Tuesday, November 14, 2017

அதிமுக அழியும்

கோவை வளர்ச்சிப்பணிகளை ஆளுநர் ஆய்வு.. தமிழக அரசின் உரிமைகளில் தலையிடுவது அத்துமீறிய செயல் .. .. அதிமுக கட்சியை யாரும் அழிக்க மாட்டார்கள் அவர்களேஅழித்து கொள்வார்கள்-பொன்ராதாகிருஷ்ணன்.. .. அதிமுகவினருக்கு எச்சரிக்கை .. மாநில அரசு நிர்வாகத்தை மக்களால் தேர்தெடுக்கப்பட்டவர்கள் சரியாக செயல்படாத போது இதுபோன்ற மீறல்கள் வருமென்று சப்பைகட்டுவதை விடுத்து கடும்கண்டனத்தை பதிவு செய்யவேண்டும்.. நீங்கள் ஆளாளுக்கு அடித்துக்கொண்டிருப்பதால் உங்கள் இலையில் வேறொருவன் சாப்பிடுகிறான்.. பன்னீரும் எடப்பாடியும் அதிமுகவைப்பற்றியெல்லாம் அக்கறை கொள்ளவில்லை மாறாக இருக்கிறவரை சம்பாதித்துக்கொள்ளவேண்டும் பணம் பதவி இரண்டும் வேண்டும் மாநிலம் எக்கேடுகெட்டால் எனக்கென்ன என்று செயல்படுகிறார்கள்.. பாவம் தமிழக மக்களின் அன்றாட பிரச்சனைகளை கூட செவியேற்பதில்லை/பார்பதில்லை.. கவர்னர் தலையிடுவது கூட அவமானகரமாக தெரியவில்லை புதுவை மாநில முதல்வர் நாராயணின் அவர்களுக்கு இருக்கும் தன்மான உணர்வு கொஞ்சம் கூட இல்லை .. .. பொன்.ராதா வின் பேச்சில் உண்மையில்லாமல் இல்லை அதேவேளை அதிமுகவை அழிக்கும் வேளையை அதிமுககாரர்களை கொண்டே செய்வது பாஜக தான் என்ற உண்மையை மறைக்கமுயலுகிறார்.. மெல்ல கொல்லும் விசம் பாஜக என்பதை அதிமுக உணராதவரை அவர்களின் இலக்கு இலகுவாகும்.. ஆனால் ஒன்றை பாஜக மறைந்து போகிறது இங்கே அதிமுக இருக்குவரைதான் எதையாவது செய்யலாம் அதை இல்லாமல் போனால் பாஜக இருக்குமிடமே தெரியாமல் போகும்.. .. .. ஆசிரியர் வீரமணி சசிகலாவை பின்துணைத்தபோது நான் உட்பட எல்லோருமே ஏன் இப்படி செய்கிறாரென்று சொன்னோம்.. அதன் பொருள் இப்படி புரிகிறது.. பாஜகவின் பிடியில் அதிமுக மாடிடிக்கொண்டு விழிக்கிறது .. இவர்கள் செய்த தவறை மறைக்க அதிமுகவை அடகுவைக்கிறார்கள் இந்த எச்சிலைகள்.. அதிமுக திராவிட இயக்கத்தின் செயல்திட்டங்களை முன்னெடுப்பதில்லை என்றாலும் மாற்று அரசியலுக்கு மக்களுக்கு பயன்பட்டது .. .. சசி குடும்பத்தை குறிவைத்து மத்தியரசு செயல்படுவதிலேயே எந்தளவிற்கு பாஜக பயப்படுகிறதென்பதை புரிந்துக்கொள்ளலாம்.. சாதீய கட்சிகளின் மதவெறியர்களின் கையில் நாடு போகாமல் இருக்கவேணும் அதிமுக என்ற கொள்கையற்ற கட்சி தேவை.. அது பாசிச,சாதிவெறியர்களுக்கு மாற்றாகவாவது இருக்கும்.. .. திமுக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றாலும் அதற்கெதிரான கட்சியாக அதிமுக வரவேண்டுமே தவிர .. சாதி,மத வெறியர்கள் கூட்டமல்ல.. அதிமுகவினர்கள் இப்போது விழித்துக்கொள்ளாவிட்டால் நிறைய சிரமங்களை சந்திப்பார்கள்.. .. #எச்சரிக்கை.. .. Aalanci Spm

No comments:

Post a Comment