Thursday, November 9, 2017

ரெய்டு

வருமானவரித்துறை ஜெயலலிதா மீது ஒரு வழக்கு பதிவு செய்தது.. பதினெந்தாண்டுகள் வழக்கு நடந்தது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததற்கான ஆவணங்கள்( IT ரெய்டின் போது கிடைத்தது) போதுமானதாக இருக்கிறதென நீதிபதி தீர்ப்பு தேதியை குறிக்கிறார்.. புதிதாக ஒரு மனு வழக்காடுமன்றத்தில் தாக்கல் செய்கிறார் ஜெயலலிதா.. .. அபராதத்தோடு செலுத்தவேண்டிய தொகையையும் அதாவது வருமானத்திற்கதிகமாக சேர்த்த தொகைக்கு வரியையும் செலுத்திவிடுகிறேன் என்கிறார்.. அதாவது திருடிய தொகைக்கு வரியை இதுவரை செலுத்தாதற்கான வட்டி உட்பட அபராதமும் சேர்த்து தருவதாக சொல்கிறார் .. அதை வருமான வரித்துறை ஏற்பதாக சொல்லி வழக்கிலிருந்து ஜெயலலிதா&கோ வை விடுவிக்கிறார்.. .. இவ்வளவுதான்.. இந்திய வருமானவரித்துறையின் லட்சணம் தினகரன் இன்று நாங்கள் பார்க்காத சிறையா என்று பேசமுடிகிறதென்றால் ஜெயலலிதாவிற்கு வழங்கபட்ட சலுகைகள் எல்லோருக்கும் கிடைக்கும் என்ற நம்பிக்கை.. மிடாஸ் நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவராக இருந்தவர் ஜெயா சசிகலா கட்சியைவிட்டு நீக்கபட்டபோது தன் ராஜகுரு சோவை தான் மிடாஸ் இயக்குனராக நியமித்தார்.. சோ வீட்டிற்கு ரெய்டு போகுமா.. .. இதுபோன்ற பரிசோதனைகள் எந்த மாற்றத்தையாவது ஏற்படுத்தியிருக்கிறதா.. முக்கிய ஆவணங்கள் கைபற்றபட்டதாக சொல்வதும் விசாரணைக்கு அழைப்பதும் கைது செய்வதும் தற்காலிகமாக அவர்களின் செயல்பாடுகளை தடையலாமே தவிர வேறொன்றும் பயனிருப்பதாக தெரியவில்லை.. .. இதுவரை IT ரெய்டு எந்த பிராமணராவது சிக்கியிருக்கிறாரா.. சுதந்தர இந்தியாவில் ஆடிட்டர்களில் பெரும்பாலோனர் அவர்கள் தான் எல்லா திருட்டுகளும் அவர்களுக்கு தெரியும் முறையாக அவர்களை விசாரித்தாலே எவ்வளவு கருப்பு என்று புள்ளிவிபரத்தோடு சொல்லிவிட முடியும் இவையெல்லாம் மத்தியில் ஆள்வோர் தங்களின் பகடைக்காக பயன்படுத்துகிறார்களென பட்டவர்த்தனமாக தெரிகிறது.. சேகர்ரெட்டிக்கு பணம்போனதே தெரியாதென சொல்கிற நாட்டில் ரெய்டுகளால் பலனில்லை. .. ரெய்டு குறித்துபொருளாதார நிபுணர் திரு. ஜெயரஞ்சன் அவர்கள் கருப்பு பண ஒழிப்பு தொடர்பாக சுப்ரீம் கோர்ட் SIT (சிறப்பு புலனாய்வு குழு) நியமித்தது அது மோடி ஆட்சிக்கு வந்த நேரம் இறக்குமதி ஏற்றுமதியில் 6000 கோடி ருபாய் அளவிற்கு வருமான ஏய்ப்பு செய்த ஒரு கார்ப்பரேட் அலுவலகத்தில் ரெய்டு நடத்தி விட்டு வருகிறது, அடுத்த சில நாட்களில் டெல்லி சிபிஐ அந்த ரெய்டை நடத்திய அதிகாரியிடம் சோதனை நடத்தி கார்ப்பரேட் அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை கொண்டுபோய் விடுகிறது அந்த சிறப்பு அதிகாரி மாற்றப்படுகிறார்.. இதைதான் இப்போது காண்கிறோம்.. போன ரெய்டுக்கு ஏன் நீங்க வரலன்னு அதிகாரிகளை பார்த்து சசி குடும்பம் கேட்க நிலையில் தான் ரெய்டு.. இத்தனை இடத்தில் ரெய்டா .. என்போருக்கு இவ்வளவிற்கு ஜெயலலிதாவும் ஒரு காரணம் அதை ஏனோ பேச மறுத்து சசி மீதும் மட்டுமே குற்றம் சாட்டுவது ..ஜெ உயிரோடு இருக்கிறவரை தீர்ப்பை சொல்லாமல் செத்தபிறகு தீர்ப்பை சொன்னதை போலதான்.. .. #ரெய்டு_பக்கா_பாஜகஅரசியல்.. .. Aalanci Spm

No comments:

Post a Comment