகளை விலைக்கு வாங்கி திமுகவை இல்லாதாக்க நினைத்து கடைசியில் .. எதிர்த்தாலும் தோழமைகொண்டாலும் அதில் உறுதியோடு இருக்கிறவர் கலைஞரென சொன்னார்..
அதற்குமுன்பே..
ராஜாஜியோ மூட்டை பூச்சியைப்போல திமுகவை நசுக்குவேன் என்றார்.. பக்தவச்சலமோ 6000 அடி குழித்தோண்டி புதைப்பேன் என்றார்..திமுகவை இல்லாதாக்குவேன் இந்த 15 பேரும் பங்குபெறும் கடைசி சட்டமன்றம் இதுதானென்றார்..காமராஜர்.. இதையெல்லாம் விட .. கூட இருந்தே குழிபறித்த எம்ஜிஆர் .. திமுகவை சுடுகாட்டிற்கு அனுப்புவேன் .. ஜெயலலிதாவோ கண்னுக்கெட்டிய தூரம் வரை எதிரியை காணோம் என்றார்..
இவையாவும் கொஞ்சமேனும் மக்கள் செல்வாக்கை பெற்றவர்கள் .. இங்கே நாகர்கோவிலை தாண்டி வேறெங்கும் கவுன்சிலராக கூட வரமுடியாத பொன்னர் போன்ற கிறுக்கர்கள் நல்ல மருத்துவரை பார்க்கலாம்..
..
திமுக ஏன் காலங்களை கடந்து நின்று வெற்றிபெறுகிறது.. நிறைய தோல்விகள் அதை தொடர்ந்தும் வெற்றிகள் ஆனாலும் இயக்கம் கட்டுபாடோடு செயல்படுகிறதே என்ன காரணம் ..ஆம் வெளிப்படையான ஜனநாயகம் உட்கட்சி தேர்தலில் வெற்றிபெற்றோரும் தோல்வி அடைந்தவரோ இருவரையும் சமமாக மதிக்கும் தலைமை பண்பு .. எல்லாவற்றிலும் ஜனநாயகதன்மை கொள்கையிலிருந்து பிறழாமை... சில தவறுகள் வந்த போதும் அதை திருத்திக்கொள்கிற நேர்மை அதைவிட தோல்வியிலும் மக்களோடான தொடர்பு .. இவையெல்லாம் திமுகவில் மட்டுமே காண முடியும்..மக்கள்
மிகப்பெரிய தோல்வியை தந்திருப்பார்கள் மறுநாளே சலவை செய்த கட்சி வேட்டியோடு தொண்டன் காணமுடியும் கொஞ்சம் கூட சங்கடபடாமல் கட்சிப்பணியை செய்வான்..
காரணம் தோற்றது அவனோ அவன் கொள்கையோ அல்ல மாறாக மக்களின் அறியாமை..அல்லது அவசரதன்மை என்பதை அறிவான் அதனால்தான் மீண்டும் மீண்டும் மக்களை சந்திக்கமுடிகிறது
..
திராவிட இயக்கத்தின் அரசியல் அமைப்பு
தி.மு.கழகம்..
நேர் கொண்ட நன்னெறியோடு வலம் வர முடிகிறது.. திமுக கட்சி அல்ல
மக்களுக்கான இயக்கம் இது..
இயக்கம் இயங்கிக்கொண்டே இருக்கும் இயற்கைப்போல இயல்பாய்..
திராவிட இயக்கத்தை வீழ்த்த ஏன் தொட்டுபார்க்க எந்த கொம்பனாலும் முடியாது.. காரணம் கொள்கைகளை விதைத்துக்கொண்டே இருக்கிறோம்.. இளைய தலைமுறையிடம் .. ஆம் இயக்கம் இயங்கிக்கொண்டே இருக்கும்..
..
Aalanci Spm
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment