Thursday, November 30, 2017

மாட்டரசியல்

மாட்டிறைச்சிக்கு விதிக்கபட்ட தடையை நீக்க மத்திய அரசு முடிவு.. மாட்டை வைத்து பாஜக செய்த அரசியல் அயோக்கியத்தனங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல வியாபாரிகள் மாட்டை அறுக்கதான் கொண்டு செல்லவதாக சொல்லி அடித்தே கொன்றதெல்லாம் எந்த கணக்கில் சேர்ப்பது.. வெகுமக்களின் உணவை சிலரின் கொள்கைக்காக தடுத்தது தவறென்று உணர தேர்தல் தேவைபடுகிறது.. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு .. நீதிமன்றங்களில் இவர்களது ஆதிக்கம் அதிகம் ஆனதும் ..சாதாரண மக்களுக்கு கிடைக்க வேண்டிய நீதியை கூட மறுத்தது .. இந்திய அரசியலமைப்பு தந்த உரிமையை கூட மறுத்து கடவுள் மதம் சடங்கு நம்பிக்கையென்ற பொய்யை திரும்ப திரும்ப சொல்லி மக்களை கொன்றது எந்த வகை நியாயம்.. செத்து விழுந்தவன் வெகு சாதாரணமானவன் செல்வாக்குள்ள சாதியிலோ அல்லது மதவெறி கும்பலிலோ இல்லை தினம் தினம் வருவாய் ஈட்டுபவன் .. விவசாயத்திற்கு மாட்டை வாங்கினால் கூட அறுப்பதற்கென்று சொல்லி ..மாடை அறுக்க கொண்டுசெல்கிறான் என்று விசமத்தை பரப்பி மனிதனை அறுத்த கொடூரம் .. விடுதலை இந்தியாவில் பாஜக ஆட்சியில் தான் நடந்தது.. .. ஆரம்பகாலங்களில் ஆரியர்களுக்கு மாடு பிரதான உணவாக இருந்தது மாட்டிறைச்சியை பற்றி பார்பனர்களின் மாபெரும் ரிஷி #யக்ஞவல்கியார் .. "என்னை பொறுத்தவரையில் மாட்டிறைச்சி மிக மென்மையாக இருந்தால்தான் அதை சாப்பிடுவேன் என்கிறார்.. பார்பனர் மாட்டிறைச்சியை உண்பதை விட்டதற்கு காரணத்தை பிரெஞ்ச் வரலாற்று ஆசிரியர் #காபிரியல்_டார்டே சொல்கிறார் .. மேல்தட்டு வகுப்பினரின் பழக்கவழக்கங்களை கீழ்தட்டு மக்கள் பின்பற்றுவர் ஆனால் கீழ்தட்டு மக்களிடம் மாட்டிறைச்சி உண்பது வந்தவுடன் அவர்களை விட தங்களை உயர்ந்தவர்களாக காட்டிக்கொள்ளவே உண்பதை விட்டார்கள் என்கிறார் ..அதனால் தான் மாட்டை உண்ணும் வழக்கத்தை பார்பனர்கள் கைவிட்டார்கள்.. .. Holy Cow in India என்ற புத்தகத்தை எழுதிய டி.என்.ஜா 2001 வெளியிட்டார் அதை இந்திய அரசு தடை செய்தது மீண்டும் 2002 ல் The Myth of the Holy Cow என்ற தலைப்பில் லண்டனில் இருந்து வெளியிட்டார் அதை எரித்து சாம்பலாக்க இந்திய அரசு முயன்றதாக டி.என்.ஜா.வே முன்னுரையில் குற்றம் சாட்டினார் .. அதில் மாட்டுக்கறியை உண்ணும் பழக்கம் பிராமணர்களிடத்தில் இருந்தது ஆனால் முஸ்லீம்கள் இந்தியாவிற்கு வந்தபிறகுதான் மாட்டிறைச்சி வந்ததை போல பேசி.. பசுவை புனிதமாக்க நினைக்கிறார்கள்.. ஆனால் பசுவை பலியிட்டு அந்த உணவை உண்ணும் பழக்கம் இருந்ததாக ரிக் வேதம் சொல்கிறது ...சாதாபாதா பிராமணா என்ற ஆரியர்களில் நூல் மாட்டிறைச்சி மிக சிறந்த உணவு என்கிறது.. .. அண்மையில் எடுக்கபட்ட சர்வே படி குஜராத் 49% பஞ்சாப் 50% உ.பி69% மே.வங்கம்95% ம.பி 61% ஒரிசா95% கேரளா 91% ஆந்திரா 95%தமிழ்நாடு 84% பேர் அசைவ உணவை உண்கிறார்கள் அதாவது அவர்களின் பிரதான உணவாக மாட்டிறைச்சி இருக்கிறது மாமிச உணவில் மிக குறைந்த செலவு கூட மாட்டிறைச்சி தான்.. மக்களின் கோபம் எதிராக போய்விடுமோ என அஞ்சி திடீர் பல்டி அடிக்கிறார்கள்.. குஜராத் தேர்தல் பயத்தில் இன்றைக்கு இந்த முடிவிற்கு வந்திருக்கிறார்கள்.. .. சி.இலட்சுமண அய்யர் மெயில் இதழில் 20.11. 1966 ல் ஆரியர்களுக்கு கடிதம் என்ற பகுதியில் இவ்வாறு எழுதினார்.. நான் இந்து ..புலால் உண்ணாதவன் ஆனால் பசுவை கொல்வதை தடை செய்வதை ஏற்றுக்கொள்ள மாட்டேன் பழங்காலத்திலேயே மாட்டை உண்ணும் பழக்கம் இருந்தது இந்துக்களில் கூட மாமிசம் உண்பவர்கள் இருக்கிறார்கள் மற்ற மதக்காரர்களில் உரிமையில் தலையிடுவதை எப்படி ஏற்க முடியும்.என்கிறார் .. ஆம் மற்றவர்கள் உரிமையில் எப்படி தலையிட முடியும்.. பிடிக்காவிட்டால் சாப்பிடாதே.. என் தட்டில் என்னயிருக்கிறதென்று பார்க்க யாரும் உரிமையில்லை.. எதை உண்ணவேண்டுமென நானே தீர்மானிப்பேன்.. அதை மக்கள் சொல்கிறார்கள் இப்போதுதான் புரிய தொடங்கியிருக்கிறது.. காலம் கடந்த ஞானோதயம் .. #சூழ்ச்சிகள்_வெல்வதில்லை.. .. Aalanci Spm

No comments:

Post a Comment