Monday, November 20, 2017
அறிவிலிக் கூட்டம்
நானும் எப்போதாவது அறிவோடு பேசுவார்களா எம் அமைச்சர்களென பார்க்கிறேன்.. அரசியல் தெரியாதவர்களாக அல்ல அதன் வரலாற்றை கூட அறிந்திராதவர்களாக .. எத்தனை கோமாளித்தனத்தோடு விவரகேடுகளாய் இருக்கிறார்கள்..
முன்பெல்லாம் அரசியல் செய்கிறவர்களின் பேச்சில்
ஆழ்ந்த புரிதலும் .. சரியான விளக்கமும் அவர்கள் பக்கத்து நியாயமும் கூட இருக்கும்... இப்போதெல்லாம் இவர்களை எண்ணி சிரிப்புவருவதற்கு பதிலாக கோபமே வருகிறது.. தமிழக அரசியல்வாதிகளுக்கு வடநாட்டில் இருந்த மரியாதை.. இவரிகளின் பிதற்றலுக்கு பிறகு தமிழக அரசியலே கோமாளித்தனமும் பொய்யும் நிறைந்ததென முடிவுக்கு வருகிறார்கள்..
..
அதிமுக வரவிற்கு பிறகு அரசியலில் பொய் மிக சாதாரணமான விடயமாகிப்போனது .. கவர்ச்சி மூலதனம் கூட ஒரு அளவிற்கு மேல் கொஞ்சமேனும்
அறிவுடையோரை தம் பக்கம் சேர்த்து கொண்டு ஆட்சி செய்திருக்கவேண்டும்.. சில விசயதாரிகளை கைக்குள் வைத்திருக்கவேண்டும் வெறும் தலையாட்டிகளை வைத்துக்கொண்டு அரசியல்செய்ததின் விளைவு ஆளாளுக்கு ஒன்று பேசி திரிகிறார்கள்.. இப்போது கூட கச்சதீவை சர்காரியா கமிஷனுக்கு பயந்து தாரை வார்த்தாரென்கிறார் அமைச்சர்.. 74 ல் தாரை வார்க்கபட்டதை 76 விசாரணையோடு ஒப்பிடுகிறார்.. மற்றொருவர் நிகழ்ச்சியில் பங்குபெறுகிறவர் யாரென்றே தெரியாமல் உளறுகிறார்.. மத்தியிலும் மாநிலத்திலும் சான்றோரை அனுப்பிவைத்த தமிழக மக்கள்.. இப்போது தரம்கெட்டவர்களை அனுப்பி தங்களை தாங்களே இழிவுபடுத்திக்கொண்டார்கள்..
..
சில புள்ளிவிவரங்கள் தெரியாமல் கூட இருக்கலாம் ஆனால் அடிப்படையே தெரியாமல் இருக்கிறார்கள் அதிமுக அமைச்சர்கள்..நல்லவேளை இவர்களையெல்லாம் மத்திய அமைச்சர்களாக்கவில்லை .. இல்லையெனில் நாடே நம்மை காறி துப்பும்.. பொய் பேசுகிற அமைச்சர்கள் தவறான விவரங்களை தருகிறவர்களை பார்த்திருக்கிறோம் ஆனால் இப்போதுதான் அடிமுட்டாள்களை மந்திரிகளாக பார்க்கிறோம்..
..
இது மத்தியிலும் தொடர்கிறது.. துப்பாக்கி சூடு கரையோர காவல்படைக்கு சொந்தமானதில்லையென மத்திய பாதுகாப்பு அமைச்சரே சொல்கிறார்.. குண்டு யாருடையதென்று தெரியவில்லை என்கிறார்.. ஊறுகாய்க்கு உப்பு எவ்வளவு இடுவதென்பதோடு நிறுத்தியிருக்கலாம்.. பாவம் பாதுகாப்பு படாதபாடு படுகிறது.. இப்போதெல்லாம் முட்டாள்தனம் அடிக்கடி நிகழ்வதால் சிரிக்ககூட முடியவதில்லை.. கேவலங்களை கோடியுடுத்தி சிங்காரித்ததால்.. பல்லிளிக்கிறது.. நமது மானம்..
..
மிக சிறந்த விவாதங்களை கேட்டு பலநாட்களாகிறது.. எதிர்கருத்திலும் இருக்கும் நயமான சொற்கள் நம்மை கவர்ந்திழுத்ததெல்லாம் பழங்கதையானது
அறிவுசாந்தோரின் கருத்தாழமிக்க சரியென்கிற விடயங்களை சபை அங்கீகரித்ததெல்லாம் இனி பழையவையாகுமோ.. சான்றோர் அலங்கரித்த சபை இன்று அறிவிலிகளின் கூடாரமாய்.. இவையெல்லாம் அதிமுகவை சில நாணயங்களுக்காக அறியணை ஏற்றியதற்கு பிறகு.. கைதட்டலும் தலையாட்டலும் கூச்சலும் தனிநபர் வக்கிரமங்களும் பழித்தலும் .. கோபத்தை கிளறி சபையை கேலியாக்கியதும்.. புகழ்ந்து புகழ்ந்தே நம்மை அசிங்கபடுத்தியதும் அசிங்கபட்டதும் ..இனியும் தொடரவேண்டுமா..
..
இந்த அறிவிலிக்கூட்டம் விரட்டபடவேண்டும்..நல்லவர்களை நம்பிக்கையோடு உழைப்பவர்களை அறிவின் துணைக்கொண்டு ஆட்சி செய்வோரை இனி தேர்வு செய்வோம்..
நம்பிக்கை தரும் கதிரொளி பரவட்டும்..
..
Aalanci Spm
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment