Tuesday, January 31, 2017

அவளும் நானும்..

அவளும் நானும்.. எப்படி சொல்வேன்.. அரும்புமீசை வளரும்காலம் காதல் அரும்பிய பொன்நேரம்.... ஆசையா.. ஈர்ப்பா.. அது காதல்தானா.. அறியாமல் அரும்பிய மனம் கவர்ந்த மல்லி.. .. ஆற்றங்கரையில் விரல்உரசி.. நடந்ததெல்லாம்.. வரவை எண்ணி. ஆற்றுபடுகையில் புத்தகத்தால் முகம் மூடி தவமிருந்த மணிதுளிகள்.. மழை நின்று இலை சிந்தும் நீரில் நனைந்து.. இதமாய் இதழ் பதித்த.. நான்..ரசித்த ரசனைக்குரிய நாட்கள்.. .. முதல் காதல்.. முதல் முத்தம்.. முதல் ஸ்பரிசம்.. மறக்கமுடியாத.. காவிரிக்கரை.. அழகிய தென்னந்தோப்பு.. சிறிய குட்டை.. தாமரைக்குளம்.. அமைதியான.. அக்ரஹார கோவில் நிழல்.. சின்ன சிணுங்கல்.. பெரும் மூச்சு.. கருவிழி நாட்டியம்.. என்னை கொன்ற கவிதையது.. மறக்கமுடியுமா.. .. ஒற்றைவரியில்.. மனம் விரும்பிய #கவிதை அவள்.. .. அவளும் நானும்.. .. தோழர் ஆலஞ்சி

என்இனத்தின் தளபதி

தளபதி மிளிர்கிறார்.. மிகவும் பக்குவப்பட்ட உரையாடல்களும் நடத்தையும் அவரை மேலும் மேலும் உயரத்திற்கு கொண்டுவருகிறது.. நாங்கள் தவறுசெய்தால் அதே தவறை நீங்களும் செய்யவேண்டுமா.. என்று சட்டமன்றத்தில் கேட்கிறார்... .. தளபதியாரின் சமீபத்திய நடவடிக்கைகள் கூர்ந்து கவனியுங்கள்.. மிகவும் கண்ணியமான நாகரீக அரசியலை வளர்த்தெடுக்க முற்படுகிறார்.. பேனர்கள் வைக்கவேண்டாமென கட்சியினருக்கு அவர் இட்டிருக்கும் கட்டளை .. முதல்வர் காருக்கு வழிவிட்ட செயல் தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழியில் எதிர்க்கட்சிதலைவராக கலந்துக்கொண்டது குடியரசுதின விழா..ஏன் ஜெயலலிதா பதவியேற்ப்பு என சொல்லிக்கொண்டே போகலாம்.. இவையாவும் முன்பு இல்லையா என கேட்கலாம்.. திரு மகோரா ஆட்சிக்கு பிறகு தான் எதிர்க்கட்சியினரை எதிரியாக பார்க்கும் பழக்கம் வந்தது.. தன் கட்சிகாரர்கள் கலைஞரை சந்தித்து தனிப்பட்ட விடயமாக பேசினால் கூட சந்தேகத்தோடு அவர்களை கட்டம் கட்டும் நடவடிக்கையை எடுத்தார் அதனால் கலைஞர் கூட.. வேணாய்யா..என்னை சந்தித்தால் உன் எதிர்காலம் கேள்விகுறியாகும் என எச்சரிப்பார்.. அந்தளவிற்கு அநாகரீக அரசியலை திரு.மகோரா (எம்ஜிஆர்) விதைத்துவிட்டுபோனார்.. நாளடைவில் அது தொடர்ந்து வெறுப்பை எதிர்கருத்தாளர்கள் மீது செலுத்தும் போக்கை வளர்த்துவிட்டது.. .. ஏதோ இன்றைக்கு தான் ஸ்டாலின் இந்த நல்ல போக்கை கடைப்பிடித்ததாக தோன்றும்..அவரை தொடர்ந்து கவனிக்கறவர்களுக்கு அவரின் பண்பு நன்கு விளங்கும்.. முதல்முதலில் இளைஞர் அணி செயலாளராக பொறுப்பேற்றவுடன் நடந்த முதல் கூட்டம் பாபநாசத்தில் ஏற்பாடு செய்திருந்தோம்.. ஒருமரத்தை நட்டு குடைபோல் மேடை அமைத்திருந்தோம்.. பேசும் போது ஸ்டாலின் என்னை நம்பி இளைஞர்அணி பொறுப்பை தந்திருக்கிறீர்கள் இந்த மேடையை கூட ஒற்றை மரகுடையில் வடிவமைத்து இருக்கிறீர்கள் இங்கு பேசிவர்கள் என்னிடம் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதை சொன்னார்கள்..அவர்களுக்கு ஒன்றை சொல்லிக்கொள்கிறேன்..உங்கள் அனைவரின் ஆதரவு இல்லாமல் என்னால் தனித்து செயல்பட முடியாது உங்கள் துணைக்கொண்டு வெற்றிகரமாக கலைஞரும் பேராசிரியரும் என்னை நம்பி ஒப்படைத்த பொறுப்பை செய்வேன் என உறுதியளிக்கிறேன் என்றார்.. அந்த தன்மைதான் இந்தளவிற்கு உயர்த்தியிருக்கிறது.. இதோ நான்தான் தலைவன் என்றவர்கள் விலாசம் தெரியாமல் போனதற்கு இந்த எளிய பண்பில்லாமல் போனதே காரணம்.. .. தமிழகத்தின் நம்பிக்கை இவர்.. எதிரிகளும் வாயடைத்து போய்நிற்கிற இவரின் செயல்பாடு சரியான தலைமையை காலம் உருவாக்கியிருக்கிறது.. இந்த நேரத்தில் கலைஞருக்கும் பேராசியருக்கும் நன்றிகள்.. மிகசரியான நபரை தேர்வு செய்து வார்த்தெடுத்து செதுக்கி ..இயக்கத்தின் நான்காம் தலைமுறை தலைவனாக்கி தந்திருக்கிறீர்.. நன்றி! நன்றி!! .. #என்இனத்தின்_தளபதி.... .. தோழர் ஆலஞ்சி....

Monday, January 30, 2017

பனை தமிழச்சி..

போராட்டம் செய்த மாணவர்களால் பெண் போலீசார் பாலியல் தொந்தரவிற்கு ஆளானார்கள் தமிழிசை.. நாகரீகமான மொழியில் பதில் சொல்லவேண்டுமென என்னை கட்டுபடுத்திக்கொள்கிறேன்.. சாமியார்கள் லீலைகளை பார்த்து பார்த்து பழகிபோனதால் அவரின் கட்சியை சேர்ந்தவர்கள் சட்டமன்றத்திலேயே பலான படம் பார்க்கிறவர்கள் என்பதால் சிந்தனை அப்படியே இருக்கிறது.. .. மிக நாகரீகமாக நடந்துக்கொள்கிறவர்கள் நம் மாணவர்கள் இன்றைய இளைஞர்கள் மிக தெளிவாக இருக்கிறார்கள்.. போராட்டம் ஆரம்பம் முதலே பெண்கள் குழந்தைகள் என அதிகளவில் கலந்துக்கொண்டார்கள் விடியவிடிய மாணவிகளும் போராட்ட களத்தில் இருந்தார்கள்.. தமிழிசை சொல்வது போல அப்படியொரு சம்பவம் நடந்திருந்தால் அப்போதே வெளிச்சத்திற்கு வந்திருக்கும்.. எதையாவது சொல்லி பிழைக்கவேண்டி இருக்கிறதே இந்த #பனைதமிழச்சிக்கு என்பதை எண்ணும் போது வருத்தமுண்டு இலக்கியச்செல்வரின் #சிறந்தப்பிழை இவர்.. .. பாஜகவின் அஜந்தாவை நடப்பிலாக்க தமிழர்கள் மீதும் அவர்கள் வாழ்வியல்மீதும் கலாச்சார பண்பாட்டின் மீதும் தொடர்ந்து தாக்குதலை நடத்துகிற பாசிசம் அதற்கு தமிழர்களையே பயன்படுத்துகிற பழைய தந்திரத்தைதான் தொடர்ந்து செய்துவருகிறது.. அதில் சிக்கியவர்கள் நம்மை நம் கைக்கொண்டே கண்ணை குத்துகிறார்கள்.. .. பாஜக சங்பரிவார் ஆர்எஸ்எஸ்காரர்களின் காமகளியாட்டங்களை பார்த்து பார்த்து அதை நியாயபடுத்தும் தமிழசை போன்றவர்கள் இப்படிதான் பேசுவார்கள்... அவர்களின் மனம் எப்படியோ அப்படிதான் பார்வை இருக்கும்.. அதனால் அவரை குற்றம் சொல்லி பலனில்லை.. அவர்களுக்கு தெரிந்தவழி அதுமட்டும்.. தமிழிசையில் சுருதிபிழை இவர்.. .. #காமாலைகாரனுக்கு_காண்பதெல்லாம்_மஞ்சள்…… .. தோழர் ஆலஞ்சி....

Sunday, January 29, 2017

ஆர்எஸ்எஸ் பேரணிக்காக ஊரடங்கு உத்தரவு

144 தடை உத்தரவு.. இந்திய அரசிலமைப்பு தந்த உரிமைகளில் எழுத்துரிமை பேச்சுரிமை ஒன்று கூடி போராடும் உரிமை.. ஜனநாயகத்தில் போராட்டம் தவிர்க்க முடியாதது அரசாள்வோர்மீது அதிருப்தி வரும்போது மக்கள் போராடுவது தவிர்க்கமுடியாது.. எதிர்ப்பை அறவழியில் காட்டுவதென்பதும் கருப்புகொடி உண்ணாவிரதம் எதிர்ப்பு முழக்கம் இவையெல்லாம் எல்லா ஆட்சியாளர்கள் மீதும் தொடர்ந்து வந்ததை நாம் கண்டியிருக்கிறோம்.. பிரதமர் நேரு தொடங்கி மன்மோகன் சிங் வரை விமர்சனத்திற்கு ஆளாகதவர்கள் யாருமில்லை.. மாபெரும் போராட்டவடிவான ஒன்றுகூடலில் மோடிக்கெதிரான கோஷங்கள் ஆள்வோரை அச்சபடவைத்திருக்கிறது. அதனால் தேசவிரோதம் என்றெல்லாம் கதைகட்டி கடைசியில் மக்கள் நம்ப மறுத்தவுடன் வேறுவழியின்றி எங்கே மீண்டும் ஒன்றுசேர்ந்து போராட்டத்தை கடுமையாக்கிவிடுவார்களோ என அஞ்சிய அரசு.. கையாலாகாத பொம்மை/பினாமி அரசை வைத்துக்கொண்டு களியாட்டமாடுகிறது..அதில் ஒன்றுதான் பிப்ரவரி12 வரை மெரினாவில் யாரும் போராட தடை.. இது சட்டவிரோதமும் கூட.. .. ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு மட்டும் மெரினா சாலையில் அனுமதி அளித்தது ஏன்.. 144 அவர்களுக்கு பொருந்தாதா.. ஜனநாயக நாட்டில் ஊர்வலத்திற்கு அனுமதி எனில் நாங்களும் ஊர்வலமாய் செல்ல அனுமதிப்பதுதானே முறை.. இதற்கு அரசும் காவல்துறையும் பதில் சொல்லவேண்டும்.. காவிகள் காலூன்ற இந்த பொம்மை அரசு தலையாட்டுகிறது.. இந்த 144 கூட ஆர்எஸ்எஸின்/பாசிசத்தின் எதிர்ப்பாளர்கள் பெருமளவில் கூடிவிடுவார்கள் என்பதால் கூட இருக்கலாம்.. எத்தனை காலம் ஆடுவீர் ஆடுங்கள் .. அடக்குமுறையும் பின்புறத்திலிருந்து இயக்குவதும் வெகுகாலம் நிலைத்திருப்பதில்லை. சர்வாதிகாரமும் அடக்குமுறையும் உலகில் வென்றதில்லை.. #அடக்குமுறையால்எதுவும்_சாதிக்கமுடியாது..… தோழர் ஆலஞ்சி...

Friday, January 27, 2017

எரிச்சல் ஏன்..

ஒரு வாரம் ஊடகங்கள் புறக்கணித்தால்/இருட்டடிப்பு செய்தால் ஸிடாலின் மறைந்து போய்விடுவார்..அன்புமணி.. இவர் இருப்பதே இப்போதுதான் ஞாபகம் வருகிறது.. இது பழைய டெக்னிக் அன்பு மணி வேறு ஏதாவது யோசித்திருக்கலாம்.. முன்பு கலைஞரைப்பற்றி ஏசியோ புகழ்ந்தோ பேசினால் தான் அரசியலில் இருப்பதே தெரியும் அதை அப்பன் சொல்லி மகன் கேட்டிருப்பாரென நினைக்கிறேன்.. .. திரு.ஸ்டாலின் நாளுக்கு நாள் வளர்ந்துக்கொண்டிருக்கிறார் மக்கள் மனதில் அசைக்கமுடியாத நிலையான இடத்தை தன் நடவடிக்கையின் மூலம் தினம் தினம் செய்துக்கொண்டிருக்கிறார்.. அவரின் அரசியல் நாகரீகம் எதிரிகளாலும் பாராட்டபடுகிறது.. நேற்றைய தினம் கூட முதல்வர் வாகனத்திற்கு வழிவிட்ட நேர்மையான அரசியல் எல்லாருடைய புருவங்களையும் உயர்த்தியிருக்கிறது.. இதெல்லாம் இந்த மாதிரியான சிறந்த நாகரீக அரசியல் தாங்கள் அறியாதது தெரிந்ததெல்லாம் இளைஞர்களிடத்தில் சாதி வெறியை வளர்த்து குளிர்காய்வதை தவிர வேறொன்று அறிந்திருக்கவில்லை சாதிவெறி என்ற பயிற்சியை தவிர நல்ல முன்மாதிரிகளை ஸ்டாலினை கண்டு படியுங்கள்.. .. முதலில் ஒருவரை விமர்சிப்பதற்கு முன் அவரின் நடவடிக்கைகள் மக்களிடம் நல்ல பாராட்டை பெற்றிருக்கிறாதா அல்லது விமர்சனத்திற்கு ஆளாகியிருக்கிறதா என்று பாருங்கள்.. அதற்கு முன் விமரிசிக்க தகுதி இருக்கிறதா என்று சுயம் பரிசோதித்து கொள்ளுங்கள்.. மக்களால் பெருவாரியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரதான மிகபிரமாண்டமான இதுவரையில்லாத அளவிற்கு எதிர்க்கட்சியாக இருக்கும் கட்சியின் செயல்தலைவரை.. டெபாசிட் கூட வாங்க வக்கியில்லாதவர் பேசலாமா..என்று எங்களாலும் கேட்க முடியும்... ஆனால் ஒன்று மட்டும் உங்கள் பேச்சினுடே புரிகிறது.. #எரிச்சல் .. வேறொன்றும் இல்லை.. .. #ஆதவனை_கரம்கொண்டு_மறைத்திடமுடியுமா.. .. தோழர் ஆலஞ்சி....

Thursday, January 26, 2017

குடியரசு..

#குடியரசு.... இன்றைய தினம் அண்ணல் அம்பேத்கரின் தினமாக கொண்டாடபடவேண்டும் இந்திய அரசியல் சாசனத்தை ஒழுங்குபடுத்தி வடிவமைத்து தந்தவர்.. சுதந்திர போராட்டத்தில் வெள்ளையருக்கு வெணிசாமரம் வீசியவர்கள்.. அவனை அடிதொழுதவர்கள் அதிகார மையத்தை கைப்பற்றிய பிறகும் அரசியல் சாசன சட்டத்தை வடிவமைக்க இந்த தாழ்த்தப்பட்டவர்தான் கிடைத்தார்.. ராமர்கதையை எழுத வால்மீகி தேவைப்பட்டதைப்போல.. .. இன்றைய தினம் பெருவாரியாக தமிழகமெங்கும் மக்கள் கலந்துக்கொள்ளாத குடியரசுதினமாக கழிந்துக்கொண்டிருக்கிறது.. சென்றவருடம் முகநூலில் தங்கள் ப்ரோபைலில் தேசிய கொடியை வரைந்தவர்களில் 90 விழுக்காடு மௌனமாய் கடந்துச்செல்கிறார்கள்.. குடிமக்களுக்கான அரசாக இல்லாமல் ஒருசில கார்ப்பரேட்களுக்கான அரசாகவும் அவர்களின் தேவைக்காக மக்களை பிழிந்தெடுக்கிற அரசாக அமைந்ததும்.. மத்திய அமைச்சர்கள் கூட மதசார்ப்பின்மைக்கு எதிராக வெளிப்படையாகவே குரல் கொடுப்பதும்..நாடெங்கும் குரங்குகையில் கிடைத்த பூமாலைப்போல திடீரென்று ஒரு இரவு கையில் உள்ள காசெல்லாம் செல்லாது என அறிவித்து நடுதெருவில் நாள்கணக்கில் நிற்கவைத்ததும். அமைதி வழி அறப்போராட்டத்தை தடிக்கொண்டு கலைத்து செயற்கையான ஒரு பதற்றத்தை உருவாக்கியதும் .. போராடினால் இதுதான் கிடைக்குமென.. காவலரே தீவைக்கிற காட்சிகளை கண்டு.. மக்கள் மனதில் மாறாக வடுவை தந்திருக்கிறது சிறிய பிள்ளைகளை கூட தீவிரவாதிகளை தாக்குவதைப்போலதாக்கி ரத்தம் சொட்டசொட்ட ஓட விட்டதும் தமிழர்களை இந்தியத்திலிருந்து சன்னமாய் அறுத்தெடுத்தது.. .. கோமாளிகளும் கூத்தாடிகளும் வீரவசனம் பேசவைத்து தேசபற்றை வளர்த்தெடுக்க அரும்பாடுபட்ட நிலை மிகபெரிய அவலமாய் திரும்பி தாக்குகிறது. இந்த குடியரசு தினம் தமிழர்கள் மனதில் ரணத்தை/கீறலை வரைந்திருக்கிறது. ஆட்சியாளர்கள் அதை சரிசெய்ய வேண்டும் சிறிய கீறல் என விட்டால் அது மிகபெரிய அழிவைதரும்.. அதிகாரமும் பலமும் அடக்குமுறையும் நீண்டநாள் நிலைத்திருந்ததாக வரலாற்றில் எங்குமில்லை..இந்தியா நாடல்ல துணைகண்டம் பல்வேறு இனத்தின் மொழியின் வேர்களால் நிற்கிறது சில வந்தேறிகளின் கலாச்சாரத்தை தொடர்ந்து திணிக்க முற்பட்டால் அது வீங்கிவெடிக்கிற நிலையை ஏற்படுத்தும்.. அண்ணல் அம்பேத்கர் அரசியல்சாசன சட்டத்தை எழுதிமுடித்துவிட்டு சொன்னார் என் கைகளை பிடித்துக்கொண்டு சிலர் எழுதினார்கள்.. இதை கொளுத்தவேண்டுமென்றால் முதல் ஆளாக நான்தான் கொளுத்துவேன் என்றார்.. ஒருசாரராருக்கு மட்டுமே வளைந்து கொடுக்கிற சட்டம் .. ஒற்றுமையை சிதைக்கும்.. .. கொஞ்சமேனும் மற்றவர்களும் வாழ வகைசெய்த சட்டவடிவை தந்த அண்ணல் அம்பத்கரை இந்நாளில் நினைவு கூர்வோம்.. .. குடிமக்களுக்கான அரசாய் #ஒருகுடியரசுவேண்டும்.. .. தோழர் ஆலஞ்சி..

Monday, January 23, 2017

நீறுபூத்த..நெருப்பாய்

அலங்கோலமாய்.. தலைமையில்லா போராட்டம் எதைநோக்கி போகும் என்பதற்கும்.. யாரை நம்பலாம் யாரை நம்பகூடாது என்பதற்கும், திடீரென மாறும் வழிகாட்டிகள் யாரென புரிந்துக்கொள்ளவும் #மெரினா கதை சொல்லியிருக்கிறது.. நாயை கொல்ல முடிவெடுத்துவிட்டால் அதற்கு வெறிப்பிடித்திருக்கிறது என சொல்வதுதான் ராஜீய தந்திரம்.. நேற்றுவரை போராளியாக இருந்தவன் இன்று நக்சலாய், தீவிரவாதியாய் போனான்.. .. தொடர்ந்து ஒரு போராட்டம் எதுவரை சாத்தியமாகுமென அறிந்திராதவர்கள் யாருடைய ஆலோசனையையும் ஏற்க மறுக்கிற செயலும் கரைசேராதே போகும்.. எந்தயொரு போராட்டமும் அரசியலாக்கப்படாமல் போனால் அது சரியான பலனை தராது என்பதை உணருங்கள்.. கையாலாகாத ஆளும் கட்சிக்கு இருக்கிற நிர்பந்தம் மிகப்பெரிய வன்முறைக்கு வழிவகுத்தது.. இந்த நிலையிலும் நிதானம் தவறாமல் இதை ஊதிபெருக்க வழிசெய்யாமல் அமைதிகாத்ததற்கு திமுகவை பாராட்டலாம்.. காலையில் நான் உட்பட சிலர் மெரினாவை நோக்கி ஸ்டாலின் விரைந்திட வேண்டுமென பதிவிட்டோம்.. ஆனால் அப்படி சென்றிருந்தால் கலவரத்தை எதிர்க்கட்சி தூண்டுவதாக அரசுதரப்பு கதைகட்டிவிடும்.. மெரினாவிலிருந்து திருவல்லிக்கேணியை நோக்கி நகர்த்தியதின் பின்னில் சதியிருப்பதாக சொல்லபடுவதிலேயே .. இன்னும் சில ஆர்எஸ்எஸ் காரர்கள் ஐஸ்ஹவுஸ் போலீஸ்நிலையம் எரிக்கப்பட்டதின் பின்னில் தாலிபான் என கதைக்கட்ட தொடங்கியதிலிருந்தே பாசிசம் தமிழகத்தில் மிகப்பெரிய கலவரத்தை தூண்ட எண்ணியிருந்ததும்.. குஜராத் மாடல் போர்களத்தை தமிழகத்தில் நடத்திட எண்ணியதும் அறிந்தே பிரதான அரசியல்கட்சிகள் நிதானம் காத்தன.. திமுக தலைவர் மாணவர்கள் மீது ஏன் தடியடி நடத்தினீர்கள் என சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.. இதோடு முடிந்துவிடவில்லை இன்னமும் போராட்டமிருக்கிறது என்பதை அரசிற்கு உணர்த்தியிருக்கிறார்.. .. மாணவர்கள் இளைஞர்கள் பெண்கள் மீதான கட்டவழித்துவிடப்பட்ட அராஜகத்திற்கு இந்த பொம்மை அரசு பதில் சொல்லியே ஆகவேண்டும்..கலைந்து செல்ல அவகாசம் கேட்டும் வாய்ப்புதராமல் தடியடி நடத்தியதிலிருந்தே #வைத்திகளின் ஆசை நிறைவேறியிருப்பது கண்கூடாக தெரிகிறது..மிகப்பெரிய கலவரமாக மாற்ற நினைத்து பரிவார்களின் எண்ணம் ஈடேறவில்லை.. எங்கள் இளைஞர்களை அடைக்கி ஒடுக்கிவிடலாமென்ற பாசிசம் என்ணுமேயானால் தவறிழைக்கிறீர்.. எச்சரிக்கை.. தமிழர் நெஞ்சில் ஆம்.... எங்கள் உள்ளின் உள்ளில்.. #நீறுபூத்திருக்கிறது_நெருப்பு… .. ஆலஞ்சி மன்சூர்...

Sunday, January 22, 2017

ஆதியின் வேசம் கலைந்தது..

ஆதி நாராயணன் மீது கோவமில்லை.. அவர் அவரிடம் தரப்பட்ட வேலையை சரியாக செய்துவிட்டு ஒதுங்கிக்கொள்கிறார்.. ஹிப் ஹாப் ஆதி.. இந்த போராடிடத்தை வடிவமைத்தவர்கள் மக்களிடையை பிரிவினையை உண்டாக்கி மதத்தை புகுந்தி சாதீய தீண்டலை செய்து பாலியல் தொல்லைகள் தந்து அதை வைத்து காவி கொடியை ஏற்றலாமென்ற அஜந்தா தமிழர்களின் ஒட்டுமோத்த நம்பிக்கையால் ஒற்றுமையால் சிதைந்துப்போனது மெல்ல விசத்தை பாய்ச்சினார்கள் முஸ்லிம்களுக்கு ஜல்லிக்கட்டிற்கு என்ன சம்பந்தம் என்றார் ராசா கூடவே மாட்டிறைச்சி திங்கிறவர்களுக்கு மாட்டின்மீதேன் அக்கறையென்றார்.. கடைசியில் எல்லாம் வெளுத்துப்போனது.. பின் ஜாதியை சொல்ல திருமாவையும் கிருஷ்ணசாமியையும் கொண்டுவந்தார்கள் மசியவில்லை வழக்கம் போல் வைகோவை வேவுபார்க்க வைத்து .. மாணவர் போராட்டம் வீண் என்றெல்லாம் பேசவைத்தார்கள்..சீமானை கூட களமிறக்கினார்கள்.. கை மீறி போவது கண்டு நாடகமாட தொடங்கினார்கள்.. நடிகனெல்லாம் வந்து நடித்துவிட்டு போனான்..ஆனால் தமிழன் மதத்தை தூக்கியெறிந்தான் ஜாதியை வேண்டாமென வைத்தான்.. பண்பாட்டில் உயர்ந்து நின்று எம் கலாச்சாரத்தை அழித்தொழிக்க நினைக்கும் பாசிச சக்திகளை இனம் கண்டான்.. .. இனி.. செய்வதறியாது.. தங்களுக்கு உரித்தான பிரித்தாளும் சூழிச்சியை கையிலெடுக்கிறார்கள்..அப்படிதான் அவர்களின் #ஆதியை திரும்ப அழைத்துக்கொண்டார்கள்.. .. அரசியல் கட்சிகளே வரவேண்டாம் என்பதாலேயே திமுக உள்ளே வரவில்லையே தவிர... உணர்வாளர்களாய் கலாச்சாரத்தை பண்பாட்டை காக்க வெகு திராவிடர்கள் களத்தில் இருக்க கண்டிருப்பீர்.. கட்சி சாயமின்றி உணர்வால் கலந்துக்கொண்டவர்கள் ஏராளம் கொடி பிடித்து வரவில்லையே தவிர கருஞ்சட்டையோடு வலம் வந்தோம்.. எங்கே பாசிச சக்திகள் கையிலெடுத்து மிகப்பெரிய கலவரத்தை உண்டாக்கி விடுவார்களோ என்ற அச்சத்தில் கவனமாக அமைதியாக செயல்பட்டோம்.. .. அலங்காநல்லூரில் மூர்த்தியும் சென்னையில் ராதா கிருஷ்ணனும் போராட்டத்தை செம்மையாக நெறிப்படுத்தியதால் தான் போராட்டம் இந்த அரசுகளை ஆட்டிவைத்தது.. ஆளும் அரசுக்கெதிராக மக்களின் கோவத்தை சரியான திசையில் பயணிக்க செய்தது.. இப்போது சிலர் ஊடகங்கள் வாயிலாக இனி அரசு பார்த்துக்கொள்ளும் முலாம்பூச வருகிறார்கள்..சற்று உற்றுநோக்கி பாருங்கள் அவர்கள் அவாள்களாக காட்சி தருவார்கள்.. ராகவனும், ராசாவும் நாராயணனும் காட்சி தந்து உபதேசிப்பார்கள்.. .. நெறிபடுத்தப்பட்ட எந்த செயலும் வெற்றிகாணமல் இருந்ததில்லை.. .. எண்ணித் துணிக கருமம் ..என்றான் வள்ளுவன்.. #வீழ்வதில்லை_இனி... .. ஆலஞ்சி மன்சூர்

அசாதாரண சூழல்

இன்றைய அசாதாரண சூழ்நிலைக்கு யார்காரணம்.. இந்த அரசும் ஆளும் தலைமையும் தானே.. எதை எப்படி செய்து முடிக்கவேண்டுமென்ற சுயசிந்தனையில்லாமல் பதவிஆசையில் யார் சொன்னாலும் தலையாட்டியாக இருந்ததுதானே காரணம்.. மக்கள் உணர்வை நீண்டகாலம் ஆறபோட்டுவிடலாமென்று எண்ணியதுதானே இன்றைய பெரும் எழுச்சிக்குகாரணம்.. கடந்த ஜெயலலிதா ஆட்சியிலும் இப்போதை யாருக்கு அதிகாரமென்று தெரியாத பொம்மை ஆட்சியிலும் ஜல்லிக்கட்டு மறுக்கப்பட்டு வந்ததே .. #எதிரிக்கட்சி_தலைமை மெல்ல தட்டி எழுப்பியபோதே புரிந்திருக்குமே.. திரு.பன்னீர் அவர்களே.. ஒரே வழி மட்டுமே உங்கள் முன்னால் இருக்கிறது தற்காலிகமாக கவர்னர் ஆட்சிக்கு பரிந்துரையுங்கள் வேறு மார்க்கமில்லை.. Dissolve the government.. அதாவது அரசாங்கத்தை மட்டும் கலைத்துவிட்டு சட்டமன்றத்தை கலைக்காமல் இருக்கலாம் .. .. தற்காலிக தீர்வை மறுத்து அலங்காநல்லூரில் வழியை தடைந்து முதல்வரே செல்லமுடியாமல் செய்த அறவழி போராட்டம் சரித்திரத்தில் இடம்பெற்றது.. ஆரம்பம் முதலே பன்னீரின் அரசு மோடிக்கு வக்காலத்து வாங்கியது மிகப்பெரிய பலவீனமாகிப்போனது.. என்ன செய்திருக்கவேண்டும் பிரதான எதிர்க்கட்சிகளை கலந்தாலோசித்து மாணவர் பிரதிகளையும் உள்ளடக்கி தீர்மானம் எடுத்திருக்கவேண்டாமா.. ஆளாளுக்கு கருத்தை பதிவு செய்து மாணவர் முதல் முதியவர் வரை எல்லோரையும் போரட்டத்தில் கலந்து கொள்ள செய்த போராட்டம் மக்களின் வெற்றியாக பார்த்த #மெரினாபுரட்சி என்ற திமுக எங்கே.. சின்னம்மாவின் சீரிய முயற்சியென்ற அதிமுக எங்கே.. .. ஜனநாயக மரபுகளை காற்றில் பறக்கவிட்டு ஆறேழாண்டாய் அடிமைத்தன சிந்தனையோடு சுயமிழந்து நின்று தமிழனித்தையே தலைகுனிய செய்ததின் பலன் இப்போதுதான் வீரமறவர் தமிழரென பெருந்தீயாய் சுட்டெரிக்கிறது.. இன்னும் பொசுக்கவேண்டியது நிறைய இருக்கிறது.. இன பகைவர் முன் கைக்கட்டி நிற்கிற கேவலத்திலிருந்து மாறி மரியாதையோடு வலம் வர திரு.பன்னீர் அவர்களே.. அரசை கலைக்க பரிந்துரையுங்கள்.. .. இனியாவது மக்கள் சுயமாய் தேர்வு செய்யட்டும்.. தங்களுக்கு எல்லா காலகட்டத்திலும் துணை நிற்பவரென்று நம்புகிற #யாரையேனும். .. ஆலஞ்சி மன்சூர்...

Friday, January 20, 2017

அவர்கள் ஆயுதம்..

ப்ரீ செக்ஸ் என்றால் கூட 50 ஆயிரம் பேர் கூடுவார்கள் திருமதி ராதா ராஜன்.. இவர் மீது கோவம் வரவில்லை அவருக்கு தெரிந்ததை அவர் சொல்கிறார்.. ஏற்கனவே சொல்லியதுதான்.. திறக்கப்படாத கதவுகளும், மடிக்கப்படாத விரிப்புகளும் தான் அவர்கள் ஆயுதம்.. .. இதுதான் அவர்களின் ஆயுதம் எச்.ராசா கூட சேலத்து விக்னேஷ் ரயில் மறியலில் காயம்பட்டதை கூட மத மோதலை உண்டுபண்ண முடுயுமா என்று பார்க்கிறார்.. இவர்களின் நிஜ முகம் இதுதான்.. பீட்டாவை இந்தியாவில் அனுமதித்து அப்போதைய உள்துறை அமைச்சராக இருந்த திரு.எல்.கே. அத்வானி அவர்கள் பேசும் மிருகவதையை தடுப்பதற்கும் மிருகங்களின் நலனும் பாதுகாக்க பட பீட்டா துணை புரியுமென்றார்.. அப்போதே சில அமைப்புகளும் திராவிடர்கழகமும் இதை எதிர்த்தது.. பீட்டாவின் செயல் அதிகாரிகளாய் முழுக்க முழுக்க பார்பனர் நியமிக்கப்பட்டபோதே அச்சத்தை பதிவு செய்தது.. பல இனங்கள் வாழும் நாட்டில் ஒரே ஒரு இனம் மட்டும் நம்பி பீட்டாவின் செயல்பாடுகள் இருந்ததன.. மற்ற இனத்தின் கலாச்சாரத்தை பண்பாட்டை சிதைக்க பீட்டாவை பயன்படுத்துயது ஆர்எஸ்எஸ்.. .. தமிழனின் உணர்வோடு இவர்கள் விளையாடியது வினையாகி போகுமென அறியாமல் போனார்கள்.. தமிழ்நாட்டில் தொடர்ந்து இவர்களின் வேலை எதுவும் எடுபடாமல் போனதன் விளைவால் நமது பண்பாட்டை சிதைக்க துணிந்து செயல்பட்டு மிருகவதையை காரணம்காட்டினார்கள்.. ஜல்லிக்கட்டல்ல இவர்கள் பிரச்சனை .. ஒரு இனத்தை அழிக்க அதன் கலாச்சாரத்தை சிதைத்திட வேண்டுமென்ற ஒற்றை நோக்கம் மட்டுமே இருந்தது.. ஜல்லிக்கட்டுக்குள் ஜாதி இருக்கிறது மதமிருக்கிறது என்றெல்லாம் காரணம் சொன்னார்கள்.. #ராவுத்தர் வீட்டிலிருந்தும் வாடிவாசலுக்கு காளைகள் வருமென்பதை மறந்து போனார்கள்.. .. திருமதி ராதா ராசா..போன்றவர்கள் திராவிட இனத்தின் மீதான தாக்குதலை தொடர்ந்து கொண்டுதான் இருப்பார்கள் அது அவர்கள் இயல்பு.. அவர்களை புறக்கணித்து நாம் ஒன்றுப்பட்டால் நம்மை வீழ்த்த எவருமில்லை புரிந்துக்கொள்ளுங்கள்.. நம் பலவீனம் பிரிந்துகிடப்பதே.. #சாதிமதத்தைகடந்து_ஒன்றுபடுவோம் .. ஆலஞ்சி மன்சூர்...

Thursday, January 19, 2017

தேவை அவசரசட்டம்

Hot topic.. சூடான செய்திகள்.. ஜல்லிக்கட்டு போராட்டம் நாம் தமிழர்க்கட்சி சீமான் தனியாக போராட்டம் என்கிறார். திமுக நீட் தேர்விற்கு எதிரான போராட்டத்தை மாணவர்கள் உணர்விற்கு மதிப்பளித்து மாற்றிவைக்கிறது.. மோடி அவசரசட்டம் இயற்ற வழியில்லையென்கிறார்.. .. முப்பதுக்கு மேற்ப்பட்ட அமைப்புகளின் கீழ் மெரினாவில் மாணவர்கள் குவிந்திருக்கிறார்.. தமிழகமெங்கும் மாணவர் தன்னார்வத்தோடு திரண்டிருக்கிறார்கள்.. ஏன் இதை பதிவு செய்கிறேன் எனில் மாணவர் போராட்டம் சரியான திசையில் பயணிக்கிறது அதை மடைமாற்ற சீமான் போன்றவர்கள் தனிஆவர்த்தனம் செய்கிறார்கள் தரகர் வைகோ மாணவர்கள் போராட்டத்தால் பயனில்லை என்கிறார் .. ஈழத்தமிழ் வியாபாரிகள் திருமுருகன் போன்றோர் நழுவுகிறார்கள் மற்றவர்களின் பேச்சையே காணோம்.. அவர்களுக்கெல்லாம் நோக்கம் உணர்வல்ல மாறாக சம்பாதிக்கவேண்டும் இங்கே எதுவும் தேறாது என்பதால் மாறி நிற்கிறார்கள்.. .. திமுக நீட்தேர்விற்கான போராட்டத்தை ஒத்திவைத்துவிட்டு மாணவர் போராட்டத்தின் நோக்கம் சிதையாமல் உதவுகிறது ஆனால் அதிமுகவினரும் பாஜகவினரும் மாறி மாறி கையை காட்டிக்கொண்டு ஒருவரையொருவர் குற்றம் சாட்டியும் தங்களின் நடவடிக்கைக்கு துணைநிற்பதாக சொல்லி நழுவுகிறார்கள் அதுமட்டுமல்ல.. முதல்வரை தனிப்பட்ட முறையில் கிண்டல் செய்து பதாகைகள் .. இது எந்தவகையான போராட்டமென தெரியவில்லை.. ஒருமாணவர் எங்களுக்கு அவசரசட்டம் வேணாம் எங்களுக்கு எங்கள் உரிமை நிலைநாட்டபடவேண்டுமென்கிறார்.. இதெல்லாம் தெளிவில்லாமை திட்டமிடப்படாததால் வந்தது. .. அரசியல்வாதிகள் வேண்டாமென்பது சரி ஆனால் இந்த போராட்டம் அரசியல் ஆக்கபடவேண்டும் இல்லையேல் உயிர்தெழாமல் முடங்கி போகும் அல்லது முடக்கப்படும். முப்பதற்கு மேற்பட்ட மாணவர் அமைப்புகள் ஒருங்கிணைக்கபடவேண்டும்..போராட்டம் இன்னமும் செறிவூட்டப்படவில்லை Concentration.. மாறாக திசைக்கொன்றாக மாறி வீச தொடங்கியிருக்கிறது எச்சரிக்கை.. மிக எளிதில் பலவீனமடைய போதுமானவையாக இருக்கிறது தற்போதைய நிகழ்வுகள் .. 2009 ல் திமுக அவசர சட்டமியற்றி அதை அரசிதழில் வெளியிட்டது அதேபோல் மீண்டும் சட்டமியற்றி அரசிதழில் வெளியிடலாம்.. சினிமாகாரர்களும் ஈழவியாபாரிகளும்,செல்பி எடுப்பதற்காக வந்த பெருந்தகைகளையும் முதலில் புறக்கணியுங்கள்.. சரியான நேரமிது தவறினால்.. தமிழகம் மிகப்பெரிய இழப்பை சந்திக்கநேரிடும்.. .. #ஜல்லிக்கட்டு_எமதுபண்பாடு… .. ஆலஞ்சி மன்சூர்

Monday, January 16, 2017

எம்ஜிஆர் நூற்றாண்டு..

எம்ஜிஆர் நூறாவது பிறந்த தினம்.. .. யார் இந்த எம்ஜிஆர்.. அவரின் மறுபக்கத்தை மிக சுவாரஸ்மாக ரசிக்கலாம்.. வெளிப்புற தோற்றம் அழகால் ஆனது ஆனால் உட்புறமோ.. வேறெங்கும் விடைதேட தேவையில்லை.. திரு.ஜேப்பியார் சொன்ன விடயம் ஒன்றே போதும் எம்ஜிஆர் என்னிடம் திரு சோபன்பாபு கஸ்டடியில் இருக்கிறார் அவரை அழைத்துவரவேண்டுமென பணித்தார் நான் தான் அவரை மிரட்டி அழைத்து ஒரு இரவு என்னோடு வைத்திருந்து பொன்மன செம்மலிடம் ஒப்படைத்தேன் ‍. ஜெயலலிதாவை குடும்ப வாழ்விற்குள் செல்லவிடாமல் அழுத்தம் தந்து கடைசிவரை ஜெயித்தவர் மகோரா.. .. இன்றைய தினம் நூற்றாண்டு அவரை புகழ்ந்து போலித்தனமாக எழுத இயலவில்லை.. இன்றைய தமிழர்களின் சங்கடங்களுக்கு காரணியாக இருந்தவர் எந்த தொலைநோக்குமில்லாத மனிதர்களை ஏழைகளாக வைத்திருக்கவேண்டுமென்று நினைத்தவர்.. சுயசிந்தனையற்றவர்களாக சினிமாத்தனத்திலேயே தமிழ்மக்களை மாயவலையிலேயே வைத்திருந்தவர்.. திராவிடர்களை தமிழர்களை ஆரியர்களின் கைகளுக்குள் மீண்டும் கொண்டுசேர்த்தவர்.. இவர்களின் கைபாவையாகவே கடைசிவரை இருந்தார்.. இந்திராவின் சாவும் அவரது நோவும் கடைசியில் கைகொடுத்தது.. மீண்டும் மீண்டும் ஆட்சியில் அமர.. அப்போது கூட சிறந்த திட்டங்களை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் திட்டங்கள் செயல்படுத்தவில்லை.. .. ஆனால் தொடர் வெற்றியை பெறும் வித்தை அறிந்திருந்தார்.. அதனால் தான் கடைசிவரை காங்கிரஸை கைவிடாமலேயே அவர்களின் பாட்டிற்கு ஆடினார்.. தமிழகத்தின் ஒரளவு நாகரீக அரசியல் செய்திருந்தாலும் காழ்புணர்வு அரசியல் வர காரணமாக இருந்தவர்.. அவரை புகழ்ந்தவர்களுக்கு நம்பிக்கையானவராக இதயக்கனியாக இருந்தார் என்பதை மறுக்க முடியாது. .. அரசியலில் அவரது பயணம் விமர்சனத்திற்கு உரியதென்றாலும் சினிமா நடிகனாக மிகப்பெரிய வெற்றியை தன்னிடம் மட்டுமே வைத்திருந்தவர் தமிழ்சினிமா ரசிகனின் மனநிலையை அறிந்து செயல்பட்டவர் எம்ஜிஆர் பார்முலா இன்றுவரை வெற்றிபெறுகிறதே அதிலிருந்தே மறைக்கமுடியாத சினிமாகலைஞராக நூற்றாண்டு பின்னிட்டும் திகழ்கிறார்.. நல்ல நடிகனா சிறந்த நடிகனா என்பதைவிட #வெற்றி_நடிகர் என்று அழைக்கலாம் தமிழ்சினிமா வரலாற்றை யாரை மறுத்து மறந்து எழுதினாலும் மகோரா எனும் எம்ஜிஆரை மறுத்தோ/மறந்தோ எழுதிவிடமுடியாது.. .. #தமிழ்சினிமாரசிகனின்_இதயக்கனி... .. ஆலஞ்சி மன்சூர்....

முகவர்/தரகர்

தன் முழுநேர பணியாக இடைதரகர் வேலையை செய்வதென்று தீர்மானித்திருக்கிறார் வைகோ.. டெல்லி சென்று சில தலைவர்களை சந்திருக்கிறார்..மன்னார்குடி நடராசன் டெல்லியில் சிலரை சந்திப்பதற்கு #பேருதவி செய்திருப்பதாக செய்திகள் வருகின்றன.. இந்த தொழில்தான் இவருக்கு சரிபட்டுவருமென நினைக்கிறேன்.. ஏனெனில் அரசியலில் எல்லாம் இழந்து மானம் மரியாதை பதவி செல்வாக்கு என எல்லாம் இழந்து நடுதெருவிற்கு வந்துவிட்டபிறகு இவர் எடுத்திருக்கிற அடுத்த வேசம் சரியாக அமைந்திருக்கிறது.. முகவர்/இடைதரகர்... .. திடீரென எம்ஜிஆரின் மீதான பாசம் இவரின் அடிக்கடி மாறும் பழக்கதோசத்திற்கு எடுத்துகாட்டு எம்ஜிஆர் என்னை அதிமுகவிற்கு அழைத்தார் என்றார்.. எம்ஜிஆர் யாரைதான் அழைக்கவில்லை பொருளாளர் சாதிக் பாட்சா வை கூட அழைத்தார் அப்போது சாதிக் ..அவர்கள் நான் சாதிக் என்றார் உண்மையான விசுவாசம் உள்ளவன் (உண்மையாளன்) பொருட்பட பதிலளித்தார் ஏன் இனமான பேராசிரியரை அழைத்தபோது கூட நான் அன்பழகன் என்றார்.. ஏன் இதை குறிப்பிடுகிறேன் என்றால் விசுவாசம் இனமானம் என்றால் என்னவென்று வைகோ இனியாவது அறிந்திருப்பது நல்லது.. .. தமிழக அரசியலிலிருந்து முற்றிலும் மக்களால் வெறுக்கப்பட்ட தலைவர்கள் வரிசையில் வைகோவும் சேர்கிறார் என்கிறபோது உண்மையில் வருத்தம் வரதான் செய்கிறது அதேவேளை பொய்யான ஒரு பிரம்மத்தை நீண்டநெடிய நேரம் கரையாமல் வைத்திருக்கமுடியாதென்பதற்கு சாட்சியாகிறார்.. திறமை இருப்பதாக துணிவிருப்பதாக தலைமைத்துவம் இருப்பதாக ஊடகங்களும் எங்களை போன்ற சிலரின் தாங்கிப்பிடித்தது எவ்வளவு பெரிய தவறென்று காலம் உணர்த்தியிருக்கிறது.. உ.பி க்கு ஒரு அமிர்ஷா போல தமிழகத்திற்கு ஒரு வைகோ..ஆனால் இவரின் தரகு வேலை சிலகாலம் பயனளிக்கலாம் ஆனால் தொடர்ந்து சிதைந்து போகிற பிம்பமாகவே இருப்பார்.. .. டெல்லியில் திமுகவின் ,கலைஞரின் தயவில் 18 ஆண்டுகாலம் எம்பியாக இருந்தது அங்குள்ள சிலரின் நட்பிற்கு வழிவகுத்ததும் இப்போது கைகொடுக்கிறது.. இவர் எம்பியாக இருந்த போது பேசியதைவிட சாதித்ததைவிட இப்போது மிக அழகாக சிலகாரியங்களை செய்து கொடுக்கும் தரகர் பிழைப்பு மிக ஜோராக நடக்கிறது.. துரோக அரசியலும் அதைதொடர்ந்து சிலகாலம் தன் வாததிறமையால் தன் கட்சியை சுக்குநூறாக்கியதும் வேறுவழிதெரியாமல் திரிந்த சிலரை/கட்சிகளை உறவாடி கெடுத்து அவர்களின் முகவரியை அழித்ததும் தான் அவரின் இப்போதைய வேலைக்கு மவுசு கூட்டியிருக்கிறது.. .. அவரை அறியாமலேயே அவர் தானிருந்த வாழ்ந்த தனக்கு வாழ்வளித்த திமுகவிற்கு நன்மை செய்கிறார்.. .. #புதியதொழில்_சிறக்க_வாழ்த்துகள்… .. ஆலஞ்சி மன்சூர்...

Sunday, January 15, 2017

எங்கே போய்கொண்டிருக்கிறது..

என்ன மாதிரியான அரசியல் நடக்கிறது.. தமிழகம் எங்கே போய்கொண்டிருக்கிறது.. யார் வேண்டுமானாலும் நம்மை தலைமையேற்க அனுமதிப்பது என்பது எவ்வளவு இழிவான செயல்.. அதிமுக என்கிற அரசியல்கட்சி ஏதோ காழ்ப்புணர்ச்சி காரணமாக துவங்கப்பட்டு அதன் காரணகர்த்தாக்களின் அறிவிலித்தனத்தை ,மக்களை மயக்கத்திலேயே வைத்திருந்து கடைசியில் யார் யாரோ சொந்தம் கொண்டாடுகிற நிலை.. கடந்த ஐந்தாண்டுகளில் நேரடியாகவே சம்பாதிக்க தொடங்கி அரசியலை வியாபாரமாக்கி அதன் மூலம் பெரும் பயன்யடைந்தவர்கள் ஒருபக்கமும் இரத்த உறவைச்சொல்லி சிலர் மறுபக்கமும்.. இருவருக்கு தகுதியோ நேரடியாக மக்கள் சேவையாற்றி மக்களால் நேசிக்கப்பட்டு வந்தவர்கள் இல்லை .. ஆனால் மீதமுள்ள நீண்டகால அதிகார காலஅளவு மீதஇருப்பதை சுருட்டலாம் சுருட்டியதை சரியாக்கி காப்பாற்றலாமென்ற ஒற்றை நோக்கை தவிர தமிழக நலனோ தமிழ்சமுதாயத்தின் மீதான அக்கறையோ, இந்த நாட்டுமக்களின் துயரங்களை நீக்கி அவர்களின் உரிமைகளை பெற்று தரவேண்டுமென்ற நோக்கமோ இல்லை.. .. நேற்றைய தினம் எங்கள் மாவட்ட அமைச்சரும் அதிமுக மாவட்ட செயலரும் பேசினார்கள் உண்மையில் பச்சாதாபம் தோன்றியது.. எதைப்பற்றி பேசவேண்டுமென்ற அறிவில்லாமை பேச்சின் நெடுக தெரிந்தது.. எப்படிபட்ட அரசியல்வாதிகளை உருவாக்கியிருக்கிறோம் நாமென்று வினா எழும்பியது.. தலைவர்களை உருவாக்கவில்லை மாறாக அரசியல்வாதிகளை வியாபாரிகளை உருவாக்கியிருக்கிறோமென்றே தோன்றியது.. கொஞ்சம் விளக்கமாக சொல்லவேண்டுமெனில் பொதுஅறிவோ சமூக சிந்தனாயோ நாடு, மக்கள் ,சமூகம்.. எதைப்பற்றி ஆழ்ந்தறிவோ இல்லை வெற்று கூச்சலிடும் பிரச்சார ஒலிப்பெருக்கிகளை உருவாக்கியிருக்கிறோம்.. எங்கே எதை பேசவேண்டுமென்று அறிந்திருப்பது அழகு.. .. உண்மையில் தமிழ்நாட்டில் மட்டுமே கவர்ச்சி அரசியல் நீண்டகாலம் இருந்திருக்கிறது ஆந்திராவில் #தேவுடு என்று சொன்ன ராமராவை கூட தூக்கியெறிந்தார்கள்..மிகவும் ஏழ்மைநிலையிலிருந்தும் எல்லா துறைகளிலும் பின்னிலே இருந்தும் பீகாரில் மக்கள் வாக்குகளை விற்கவில்லை.. ஆனால் தமிழகத்தில் ஏழைகளை மட்டுமே குறிவைத்து விநியோகிக்கப்பட்ட வாக்கிற்கு பணமென்பது இப்போது நடுத்தர குடும்பங்களையும் #கவர்ந்தழுத்திருக்கிறது.. சில #நல்ல குடும்பங்களில் கூட பணம் வாங்கி வாக்களிக்கும் விபரீதம் வந்ததாக சொன்னார் நண்பர்.. காசுக்கு வாக்களிப்பது வேசித்தனம்.. இதில் நல்லவேசித்தனம் கெட்டவேசித்தனம் என்ன.. .. இங்கே நல்ல அரசியலை காழ்ப்புணரிச்சியற்ற அரசியலை நேர்மையான அரசியலை கையிலெடுக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது கவர்ச்சி காசுக்கென வாக்களித்ததால் கண்ட கண்ட #கழுதைகளெல்லாம்.. குதிரைகளாக வலம் வர தொடங்கியிருக்கிறது.. இனியேனும் நல்லவர்களை நமக்காக உழைப்பவர்கள் நாட்டின் நலன் கருதுவோரை இன,மொழிஉணர்வுள்ளவர்களை.. உண்மையானவர்களை நல்ல தலைவர்களை உருவாக்குவோம் அவர்கள் பின் அணிவகுப்போம்.. #மாடியில் நின்று கையசைத்தால் தலைவராகலாம்.. #பியூட்டிபார்லில் முக,சிகையலங்காரம் செய்தால் தவைவராகலாமென்ற அடிமைசிந்தனையை மறுத்து எழுதுவோம்.. #புதியதோர்_சரித்திரம்.. #தொடங்கட்டும்_புதியஅத்தியாயம்... .. ஆலஞ்சி மன்சூர்...

நூலகம்..

நூலகம்.. அறிவின் ஊற்றுக்கண்.. நூலகமில்லா ஊரில் குடியிருத்தல் பாவமென்று பாடியிக்கவேண்டும்.. வாசிப்பின் அருமை நம்மிடையே சிதைந்து போனது.. எங்களுரில் சிக்கந்தர் பாடசாலை இருந்தது சிறிய அளவே என்றாலும் எண்ணற்ற புத்தகங்களும் தினசரி நாளிதழ்களும் .. எனது எதிர்வீட்டு மச்சான் Jamal Mohammad Basheer Ahamed அவர்கள் இந்து நாளிதழை வருட சந்தாகட்டி வழங்கி வந்தார்.. நிறைய பேர் நாளிதழ்களை புத்தங்களையும் தந்துதவினார்கள்.. அது தொடர்ந்து பராமரிக்க முடியாமல் கரையான் செல்லரித்தது.. ஏன் இதை பதிவு செய்கிறேன் எனில் நூலகம் எவ்வளவு இன்றியமையாதது என்பதை உணராத சமூகமாகவே தமிழ் சமூகம் இருக்கிறது.. இந்தியாவில் அதிக வாசிப்பவர்களாக இருந்த தமிழர்கள் இன்று 14 வது இடத்தில் இருக்கிறார்கள்.. .. ஒரு இனத்தை அழிக்கவேண்டுமென்றால் முதலில் அங்குள்ள நூலகத்தை கொளுத்து என்றான்.. நூலகம் ஒரு கலாச்சாரத்தின் பீடம்.. உலகிலேயே அறிவில் கலாச்சாரத்தில் ஆட்சி அதிகாரத்தில் சிறந்து விளங்கியவர் பாரசீகர்கள் அவர்களின் சிறந்தவிளங்க காரணமென்ன என்றாய்ந்தால் கல்விக்கு அவர்கள் தந்த முக்கியத்துவம்.. உலகிலேயே முதன்மையான நூலகத்தை அவர்கள்தான் நிறுவினார்கள்..ஆம் பக்தாத்தில் அவர்கள் நிறுவியதாக வரலாறு சொல்கிறது.. அதை தொடர்ந்து அலெக்ஸாண்டரியா என்ற பிரமாண்ட நூலகத்தை எகிப்த் நிறுவியது.. பாரசீகர்கள் பறந்துவிரிந்து தங்கள் ஆளுமையை கொண்டுவந்ததற்கு அவர்களின் அறிவே துணை செய்தது.. .. தனக்கு அறுவை சிகிச்சைக்கு நேரம் குறிக்கப்பட்டபோது கூட இன்னும் சிலபக்கங்கள் மீதமிருக்கிறது அதை வாசித்துவிட்டு வந்துவிடுகிறேன் என சொன்னார் எங்கள் ஆசான் அண்ணா.. உங்கள் குழந்தைகளை படிக்கவையுங்கள் அதற்கான வசதியில்லையென்றால் வெளியூர் சென்று கூலிவேலைபார்த்தாவது படிக்கவையுங்கள் என்றார்.. அறிவாசான் பெரியார்.. ஏனெனில் ஒரு சமூகம் சிறந்து விளங்கவேண்டுமெனில் அது அறிவுடையோர் சமூகமாக இருத்தல் வேண்டும் அதற்கு அறிதல் மிக அவசியம்.. அறிதல் அறிவுகொண்டாயின் அதைவிட உலகில் வேறேதும் சிறந்ததில்லை.. மிகசிறந்த சமூகத்தை ஒரு நூலகம் தந்துவிடும் அதனால்தான் #லெனில் சொன்னான்.. மூன்றே மூன்று வார்த்தை பேசுகிறேன் படியுங்கள் படியுங்கள் படிக்கவையுங்கள்.. என்றான்.. .. ஆம் நம் கருத்தோடு மாறுபட்டவையாக இருந்தாலும் நம் கொள்கை கோட்பாட்டில் வேறுப்பட்டிருந்தாலும்.. எதை பற்றி சொல்லப்பட்டிருந்தாலும் படியுங்கள் .. அறிவில் தேடலை அது நின்றுவிட்டால் அந்த சமூகமே அழிவை தானாக தேடிக்கொண்டுவிடும்.. நிறைய எழுதலாம்.. .. பாரதிதாசன் வரிகளோடு முடிக்கிறேன்.. #கல்வியின் மிக்கதாம் செல்வமொன்று இல்லையே கண்மணி கேளடா நீ என்றன் சொல்லையே! செல்வம் பிறக்கும் நாம் தந்திடில் தீர்ந்திடும் கல்வி தருந்தொறும் மிகச் சேர்ந்திடும் .. ஆலஞ்சி மன்சூர்

Saturday, January 14, 2017

கலாச்சார திணிப்பை எதிர்ப்போம்

ஏன் பார்பனர்களும், பாரதிய ஜனதா ஏன் ஜல்லிக்கட்டை ஏன் எதிர்க்கிறார்கள் .. சற்று யோசித்தால் பிடிகிட்டும் ..இன்று அதிகாலை எனது நண்பர் மகர சங்காராந்தி வாழ்த்துக்கள் சொன்னார்.. இன்றைக்கு கூட காலை முகநூலை திறந்தவுடன் சங்கராந்தி வாழ்த்தை சொல்லி எம் மீது கலாச்சார திணிப்பை செய்தது.. .. தமிழகத்தை தவிர்த்து பிறமாநிலங்களில் கொண்டாடப்படும் மகா சங்கராந்தியை நம் மீது திணிக்கும் நடவடிக்கையாக தான் பொங்கலோடு சார்ந்த விழாக்களை தடைசெய்து சிதைக்க எண்ணுகிற செயலாகதான் தோன்றுகிறது ஜல்லிக்கட்டு மீதான பிடிவாத போக்கில் பின்னில் கலாச்சாரத்தை அழிக்கும் செயலாகவே எடுத்துக்கொள்ளவேண்டும்.. அறுவடைநாளோடு சூரியனின் கதிர்திருப்பத்தை (Solstice) இணைத்து நம் மீதான கலாச்சாரப்போரை தொடுக்கிறார்கள்.. (சங்கராந்தி) சங்கரமண என்ற சமஸ்கிருத சொல்லிற்கு நகர தொடங்கு என பொருள் அதாவது தொடக்கம் என்றும் பொருள் கொள்ளலாம்.. ஆனால் அதை ஆண்டின் தொடக்கமாக ஏற்றுக்கொள்ள மறுப்பார்கள்.. இதிலிருந்து ஒரு உண்மையும் தெரியும் தமிழறிஞர்கள் ஏன் ஆண்டின் தொடக்கம் #தைதிங்கள் என்றார்கள் என்பது புரியும்.. ஆனால் கற்பனையாக எழுதி வைத்ததை பிறர் நம்பவேண்டுமென்பதற்காகவே அவர்களின் மொழியில் வரும் உண்மைகளை கூட ஒப்புக்கொள்வதில்லை.. .. மகா சங்கராந்தியை அவர்கள் கொண்டாடுவதிலே எங்களுக்கு சங்கடமில்லை ஆனால் இந்தியா முழுவதும் அதை திணிக்கவேண்டுமென்பதற்காக செய்யும் அழிச்சாட்டியங்களை காணும் போது கோவம் வருகிறது.. பொங்கலை சாதிமதத்தை மீறி உலகெங்கும் வாழும் தமிழர்கள் கொண்டாடுகிறார்கள் .. #உத்தராயன் என சூரியன் வணங்கும் விழாவாக குஜராத்தியர்கள் கொண்டாடிவந்ததை அவர்கள் மீது சங்கராந்தியை திணித்து அவர்களின் கலாசாரத்தை சிதைத்ததைப்போல தமிழர்களின் பண்டிகையை / பண்பாட்டை சிதைக்க முடியாது.. பல்வேறு நாடுகளில் வேரூன்றி நிற்கிற தமிழனும் தமிழர் கலாச்சாரமும் எங்களின் இன உணர்வோடு சம்பந்தப்பட்டது.. .. கடைசி தமிழ் உணர்வாளர்கள் உள்ளவரை நீங்கள் நிறைய தண்ணீர் குடிக்கவேண்டிவரும்.. திமிறி எழுந்தால் திசை தெரியாது போவீர்.. .. #அத்துமீறினால்_அடங்கமறுத்தல்_எங்கள்இயல்பு.. .. ஆலஞ்சி மன்சூர்...

ஜல்லிக்கட்டும் அரசியலும்

அவனியாபுர அரசியல்.. சில சினிமாகாரர்கள் தங்களின் தற்போதைய படம்/தொழில் சார்ந்த பிரச்சனைக்காக போராடவருகிறார்கள் அதற்கு அவர்கள் ஜல்லிக்கட்டை கையிலெடுத்தது பிரச்சனையாகி மக்கள் அதிகளவில் கூடியதும் .. இயக்குனர் திரு.அமீர் ஆர்யா கவுதம் போன்றவர்கள் போராட்டகளத்தில் வர காவல்துறை அவர்களை திருப்பி அனுப்பியிருக்கிறது அதில் கைகலப்பும் அடிதடியும் போலிஸ் (லத்திசார்ஜ்) அடிக்கவேண்டியிருந்ததாக சொல்லபடுகிறது.. இதை மற்றொரு கோணத்தில் அடங்க மறு அத்துமீறு என நடப்பதாக காட்டிக்கொள்தலும் இங்கே உண்டு.. .. முதலில் போராட வந்த அவர்களின் உணர்வை மதிப்போம்.. ஆனால் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டங்கள் செயல்படும் விதம் மிகப்பெரிய இடைவெளியை தந்திருக்கிறது அதில் புகுந்த அரசியல் ஜாதீய சாயல் இவையெல்லாம் மறுக்கவோ அழிக்கவோ படவில்லை.. தனித்தனியாக போராட்டங்களை நடத்தி தங்கள் முகம் மட்டுமே வெளிச்சம் தரவேண்டுமென எண்ணுகிற நிலை .. ஜல்லிக்கட்டிற்கு எதிரானவர்களின் மீதான சாதீய தாக்குதல் அல்லது தனிநபர் தாக்குதல் இவை எல்லாம் பின்னடைவை தரும் என்பதை மறந்து ஆளாக்கு செயல்படுவது தவறாகிப்போகிறது.. .. இன்று பாலமேட்டில் களம் வெறிச்சோடிக்கிடக்கிறது ஆளும் அரசோ அமைதி காக்குகிறது மத்திய அரசோ கடைசி வரை நம்பிக்கை தந்து கடைசியில் முதுகில் சொருகிவிட்டது.. போராட்டத்தை யாருமே திட்டமிடாத செயலாய் இந்த வருடமும் பொய்த்து போன மழைப்போல வறண்ட மனநிலையில் தமிழர்கள்.. .. திமுக போன்ற மிகப்பெரிய எதிர்க்கட்சிகளின் பின்னால் அனைவரும் கட்சிபாகுபாடியின்றி அணிவகுத்து அரசுகளுக்கெதிராக ஒரணியில் திரண்டு போராட்டத்தை வகுத்திருக்கவேண்டும்.. சில உதிரிகள் தொடர்ந்து திமுகவை குறைச்சொல்லி தங்களின் வருவாயை பெருக்கிக்கொள்ள திட்டமிடுகிறார்களே தவிர திமுக ஆட்சியில் எத்தனை அவசர சட்டங்கள் இயற்றப்பட்டது எப்படியெல்லாம் கலைஞர் சதூர்யமாக ஜல்லிக்கட்டை நடத்தினார் .. என்பதை கருத்தில் கொண்டு இன்றைய தமிழக முதல்வர் மாண்பிமை பன்னீர்செல்வம் அவர்கள் கலைஞரை சந்தித்து ஆலோசனை பெற்று நடத்தியிருக்கலாம் இப்போதும் காலம் கடந்துவிடவில்லை.. திமுக தலைவரையோ அல்லது செயல்தலைவரையோ சந்தித்து ஆலோசனை நடத்தலாம்.. யாரும் குறைகூற மாட்டார்கள் எதிர்க்கட்சி தலைவரை சந்தித்து ஆலோசனை நடத்துவது ராஜாஜி காலந்தொட்டு எல்லா முதல்வர்களும் செய்ததுதான் #கோமாளி_எம்ஜிஆர் வரவிற்கு பிறகுதான் அரசியலில் மற்ற கட்சிகளோடு கலந்து பேசுவது அறவே இல்லாமல் போனது.. இப்போது காலமிருக்கிறது இப்போது எதிர்க்கட்சிதலைவர் இறுக்கம் தளர்த்தி மிக எளிமையானவராக இருக்கிறார் இன்றைக்கு கூட தொலைப்பேசியில் முதல்வருக்கு வாழ்த்து கூறியிருக்கிறார்.. முதல்வர் கட்சியின் பொதுசெயலாளர் கூட வாழ்த்து கூறாத நிலையிலும் .. நல்ல ஆரோக்கியமான அரசியல் மலர்ந்திருக்கும் வேளையில் முதல்வர் திரு.பன்னீர் செல்வம் முன்னெடுக்கவேண்டும்.. .. மத்திய ஆளும் அரசும் அதன் அமைச்சர் பொன்னரும் நம்மை முதுகில் குத்தி விளையாடுகின்றனர்.. ஒவ்வொரு வருடமும் நம்பிக்கை தந்து கடைசியில் கைவிரிக்கும் கயவாளித்தனம் பொன்னருக்கே உரியது.. .. எங்கள் கவிஞன் பாரதிதாசனின் வரிகளை கொண்டே எச்சரிப்போம்.. #பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைவித்தால் #சங்காரம் நிசமென்று சங்கே முழங்கு.. .. ஆம் எங்களுக்கெதிரான எம் இனத்திற்கெதிரான எம்மொழி எம்வாழ்வியல் எம்கலாச்சாரம் எம் பண்பாட்டிற்கு எதிரானவர்களை அழித்தொழிப்போம்.. .. ஆலஞ்சி மன்சூர்

Friday, January 13, 2017

பெரியார் விருது..

பெரியார் விருது.. விருதைபெறுவதற்கென்று சில தகுதிகள் உண்டு.. அதில் எதிலே சேர்ந்திராத ஒருவருக்கு வழங்கப்படுவது விருதை அவமதிக்கும் செயல்.. .. பெரியாரின் சாதிமறுப்பிற்கெதிரானவர்.. இவர் கரிசனத்தில் தான் மகோரா உடல்நலிவுற்று இருந்தபோது இவரின் சாதீய தீ.. தமிழகமெங்கும் பற்றி எரிந்தது.. இவர் பாமக சார்பில் அதற்கு பிறகு வந்த தேர்தலில் நின்று வென்றார்.. .. பெரியாரின் தன்னம்பிக்கை திடமான கொள்கை உணர்வோ இவரிடமில்லை.. இவர் இதுவரை மாறி மாறி சவாரி செய்து சவாரி செய்த குதிரையை காலைவாரிய பழக்கமுடையவர்.. எங்கும் நம்பிக்கையானவராய் எப்போதும் இருந்ததில்லை.. இவர் நம்பிக்கையற்றவர் என்பதோடு மிகப்பெரிய துரோகி என்பதற்கு அடையாளமாய்.. மிசா காலத்தில் (அவசரநிலை பிரகடனம்) கலைஞரோடு காரில் பயணித்தவர் இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமெனில் கலைஞருக்கு காரோட்டும் சாரதி வராததால் இவர்தான் காரை ஓட்டிச்சென்றார்.. கலைஞர் கைது செய்யப்படலாம் என்ற தகவல் வந்தவுடன் பாதி வழியிலேயே காரை நிறுத்திவிட்டு பயந்தோடியவர் அப்போது உடனிருந்த கண்ணப்பன் தான் கலைஞரின் காரை ஓட்டி பத்திரமாக கொண்டுவந்து சேர்த்தார்.. அதனாலேயே அவரை காரோட்டி கண்ணப்பன் என்றே அழைக்கப்பட்டார்.. திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் காரோட்டியதின் நினைவாக தான் அவருக்கு போக்குவரத்து துறையை கலைஞர் ஒதுக்கினார். மற்றொரு சம்பவத்தையும் இதனோடே சொல்லவேண்டும் மகோராவை பிரிந்து நாஞ்சிலார் திமுகவிற்கு வந்தபோது வருவாய் என்றார் கலைஞர் திமுக ஆட்சி வந்தபோது அவருக்கு வருவாய்துறை ஒதுக்கினார் .. .. சரி விசயத்திற்கு வருவோம்.. எத்தனையோ முறை தூது அனுப்பியும் கலைஞர் எல்லோரையும் சேர்ந்துக்கொண்டபோதிலும் பண்ரூட்டியை கட்சிக்குள் சேர்த்துக்கொள்ளவில்லை.. தூங்கும் போது தலையில் கல்லை தூக்கிப்போட தயங்காதவன்..என்பார்.. .. நம்பியவரை கழுத்தறுக்கிறவருக்கு பெரியார் விருதா.. தன்மானமில்லாத.. சுயமரியாதை தெரியாத ,கொண்ட கொள்கையில் நம்பிக்கையோடு இல்லாத/பணியாற்றாத, நம்புகிறவர்களை நடாற்றில் தவிக்கவிட்டு ஓடியொளிகிற .., அறிவோடு எதை அணுகிட தெரியாத சாதீயவெறி அப்பட்டமாக தெரிகிற இனதுரோகிக்கு.... எந்நிலையிலும் கொண்ட கொள்கையில் உறுதியோடும் எதிரிகளை எதிர்ப்பதில் தீவிரமாகவும் எதையும் அறிவோடு தீர்க்கமாக தொலைநோக்கோடு சிந்தித்து இந்த சமுதாயத்தில் ஏற்றதாழ்வை ஒழிக்கபாடுபட்ட எங்கள் #அறிவாசான் விருதா.. .. தயவு செய்து துரோகிகளுக்கும்,பச்சோந்திகளுக்கும், கொள்கையிலா கோமாளிகளுக்கும், சிந்திக்கும் ஆற்றலில்லா அறிவிலிகளுக்கும், மானமிழந்து மண்டியிடும் அடிமைகளுக்கு தந்து #விருதை கேவலப்படுத்தாதீர்.. .. #எங்கள்பெரியார்_மாமேதை.. #மாமேதைவிருது_மடையனுக்கா .. ஆலஞ்சி மன்சூர்...

Thursday, January 12, 2017

உரக்க சொல்வோம் நாங்கள் திராவிடரென்று..

திராவிட இயக்கத்தை அழித்துவிட்டு பொங்கலை/ஜல்லிக்கட்டை நடத்துவோம்/ கொண்டாடுவோம்.. திரு.பொன்.ராதா.. நேரடியாக இந்த ஜென்மத்தில் நடத்தமாட்டோமென சொல்லவேண்டியதுதானே.. பொன்னார் அவர்களே.. .. யார் சொல்கிறார்கள் தெரியுமா எந்த ஆதிக்க வெறியர்களால் எவரின் அப்பத்தா மாராப்பூ சேலையை கூட போடமுடியாமல் தடுத்தானோ அவளின் பேரன் ஆரிய அடிமையாய் அருள்வாக்கு சொல்கிறான்.. திராவிடம் கிள்ளியெறிய சிறிய செடியோ/கொடியோ அல்ல ஆழ விழுந்து தழைத்து விரிந்து நிற்கும் ...,விழுதுகள் ஆயிரமாய் விரிந்து நிற்கும்.. ஆலமரம்.. .. சமீபத்திய பொன்னாரின் உளறல்கள் அவரை கேலிப்பொருளாக சித்தரிக்கிறது.. பாவம் புத்திசுவாதினமில்லாதவரின் பேச்சாய், சம்பந்தமில்லாத வெற்றுக்கூச்சலாய் விவேகம் சிறுதுமில்லாத நான்காம்தர பேச்சாளரைப்போல.. எதேதோ பேசிவருகிறார்.. சட்டென்று வீழ்த்திவிட கொடியல்ல வைரம் பாய்ந்த தேக்குமரம்.. .. திராவிடம் சொல் அல்ல சுரணையுள்ளவர்களின் (இன உணர்வு) #பேராயுதம் . அதனால் தான் ஆரியன் எந்தந்த வழியிலெல்லாம் நுழைய முடியுமோ அந்தந்த வழியிலெல்லாம் நுழைந்து வேரறுக்க பார்க்கிறான் பாவம்.. அடிமண்ணை கூட நோண்ட முடியவில்லை.. ஆழ புதைந்து அடிவேராய் .. மண்ணில் பலமாய் எங்கள் #பெருங்கிழவன் சிரித்துக்கொண்டே நகைக்கிறான்.. இந்த கேடுக்கெட்ட #கோடாரிகளை நினைத்து.. எங்கள் தளபதியார் அழிக்க அல்ல தொட்டுபார்க்ககூட முடியாது என்றார் பாருங்கள்.. அதுபோதும் இனி நூறாண்டுகள் ஆனாலும் பொன்னரை போன்ற குலம்கெடுக்கும் கோடாரிகளால் எத்தனை தழும்புகள் வந்தாலும் தாங்கி நிற்கும் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது.. .. திராவிட இயக்கத்தின் வரலாறு இன்றைய இளைஞர்களிடையே வேகமாக சென்று சேர்கிறது..இடையில் சிலகாலம் சினிமா மாயையில் மூழ்கி அறியாமல் பாதை தவறியிருந்தாலும் மீண்டும் உணர்வுபெற்று பிரகாசிக்க தொடங்கியிருக்கிறது.. குறிப்பாக கல்லூரி மாணவர்களில் பெண்களிடத்தில் #பெரியாரின் தாக்கம் தெளிவாக தெரிகிறது.. சுயமரியாதை உணர்வு தீப்பந்தாய் சுடரொளிக்கிறது.. பொன்னார் அவர்களே .. நீர்..எத்தனை பிறவியெடுத்தாலும்..அழிக்கமுடியாத #காலப்பெட்டகம்_திராவிடம்.. .. உரக்க சொல்வோம்.. இனத்தால்.. நாங்கள் #திராவிடனென்று.. .. ஆலஞ்சி மன்சூர்...

Wednesday, January 11, 2017

Lawmaker

Lawmaker of India.. நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐம்பது பேரை வைத்திருக்கும் ஒருகட்சியால் மக்களின் நலனுக்கான திட்டங்களை கூட எடுத்துச்சொல்லி கேள்வி கேட்க முடியவில்லை.. ஒரு எம் பி யின் தகுதி என்ன என்பதை கூட அறியாதவர்களை நாமும் அனுப்பிவைத்திருக்கிறோம்.. .. எந்தவொரு பிரச்சனையானாலும் பிரதமரை சந்தித்து பேச முடியவில்லை ஆனால் பிரதமருக்கோ நடிகைகளை காண்பதற்கு நேர அவகாசம் இருக்கிறது.. ஏன் நடிகைகளை சந்திக்க கூடாதா என கேட்டால் தவறில்லை அதை மக்களால் தேர்தெடுக்கப்பட்டவன் மக்களின் பிரச்சனையை கையிலெடுத்து கொண்டு வருபவனை தொடர்ந்து புறக்கணிக்க முடிகிறதே எதனால்.. இவர்களால் ஒன்றும் செய்துவிட முடியாது என்கிற ஆணவம் தவிர வேறென்ன .. இவர்கள் (எம்பிக்கள்) தங்களின் செயல்களால் தங்கள் மதிப்பை மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகத்தையும் தலைகுனிய வைத்திருக்கிறார்கள்.. காலில் விழுந்து கிடப்பது கார் டயரை கும்பிடுவது ஆகாசத்தைப்பார்த்து கும்பிடுவது.. இதோ.. கடைசியில் திடீரென்று உதவியாளராக இருந்தவரை உயர்த்தி பிடித்து நீங்கள்தான் எஜமானி என்பது.. எவ்வளவு கேவலமென்று அறியாமல் ஒட்டுமொத்தமாக தமிழகத்திற்கு தீராத களங்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.. .. இது போல் எந்தமாநிலத்திலும் நடக்காது சூடுசுரணையே இல்லாத இவர்களை வைத்து சர்க்கஸ் நடத்தலாம் ..மகாகேவலமானவர்கள்.. பிற மாநிலங்களிலிருந்து வருகிறவர்களை பார்த்தால் நமக்கு கம்பீரமாக தெரிகிறது தலைமைக்கு கட்டுபட்டு நடந்தாலும் எந்த இடத்திலும் சுயமரியாதையை இழப்பதில்லை .. இதேபோல் பிரதமரும் சந்திக்க மறுப்பு சொன்னதில்லை அப்படி சந்திக்க மறுத்தால் வேறுவிதமான தாக்குதலை தருவார்கள்.. .. நாடாளுமன்றத்தின் உறுப்பினரையே சந்திக்க மறுக்கிற அவலம் .. ஜனநாயக வரம்பை மீறிய செயல் அவர் யாராக இருந்துவிட்டு போகட்டும் சுயமாக சிந்திக்க தெரியாதவராக கூட இருக்கட்டும் ஒட்டுமொத்தமாக பின்பாட்டுபாடுபவராக கூட இருக்கட்டும்.. அவர்களின் கோரிக்கைகள் ஏற்கமுடியாததாக இருக்கட்டும் அதை நாசுக்காக வெளிப்படுத்தியிருக்கவேண்டும் அவர்களை பார்க்க மறுப்பது ஒரு வகை சர்வாதிகார செயல்.. தான்தோன்றித்தனம் .. இனியாவது திறமையானவர்களை தேர்வு செய்து அனுப்புவோம், சபையில் சினிமாபாட்டுபாடி திரியும் ரசிககுஞ்சுகளை அனுப்பாமல் நமக்காக நம் உணர்வுவை வெளிபடுத்துகிற துணிவும் திறமையும் உள்ளவர்களை சிறந்த பேச்சாற்றல் உடையவர்களை எதையும் எதிர்கொள்ளும் துணிவு கொணடவர்களை அனுப்புவோம்.. சில நூறுக்கு ஆசைப்பட்டு #மதிப்பிழந்து_முகமிழந்து போனோம்.. இனியேனும்.. .. #அறிவுடையோரை_தேர்வுசெய்வோம்… .. ஆலஞ்சி மன்சூர்..

கேலிசித்தரம்.

கார்ட்டூனிஸ்ட்.. கேலிசித்திரங்கள் மீதான கிறக்கம் ஆர்.கே வோடு போய்விட்டது .. திரு.ஆர்.கே. லட்சுமணன் you said it என்ற தலைப்பில் comman man கேரக்டர் (கதாபாத்திரம்) செய்யாத நையாண்டி இல்லை.. பாரதபிரதமர் தொட்டு யாரையும் விட்டுவைத்ததில்லை ஆனால் நையாண்டியும் எள்ளலும் மிகையாய் இருக்குமே தவிர யாரையும் புண்படுத்துவதாக இருக்காது.. பிரதமர் இந்திரா போன்றவர்கள் என்னை திரும்பி பார்க்கவைக்கும் லட்சுமணனின் தூரிகையென்பார்.. கார்ட்டூனிஸிட் கோபுலு (கும்பகோணம் கோபால்) செய்கிற குறும்புதனங்கள் ரசிக்கும்படியிருக்கும் அவரின் இலங்கை இன பிரச்சனையை தமிழ் சிங்களம் இரண்டையும் ரம்பம் கொண்டு அறுக்கும் கேலிசித்திரம் பிரபலம்.. ஆனந்தவிகடனில் நீண்டகாலம் பணியாற்றிய மதன் கூட கேலிசித்திரம் மூலமே பிரபலமடைந்தவர். நிறைய பேர்களுக்கு முன்னோடியாக இருந்த லட்சுமணன் கார்ட்டூனைப்பற்றி கூறும் போது சொல்லபடும் கருத்துக்களில் பிழை இருக்ககூடாது அதேவேளை சொல்லவந்ததையும் பொட்டில் அறைந்தாற்ப்போல் சொல்லிவிடவேண்டுமென்பார்.. பிரணாப்முகர்ஜி கூறும் போது அவரின் #பொதுஜனம் மக்களின் குரல் என்றார்.. ‍.. இதை ஏன் சொல்கிறேனெனில் திரு.பாலா குமுதத்திலிருந்து வெளியேறுவதாக சொல்லி அதற்கு அவர் சொன்ன காரணம் சிரிப்பை தந்தது. அவரது கார்ட்டூன் சிரிப்பை தந்ததோ இல்லையோ மோடியையும் சசியையும் விமர்சிக்க நிர்வாகம் ஒப்புக்கொள்ள மறுத்ததால் விலகுவதாக அறிவித்திருக்கிறார்.. அவரின் தூரிகைகள் தொடர்ந்து திராவிட இன விரோதபோக்கை கொண்டிருந்தாலும் மிக மோசமாக கலைஞரை கேலிசித்திரத்திலும் எழுத்திலும் கொண்டுவந்தாலும் அவரின் எழுத்த நிறுத்த வரைவதை நிறுத்த திமுகவோ அதன் சார்புடைய திராவிட இயக்களோ பணித்ததில்லை.. .. திரு.பாலா மிரட்டப்ப்டிருக்கிறார்.. திரு.மோடியை பற்றி கேலிசித்திரம் வரைந்தால் நடப்பதே வேறு என்று மனரீதியான அழுத்தம் தரப்பட்டிருக்கிறது.. வெகுகாலமாய் கலைஞரையும் திமுகவையும் மட்டும் குறிவைத்து தாக்கியபோதும் கூட பாலாவை யாரும் மிரட்டியதில்லை கருத்துசுதந்திரத்தின் ஒருபகுதியாகவே அதை கண்டோம்.. பாசிசத்தை கொண்டு நடப்பவர்களுக்கு பாலாவின் நிலைதான் வரும் என்பதற்கு இதுவே சாட்சி.. திருமதி இந்திராகாந்தியை லட்சுமணன் மூக்கை மட்டும் வரைந்து செய்த கேலிகளை கூட ரசனையோடு ரசித்து ஏற்றுக்கொண்டார்.. .. மோடியை விமர்சிக்க கூடாது என்கிற நிர்பந்தம் ஒரு வித அச்சத்தை கருத்தியலுக்கு எதிராக விதைத்திருக்கிறது.. குமுதம் போன்ற குப்பைகளோடு சேர்ந்து குப்பை கொட்டிய குப்பை வெளியேறியிருக்கிறது.. இனியேனும் குப்பையாகாமல் இருந்தால் சரி.. .. ஆலஞ்சி மன்சூர்..

Tuesday, January 10, 2017

எங்கள் கிரீடம்

Demonetisation இந்தியா டுடே மாநாட்டில் மோடியை கிழித்தெறிந்தார் திரு.ஸ்டாலின் ..மாண்பிமை மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடும் வானுயர புகழ்ந்த டுடே மாநாட்டில் மகிழ்ந்து திளைத்த போது திரு.ஸ்டாலின் மோடிக்கெதிரே ஆணியடித்தார்.. பிஜேபி பினாமிகளுக்கு முன்.. பிஜேபியின் ஊடக ஜால்ராக்களுக்கு முன் கம்பீரமாய் .. மக்களை மெல்ல மெல்ல கொல்லும் பிற்போக்குதனமான திட்டம் என்றார்.. .. இந்த துணிவு பெரியாரின் பேரப்பிள்ளைகளிடம் மட்டுமே காணமுடியும் அஞ்சுவது இழுக்கு என வாழ்பவர்கள்.. இந்த சமூகத்தின் நீதி நிலைத்திட எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் கருத்தை பதிந்திட /செயல்பட மறந்ததில்லை.. அரைகுறையோடு முதல்வரும் முதல்வரின் மூலவரும் உளறிக்கொட்டி தமிழகத்தை தலைகுனிய வைத்தார்களே என நினைத்துக்கொண்டிருந்தபோது .. இதோ தமிழகத்தின் குரல் இங்கே இருக்கிறது அவர்கள் போலித்தனமான அரைவேக்காடுகள் என உணர்த்தி.. தமிழகத்தின் குரலாய் ஒலித்தது தளபதியாரின் உரைவீச்சு.. .. சமீபத்திய தளபதியாரின் செயல்பாடுகளை உற்று கவனித்தால் புரிந்திருக்கும்.. தான் எடுத்துக்கொண்ட விடயத்தை முடிக்கிற வரை ஓயமாட்டார்.. இது கலைஞரிடமிருந்து கற்றது.. பெரியார் சொன்னார் கருணாநிதி எனது நேரடி சீடன் அவனிடம் ஒரு காரியத்தை ஒப்படைத்தால் அதை முடிக்கிறவரை ஊண் உறக்கமின்றி செயல்படுவான் என்றார்.. ஆம் தளபதியும் அப்படிதான் தன்னிடம் வழங்கப்பட்ட பொறுப்பை உணர்ந்து விரைந்தும் தெளிவாகவும் செயல்படுகிறார் .. முதல்வரை சந்தித்து தமிழகத்தை வறட்சிமாநிலமாக அறிவிக்கவேண்டுமென வலியுறுத்தி சாதிக்கிறார்.. இதோ பொங்கல் விடுமுறையை கட்டாயமாக்க வேண்டி போராட்டமென்கிறார்.. இப்போது சித்தாந்த எதிராளிகள்சபையில் அவர்களுக்கெதிரான ஆணியடிக்க /முழக்கமிட முடிந்தது.. .. இன்று நடந்த ஒரு சம்பவம்.. கலைஞர் அழைக்கிறார் என்றவுடன் விரைந்து செல்கிறார்..தளபதி இடைமறித்து சண்முகநாதன் ஒரு காகிதத்தை தருகிறார் அதில் கலைஞர் கைப்பட எழுதிய வரிகள்.. இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன் கண்விடல்.. .. வேறன்னவேண்டும். .. செயல்படும்தலைவரை இனம்காட்டிய #கலைஞருக்கு நன்றி!.. .. #எங்கள்கிரீடம்_நீ… .. ஆலஞ்சி மன்சூர்

Monday, January 9, 2017

இனத்தின் மீதான தாக்குதலை முறியடுப்போம்

ஒரு இனத்தை அழித்தொழிக்க வேண்டுமெனில் அதன் மீது கலாச்சாரபடையெடுப்பு நடத்தவேண்டும்.. ஆம் அதைதான் மெல்ல மெல்ல பாஜக அரசு செய்து வருகிறது.. திராவிட ஆரியர் போர் இன்று நேற்றல்ல ஏறக்குறைய ஈராயிரம் ஆண்டுகளாக நடந்துக்கொண்டுதானிருக்கிறது.. மெல்ல மெல்ல பிற கலாச்சார திணிப்பை, விநாயகர் சதூர்த்தி திபாவளி மகா சிவராத்தி ஹோலியென.. அதை தமிழின் திருவிழாப்போல நடத்தவைத்திருக்கிறது.. ஜாதி மதங்களை கடந்த பொங்கலை இந்துபண்டிகையை போல சித்தரித்ததும் காலபோக்கில் அது இனத்தின் பண்டிகையிலிருந்து வெளியேறி மதத்தின் சாயல் பூசப்பட்டதும் கூட ஆரிய சூழ்ச்சியன்றி வேறில்லை.. .. இப்போது ஆரியர்கள் அதிகாரத்தில் வந்ததும் நேரடியான தாக்குதலை தொடர்கிறார்கள்..ஜல்லிக்கட்டை தடைவிதிக்க மறைமுக ஆதரவை தந்தவர்கள் மிருகவதையை காரணம் காட்டியவர்கள் யானைகளை வீதிஉலாவிற்கு அழைத்துவருவதை மிருகவதையில் கொள்ளமாட்டார்கள்.. சிவராத்திரி விடுமுறை விடவேண்டுமென்பதற்காக பொங்கலை விடுமுறை பட்டியலிலிருந்து நீக்கி அப்பட்டமான மதவெறியை இனவெறியை காட்டியிருக்கிறது மத்திய அரசு.. மெல்ல இந்துத்துவா கொள்கைகளை தமிழர்கள்மீது திணிக்கும் செயலிது.. பொங்கல் பண்டிகை நீக்கி அந்த இடத்தில் மகா சிவராத்திரியை திணிக்கும் செயலை சத்தமில்லாமல் செய்திருக்கிறது.. தமிழினம் ஒன்றுபட்டு எதிர்க்கும் வேளை வந்துவிட்டது.. பாஜக அரசின் தமிழின விரோத போக்கை கடுமையாக எதிர்க்கவேண்டும்.. .. தமிழகத்தை ஆளும் பொம்மை அரசு லெட்டர் எழுதி தன் கடன் முடிந்துவிட்டதாக கருதுகிறது.. ஏறக்குறைய மிரட்டப்பட்ட நிலையில் அதிமுக அரசு மத்திய அரசின் தலையாட்டியாக செயல்படுகிறது.. இனஉணர்வோ மொழிஉணர்வோ சிறிதுமில்லாத கொள்ளையடிப்பதற்கும் கொள்ளையடித்ததை காப்பாற்றிக்கொள்வதற்கும் மட்டுமே அதிகாரத்தை பயன்படுத்த நினைக்கும் கேடுகெட்டநிலையில் தமிழக அரசு.. .. பிரதான எதிர்க்கட்சியான திமுக போராட்டத்தை அறிவித்திருக்கிறது.. அதில் அனைவரும் பங்கேற்கவேண்டும் .. நமது பகை ,அரசியல் ,கட்சி, கொள்கை, சாதி ,மதம் ,எல்லாவற்றையும் தாண்டி இனத்தின் மீதான தாக்குதலை கலாச்சார பண்பாட்டு மீதான தாக்குதலை முறியடிக்க ஒன்றிணைவோம்.. நம் கலாச்சாரத்தின் மீதான ஆரியதாக்குதலை முறியடிப்போம்.. .. #ஆரியத்தைவெல்வோம்.. .. ஆலஞ்சி மன்சூர்..

கலாச்சாரத்தின் மீதான காவிகளின் தாக்குதல்

மத்தியில் ஆளும் காவிகளின் அரசு.. தமிழர்கள் மீதான தாக்குதலை மெல்ல விரித்துக்கொண்டே வருகிறது.. முதலில் பண்பாட்டின் மீதான தாக்குதல் இப்போது கலாச்சாரத்தின் மீதான தாக்குதல்.. இவர்கள் ஏன் தமிழின மீதான தாக்குதலை தொடர்ந்துநடத்திவருகிறார்கள் என்பதை உணர்ந்தால் இவர்களின் பாசிச சிந்தனைகளை திணிக்கமுடியாமல் இருக்கிற ஒரே இனம் தமிழினம் என்பது புரியும்.. இதே அளவுகோலை பிற மாநில கலாச்சாரங்களின் மீது திணிக்கிறார்களா என்றால் இல்லை... கேரள அறுவடை திருநாள் என அறியபடுகிறது ஓணம் அதற்கு விடுமுறை இல்லையென்று அறிவிக்கவேண்டியதுதானே.. அறிவித்துவிட்டு அங்கே நடமாட முடியாது.. .. ஜல்லிக்கட்டின் மீதான தடையை ஏதோ விலங்கின் மீதான அக்கறை என நாம் நினைத்து அல்லது ஒரு சாராரின் திமிரின் வெளிபாடென நாம் வாய்மூடி இருந்ததே இன்றைக்கு நம் கலாச்சாரத்தின் மீது தாக்குதலை வெளிப்படையாக நடத்தியிருக்கிறார்கள்.. வடஇந்தியர்களின் பண்டிகைகளுக்கு விடுமுறை மறுக்கப்படுகிறதா என்றால் இல்லை.. நம் மீது திணிக்கப்பட்ட திபாவளியை பொங்கலை விட விமர்ச்சையாக கொண்டாடியதின் விளைவு இன்றைக்கு கட்டாய விடுமுறையில்லை அதாவது உங்களுக்கு உறைக்கிற மாதிரி சொல்லவேண்டுமெனில் சம்பளத்தோடு கூடிய விடுமுறை இல்லை.. ஆனால் கைரளியர்களை(மலையாளிகள்) பாருங்கள் அவர்கள் திபாவளியை கொண்டாடுவதில்லை மாறாக சாதிமதம் பார்க்காமல் ஓணத்தை கொண்டாடுகிறார்கள் அரசு கூட தன் ஊழியர்களுக்கு போனஸை (ஊக்கதொகை) திபாவளிக்கு வழங்காது ஓணம் பண்டிகைக்குதான் தரும்.. ஆனால் தமிழர்கள் தங்களின் அடையாளத்தை மெல்ல மெல்ல இழந்துவருகிறார்கள்.. அதன் வெளிபாடுதான் தைரியமாக ஆரியத்தால் அறிவிக்க முடிகிறது .. .. தமிழகத்தில் பலவீனமான அரசும் தட்டிகேட்க திராணியற்ற நிலையில் எடுப்பார்கைப்பிள்ளையான கதையாக செயலிழந்து நிற்கிறது.. இதை உடனே பிரதான எதிர்க்கட்சியான திமுகவின் தலைமையில் அனைவரும் இணைந்து போராடவேண்டும் தனித்தனியாக போராடுவோமென என வீம்புபிடித்தால் எதிராளிகள் தொடர்ந்து தமிழினத்தின் மீதான கவாச்சார பண்பாட்டு மீதான கொள்கைகள் மீதான தாக்குதலை தொடர்ந்துக்கொண்டே இருப்பார்கள்.. .. இது அப்பட்டமான ஒரு இனத்தின் மீதான தாக்குதல் சட்டரீதியாகவும் பொதுவெளியும் ஒருங்கிணைத்து எதிர்க்க வேண்டும் இல்லையேல் மெல்ல இனி தமிழனின் கலாச்சாரம் அழியும்.... #எச்சரிக்கை.. .. ஆலஞ்சி மன்சூர்...

Sunday, January 8, 2017

ஸ்டாலின்...

ஸ்டாலின் செயல் தலைவரானது கலைஞருக்கு தெரியுமா.. அன்புமணி.. முதலில் அவர் அறியாமலேயே திமுக ஜனநாயக இயக்கம் என்பதை ஒப்புக்கொள்கிறார்.. ஏனெனில் அதிமுக வின் அடுத்த கட்ட தலைவராக யாராரோ ஆசைபடும் போது கூட விமர்சிக்காமல் திமுகவை விமர்சிப்பதிலிருந்தே திமுக மக்களுக்கான இயக்கம் என்பதை உணர்ந்திருக்கிறார்.. அவரின் அக்கறையை வரவேற்போம்.. .. ஏறக்குறைய நீண்டநாட்களாக பேசபட்டுவந்த விடயம் ஸ்டாலின் பொறுப்பிற்கு வரவேண்டுமென்று அதுவும் கலைஞரே தலைவர் பதவிக்கு என்னை யாரையேனும் பரிந்துரைக்க சொன்னால் நான் ஸ்டாலின் பெயரைதான் முன்மொழிவேன் என மக்கள் அரங்கிலேயே வெளிபடையாக சொன்னார்.. பேராசிரியர் பெருந்தகை ஸ்டாலின் வருவது எனக்கு பாதுகாப்பு என்று சொன்னார் இந்த இயக்கத்தை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச்செல்ல ஸ்டாலின்தான் சரியான தலைவரென்றார்.. .. திமுக பொதுக்குழுவைப்பற்றி அறிந்திருந்தால் இந்த கேள்வியே எழாது.. கலைஞர் கலைந்துக்கொள்ளாத முதல் பொதுக்குழு பேராசிரியர் மிகவும் மன இறுக்கத்தோடே வீற்றிருந்தார்.. ஏறக்குறைய 2 மணிநேரம் திரு.ஸ்டாலினோடு விவாதித்து.. துரைமுருகன் சுப்புலெட்சுமி போன்ற முன்னோடிகள் காலத்தின் கட்டாயத்திற்கு வழங்கி நிற்கவேண்டுமென்று வலியுறுத்தி.. கலைஞரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு இயக்கத்தின் நான்காம் தலைமுறையை வார்த்தெடுக்க தளபதியை பணித்தார்கள்.. பொதுக்குழுவும் ஏகமனதாக ஏற்றது.. .. திமுக ஒன்றும் பாமக போல கொள்கை பிறழில் வந்த கட்சியல்ல நேற்றொன்று இன்றொன்று என மாறி மாறி பேசி திரிய இதொன்றும் சாதி சங்கமல்ல.. பொதுவாழ்வில் தன் சமுதாயமக்கள்முன் சத்தியம் செய்துவிட்டு பின் மாறி பேசி நிற்கும் தந்தையும் மகனும் அரசியல் பேசவே அருகதையற்றவர்கள்.. யாராக இருந்தாலும் திரு.ஸ்டாலின் செயல்பாட்டை அவர் கட்சியின் உயர்பதவிகளை அலங்கரிப்பதை கேள்வி கேட்க முடியாது.. ஏனெனில் நட்டதும் பூத்த ரோஜா அல்ல.. படிபடியாக வளர்ந்து பூத்து காய்த்து கனிந்து நிற்கும் பெருமரம்.. .. #திமுக_பேரியக்கம்_சாதி்கட்சியல்ல .. .. ஆலஞ்சி மன்சூர்

பாவம தமிழிசைகள்

இந்த வார்த்தை ஏதோ போகிற போக்கில் சொல்லிவிட்டு போனதல்ல.. திருமதி தமிழிசை நிறைய உளறியிருக்கிறார் அவையாவும் அவரின் அரசியல் ஸ்தரதன்மையை நிலைநிறுத்த என கருத்தில் கொண்டாலும் இன்றைய பேச்சு தன் முதலாளியின் வார்த்தை அப்படியே ஏற்று சொல்லும் அடிமையின் பேச்சை போல உள்ளது.. .. ஆர்எஸ்எஸ் சொல்படி கட்சியை நடத்துகிற பாஜக பிரதான முடிவுகளை எடுக்க நினைக்கிற போதெல்லாம் இதுபோன்று #பாவபட்டவர்களை கொண்டு வேவு பார்க்கும்.. அப்படிதான் தமிழிசையை கொண்டு நாடி பார்க்கிறது.. எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறைகூறுகிறீர்களே என்ற சொல் அடிதளம் அமைக்க பயன்படலாம்.. இதை யாரும் கண்டுக்கொள்ளாமல் இருப்பதலிருந்தே பாசிசத்தின் சொல் இங்கே மதிப்பிழந்து கிடப்பதாக தோன்றினாலும்.. தொடர்ந்து இதுபோல் நாடகம் அரங்கேறும் .. மெல்ல சிறகைவிரிக்க தொடர்ந்து முயலும்.. நாம் அவ்வப்போது சிறகை வெட்டிக்கொண்டே இருப்போம்.. மீறி எழுந்து பறக்க நினைத்தால் #தடிக்கொண்டு அடித்து சிறகொடிப்போம்.. .. இன்றைய அரசியல் சூழல் பாஜக பயன்படுத்த நினைக்கும் அதிமுகவின் பலவீனமான தலைமையும் , அதிமுகவிற்கிருக்கும் நாடாளுமன்ற பலமும் கருத்தில் கொண்டு இதைவிட்டால் வேறு சர்ந்தர்ப்பம் கிடைக்காதென்பதால் வெகு வேகமான செயல்பட நினைக்கிறது.. அதற்காக தான் ஒரு தகுதியுமில்லாத தீபாவை பார்பன ஏடுகள் பெரிதாக்கி காட்டுகின்றன.. ஆனால்.. இவையாவும் அடிபட்டுபோகும். காரணம் மிக சிரமத்தோடு கவனமாக சுயமரியாதை நிழலில் நின்று அந்த பெருங்கிழவன் திட்டமிட்டு செதுக்கியிருக்கிறான் அறிவின் துணைக்கொண்டு.. .. பாசிசம் தமிழிசை போன்றவர்களை கூர்படுத்தும் .. ஆனாலும் வீழ்த்தும் வல்லமை நமக்குண்டு.. மறைந்திருந்தே தாக்கும் பழக்கமும் ,மூடியகதவும் ,மடிக்கப்படாத படுக்கையும் மட்டுமே ஆயுதமாய் கொண்டவர்களின் அஜந்தா இங்கே பலிக்காது.. எத்தனை முகமூடி அணிந்துவந்தாலும் எவ்வளவு அரிதாரம் பூசி வந்தாலும் இங்கே எடுபடாது.. ஆரியமே.. .. #பாவம்தமிழிசைகள்.. .. ஆலஞ்சி மன்சூர்

Saturday, January 7, 2017

நாடக ராஜாக்கள்.

சசிகலா.. நடை உடை பாவனைகளை மாற்றி வருகிறார்.. நிறைய விமர்சனங்கள்.. வருகிறது வேலைக்காரிக்கு வந்த வாழ்வை பார்யா.. என்றெல்லாம் சில பெண்கள் சாலையோர பேருந்திற்காக நின்றிருந்திருந்த போது பேசுவதை கேட்க முடிகிறது.. திருமதி சசிகலா வேலைக்காரியாக இருந்ததால் வரகூடாது என்ற கேள்வியை ஏற்க முடியாது. ஆனால் திறமையும் தகுதியும் உள்ளவரா என பார்க்கவேண்டுமே தவிர அவர் எந்த தொழிலை செய்தால் என்ன.. ஏன் கலைஞரே தன் சாரதியை புதுச்சேரி முதல்வராக்கி அழகுபார்த்தவர்தான்.. .. ஆனால் நயவஞ்சகத்தால் உயரவர துடிக்கிறார்..என்பதுதான் இங்கே பிழையாய் நிற்கிறது.. பணத்தை மட்டுமே முதலீடு செய்து தமிழகத்தில் அதிகாரத்தை பெற்றுவிட முடியுமென்பதற்கு சமீபகால நிகழ்வுகள் போதும்.. இதில் ஜெயலலிதா சசிகலா கும்பலே மிகப்பெரிய சாட்சியம் வகிக்கிறார்கள்.. இதற்கு முன்பு வாக்கிற்கு பணம் கொடுக்கபடவே இல்லையா என்ற கேள்வி எழும்.. மறுப்பதற்கில்லை 60 களில் காங்கிரஸ் பேரியக்கத்தின் ஜமீன்கள் நிலகிழார்கள் .. ஏழைகளை குறிவைத்து பணவிநியோகம் செய்திருக்கிறார்கள் திராவிட இயக்கம் ஆட்சி பொறுப்பிற்கு வந்தபிறகு அது அதிகளவில் வழங்கப்பட்டது.. ஆனால் சில முக்கியமான காலகட்டங்களில் பணத்திற்கு வழங்கி நிற்காமல் ஆட்சியாளர்களை, அரசியல் கட்சிகளை தூக்கியெறிந்திருக்கிறார்கள்.. ஆனால் இப்போது தொகை அதிகமாகிற போது மனம் சஞ்சலபட்டு வழங்கி நிற்கிற கொடுமையை காண முடிகிறது.. இந்த ஈனசெயல் சசிகலா வகையறா போன்ற மாபியா கும்பல்களுக்கு எதையும் செய்துவிட முடியுமென்கிற துணிச்சலை தருகிறது.. வைகோ போன்ற நாணயமற்ற அரசியல்வாதிகளை... பணத்திற்காக எதையும் செய்யவைக்கிறது.. .. சில்லரை கட்சிகளை வழக்கம் போல் பணத்தை எதிர்பார்த்து நிற்கிறவரை சசிகலா போன்ற பினாமி குயின்கள் தூக்கி பிடிக்கபடுவார்கள்.. ஊடகங்கள் பணத்திற்காக தம்பிடித்து தூக்கிவைத்து ஆடுகிற அவலம் தொடரத்தான் செய்யும்.. மக்களின் மௌனம் இவர்ரளை பேயாட்டம் ஆடசெய்யும்.. இவர்கள் மீதான கோவத்தை மக்கள் வெளிப்படுத்துகிறவரை.. ஆடத்தான் செய்வார்கள்.. நிறைய அரிதாரம் பூசி வகைவகையாய் போஸ் கொடுப்பார்கள்.. தகுதியில்லாதவர்கள் புகழ்மாலை பாடினால் பதவி தருவார்கள் இவையாவும்,ஆட்சியும் அதிகாரமும் கையிலிருக்கும் வரை.. நாடகங்கள் அரங்கேறும்.. .. நாடகம் முடியும் போது..தெரியும்.. நாடகத்தின் ராஜபார்ட் என்று.. .. #நாடக_ராஜாக்கள்… .. ஆலஞ்சி மன்சூர்

இரு நிகழ்வுகள்

இரு நிகழ்வுகள்.. ஸ்டாலின் பரிதி இளம்சுருதி சந்திப்பும் சம்பத் சசிகலா சந்திப்பும். முதலில் இனோவாவை பற்றி பேசுவோம்.. நாஞ்சில் சம்பத் இவரது இலக்கிய கூட்டங்களை கேட்டிருக்கிறேன் தமிழோடு இவரின் வார்த்தைஜாலம் கட்டிப்போடும்.. இவரின் அரசியல் கூட்டங்களில் ஏறக்குறைய காளிமுத்துவைதான் ஞாபகம் படுத்துவார்.. திமுகவிலிருந்து பிரிந்து வைகோவோடு போனதும் இவரது நாணயம் போய்விட்டது.. நா நயம் மட்டுமே இவரை ஜெயலலிதாவோடு சேர்த்தது.. அதோடு இவரது நாவன்மை கேலிப்பொருளாக கிண்டல் செய்யுமளவிற்கு வந்தது .. கடைசியில் மரியாதை இழந்து விலைமகளைப்போல்.. கேவலப்பட்டு நிற்கிறார்.. அவரின் சமீபத்திய உளறல்கள் அவரின் நம்பகதன்மை காட்டும்.. சசிகலா ஏற்க மறுப்பதாக சொல்லி சில மணிநேர இடைவெளியில் சின்னம்மாவின் புகழ்பாடும் இவரின் செயல் அரசியல் அயோக்கியதனம்.. .. இளம் சுருதி.. இவரைப்பற்றி சொல்லவேண்டுமெனில் கழக முன்னோடி இளம்வழுதியின் பேரன் இன்னும் புரிகிறமாதிரி சொல்லவேண்டுமெனில் பரிதி இளம்வழுதியின் மகன்.. சிறிய பிணக்கம் கொண்டு சட்டென்று ஒருநாள் பரிதி திமுகவிலிருந்து பிரிந்துசென்று ஜெயலலிதாவிற்கு பூங்கொத்து கொடுத்த போது கொஞ்சம் ஆடிப்போனேன்..காரணம் திமுகவின் துணை பொதுசெயலாளர் வரை உயர்ந்து வந்தவர் எழுப்பூரின் செல்லப்பிள்ளை.. இக்கட்டான சூழலில் கூட கலைஞரோடும் இருந்தவர்... ஏதோவோரு சுந்தரபிணக்கு பெரிய இடைவெளியை தந்து அதில் சிலர் குளிர்காய இயக்கத்தை விட்டு சென்றார் அந்த நிலையில் கூட தளபதியோடு கரம் கோர்த்து நின்றவர் இளம்சுருதி.. .. .. கொண்ட கொள்கையில் தன் தாத்தனைப்போல உறுதியோடு இருந்தவர்.. இளைஞர் அணியில் பகுதி செயலராக பணியாற்றுகிறார்.. இவரைப்போன்றவர்கள் இனம்காணப்பட வேண்டும்.. நிச்சயமாக தளபதி இவரைப்போன்றவர்களை நம்பலாம்.. சம்பத் போன்ற அரசியல் பிழைகளை கட்சியில் சேர்க்காமல் தளபதி காட்டிய மிடுக்கு மிகவும் கவர்ந்தது.. அதேபோல் இளம்சுருதியோடு காட்டும் இணக்கமும் சிறந்த தலைமையை பறைச்சாட்டுகிறது.. .. #கொள்கைஉறுதியும்_அரசியல்பிழையும்.. .. ஆலஞ்சி மன்சூர்

Thursday, January 5, 2017

கலைந்து செல்லும் மேகம்..

சசிகலா நடராஜன் அரசியல் சாபகேடு என்றார் நண்பர் ஆமாம் என்றேன்.. உடனே பெண்கள் அரசியலுக்கு வருவதற்கு எதிர்ப்பாக மாறிவிடாதா அல்லது சாமானியர் பொதுவாழ்விற்கு வருவதை மறுப்பது போலாகாதா என்றார்.. .. அப்படியில்லை.. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் பொதுவாழ்வில் அர்ப்பணிப்போடு மக்கள்பணியாற்றலாம் ஆனால் அது நேர்மையான பிரவேசமாக இருத்தல் வேண்டும்.. நோக்கமும் செயலும் நேர்மையானதாக.. படிப்படியான மக்கள் சேவையின் மூலம் அமைந்ததாக இருந்தல் வேண்டும்.. செல்வி ஜெயலலிதாவின் அரசியல் பிரவேசம் கூட ஏறக்குறைய அப்படிதான் அமைந்திருந்தது.. அரசியலுக்கு எம்ஜிஆர் அழைத்துவந்த போது சிறுசேமிப்பு துறையில்தான் சிறியதொரு பதவி தந்தார்.. ஏன் எம்ஜிஆரின் அரசியல் பிரவேசத்தில் முதன்முதவில் சிறுசேமிப்புத்துறைத்தலைவராக தான் நியமித்தார் கலைஞர்.. ஜெயலலிதா படிப்படியாக கொ.ப.செ. என தொடங்கி எம்பியாகி.. எம்ஜிஆர் மறைவிற்கு பிறகு போராடி அதன் நின்று கட்சியின் பொதுசெயலரானார்.. ஆனால் சசிகலா அப்படியில்லை.. ஏதோ கம்பெனி முதலாளி இறந்துபோனால் அதிக பங்குகளை வைத்திருக்கும் பங்குதாரர் கம்பெனி எம்.டி ஆவதுபோல சசிகலா பணத்தை வைத்து கட்சியை கட்சியின் முக்கியஸ்தர்கள் என்று சொல்லபடுகிறவர்களை (இங்கே யாரும் முக்கியஸ்தர்கள் இல்லை எல்லோருமோ பூஜ்யங்கள் என்பது வேறுவிடயம்) வாங்கி கட்சியை முதல்வர் பதவியை கைப்பற்ற எண்ணுவதை யாருமே விரும்பவில்லை குறிப்பாக அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்கள் கூட.. அதுதான் உண்மை.. .. இப்போதெல்லாம் உடனடியான தீர்வு அல்லது பலன் வேண்டுமென்று எண்ணுகிற அவசரம் சசி போன்றவர்களை உருவாக்குகிறது என்று நினைக்கிறேன்.. ஆனால் சசிகலா நீண்டகாலமாக திட்டமிட்டே இதை அடைந்திருக்கிறார்.. ஆனால் ஜெயலலிதா சிறிய பதவியை கூட தராமல் அவரை வைக்கவேண்டிய இடத்தில் வைத்திருந்தார் .. ஆட்சி அதிகாரம் பணமிருந்தால் யார் வேண்டுமானாலும் வரலாமென்பதை காட்டுகிறதே தவிர பொதுவாழ்வில் அர்ப்பணிப்பு கொஞ்சமும் இல்லை.. .. இவர் போன்றவர்கள் காலபோக்கில் கரைந்து போயிருக்கிறார்கள் இவர்.. மழை தரும் மேகமல்ல.. கலைந்து செல்லும்.. மேகம்.. .. #கானல்நீர்.. .. ஆலஞ்சி மன்சூர்...

Wednesday, January 4, 2017

காலம் இட்ட கட்டளை..

The Leader.. தலைமை பதவி எளிதில் கிடைப்பதில்லை அப்படி கிடைக்குமெனில் அது அறிவார்ந்த கூட்டத்தின் தலைமை அல்ல.. வேறுயாருமில்லாயா என சிலரின் கேள்விகளில் நியாயம் இருப்பது போல் தோன்றும்.. ஆம்.. தலைவர் பதவிக்கு தகுதியான ஆட்கள் நிறைய பேரை கலைஞர் உருவாக்கியிருக்கிறார் என்ற உண்மையும் இதில் வெளிப்படும். இங்கே அடிமைகள் இல்லை திறமையானவர்கள் கூட்டமிது அதனால் இந்த கேள்வி எழுகிறது.. அதோடு இங்கே டவாலிகள் கலெக்டராக முடியாது.. .. ஒரு இயக்கத்தில் அல்லது போராட்ட களத்தில் நிறைய செயல்வீரர்கள் இருப்பார்கள் எல்லோருமே திறம்பட செயல்பட்டு எதிரியை நிலைக்குலைய செய்யும் ஆற்றல்படைத்தவர்கள்..வியூகம் அமைத்து திறம்பட செயல்படுவோர் எண்ணிக்கையில் அடங்காதோர் இயக்கத்தில் உண்டு.. தலைமை பதவிக்கு வர இங்கே எல்லோருக்கும் தகுதியும் திறமையும் உண்டு.. அன்பின் மிகுதியில் ஆளுமை திறனை கருத்தில் கொண்டும் ஒற்றுமையாய் ஒருங்கிணைந்து செயல்பட தலைமைக்கு தேர்வு செய்யப்படவேண்டும் கால சூழலும் கருத்தில் கொண்டு எதை எப்போது எவரை கொண்டு செய்து முடிக்க முடியும் ஆய்ந்து அவரை தேர்வு செய்தல் வேண்டும்.. அய்யன் வள்ளுவன் சொன்னதைப்போல #இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண்விடல்.. .. திமுக பொதுக்குழு தலையாட்டிக்கள் சபையல்ல.. மேசைதட்டி ஆராவராம் செய்யும் அடிமைகள் கூட்டமல்ல அறிவுடையோர் சபை.. இங்கே எல்லோரும் கேள்வி எழுப்பலாம் ,எதிர்கருத்தை தைரியமாக சொல்லலாம்.. செல்லப்பட்ட வரலாறுகள் உண்டு அதை சரியென்றால் ஏற்று திருத்தம் செய்யபட்ட சரித்திர நிகழ்வுகளும் உண்டு.. அதைத்து அதிகாரத்தையும் தலைவருக்கு வழங்கும் அதிகாரஅமைப்பு அது.. அதனால் தான் நீண்டநாட்களானது.. நிறைய பேரின் ஆவலை பூர்த்தி செய்ய திரு.ஸ்டாலினை செயல்தலைவராக தேர்வு செய்திட...ஆம்.. #செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு எய்த உணர்ந்து செயல். என்றான் வள்ளுவன்.. அதாவது.. செயலாற்ற வல்லவனைத் தேர்ந்து, செய்யப்பட வேண்டிய செயலையும் ஆராய்ந்த, காலமுணர்ந்து அதனைச் செயல்படுத்தவேண்டும்.... அதைதான் பொதுக்குழு இப்போது செய்துமுடித்திருக்கிறது. .. தலைவர்கள் தானாக திடீரென்று உருவாவதில்லை.. காலம் தீர்மானிக்கும் இவனே சிறந்த தலைவன் என்று.. அப்படி காலம் காத்திருந்து தந்த தலைவனை மக்கள் இருகரம் தட்டி வரவேற்பர் .. எதிரிகளும் இவரே தலைமைக்கு தகுதியானவர் என்பர்..ஆம்.. எதிராளிகளும் எதிர்கருத்தை கொண்டோரும்.. கருத்து வேறுபாட்டால் நிற்போரும் தளபதி தலைவரானதை மகிழ்வோடு ஏற்கிறார்கள்.. பெரும்மகிழ்ச்சி எமக்கு.. .. திரு.ஸ்டாலின் காலத்தின் கட்டளை.. .. ஆலஞ்சி மன்சூர்

செயல்தலைவர்

இவ்வளவு நேரம் நான் அமைதியாய் இருந்ததில்லை உணர்வு என்னை மௌனமாக்கியது.. தம்பி..வா.. தலைமையேற்க வா என்ற போது கண்ணீர் சுரந்தது.. தலைவருக்கான அனைத்து அதிகாரமும் பெற்ற #செயல்தலைவர்.. தலைவரை காண முடியவில்லை என்கிற மன அழுத்தம் என் உயிரினும் மேலான ‍... கரகரக்குரலோடு காந்தம் போல் கவர்ந்திழுக்கும் ஈர்ப்பை காண/கேட்க முடியாது போனது என்னுள் ஏதேதோ செய்தது.. .. வாழ்த்துக்கள் தளபதியே.. இனி செயல் தலைவரென்றே அழைப்போம்.. ஆனாலும் தலைவரின் தளபதியாய் வலம் வருவீர்.. திடீரென ஒருநாளில் செயலாளராக ஆகவில்லை நீர்.. நிறைய படிகளை கடந்து இந்த உயரத்தை எட்டியிருக்கிறீர்.. இக்கட்டான சூழலில் நிறைய சுமைகளை தலையில் சுமக்கவேண்டியிருக்கிறது.. இனி எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் எதிர்காலத்தை நமதாக்கும் .. எதிரிகளை நிலைகுலைய செய்யும்.. ஆற்றல் நமக்கு உண்டு.. திராவிட இயக்கத்தின் நான்காம் தலைமுறையை முன்னெடுக்க காலம் கனிந்து தானாய் தந்திருக்கிறது.. .. தமிழகம் சூன்யமாகி நிற்கும் வேளையில் தலைமைக்கு வந்திருக்கிறீர்.. நிறைய வேலைகள் பாக்கியிருக்கிறது முன் எப்போதுமில்லாத வேகத்தோடு.. கலைஞரின் வியூகத்தோடும்.. நமக்கு உரிய விவேகத்தோடும்.. திராவிடனுக்கே உரிய அஞ்சாமையோடும்.. களத்தில் வெற்றியை குவிப்போம்.. இனி அஞ்சுவதில்லை எவர்க்கும் .. கண்முன் வெற்றியின் இலக்குமட்டுமே.. எதிரிகள் பலமிழந்து நிற்கிறார்கள் நிலைகுலைய செய்வோம்.. தலைகுனிந்து நிற்கும் தமிழனை தலைநிமிர்ந்து தன்மானத்தோடும் திமிரோடும் நடைபோட செய்வோம்.. தமிழுக்கும் இனத்திற்கும் அரணாய்..தமிழ் மக்களின் நம்பிக்கையாய் வீறுநடைபோடுவோம்.. .. தங்கதளபதியே.. எங்கள் இனத்தின் காவலே.. எங்களின் செயலே.. வழிநடத்துத்துங்கள்.. தமிழகம் நிமிரட்டும்.. #இளஞ்சூரியனே.. வாழ்த்துகள்.. .. ஆலஞ்சி மன்சூர்....

Tuesday, January 3, 2017

ஜல்லிக்கட்டு தடையை நீக்கு..

ஜல்லிக்கட்டு.. திரு.பொன்.ராதா அவர்கள்.. ஜல்லிக்கட்டிற்கான போராட்ட களம் வாடிவாசல் அல்ல டெல்லி தான் என்கிறார்.. நன்று .. இரண்டாண்டுகளுக்கு முன்பு திரு.ஸ்டாலின் ஜல்லிக்கட்டு வேண்டி போராட்ட அறிவிப்பை வெளியிட்டபோது திமுக தலைமைக்கு கடிதம் எழுதி பொறுத்துக்கொள்ளுங்கள் எப்படியும் இந்தாண்டு ஜல்லிக்கட்டை நடத்திவிடலாமென கூறியது தாங்கள் தானே.. அப்போது இங்கே வாடிவாசலில் போராடாதீர்கள் என ஏன் சொல்லவில்லை.. தொடர்ந்து இரண்டாடுகளாக இதோ இந்தாண்டு நடத்திவிடுவோம் என பொய்யுரைப்பது தாங்களும் தங்கள் சகாக்களும் தானே பொன்னார் அவர்களே.. இதை சொல்லும் போது கூசவில்லையா.. .. நிறைய பேர் ஏன் பாஜகவினர் கூட திமுக ஆட்சியில்தானே உச்சநீதிமன்றம் தடைவிதித்தது என்கிறார்கள் ஆனால் தடையை தளர்த்தி /மீறி தொடர்ந்து ஜல்லிக்கட்டை நடத்திக்காட்டியதை பேச மறுக்கிறார்கள்.. சில நிபந்தனைகளை மீறிவிட்டதாக peta அமைப்பு உச்சநீதிமன்றத்தை அணுகுகியதும் பாஜகவின் மேனகாகாந்தி தொடர்ந்து தடைக்காக போராடியதும் இவர்கள் வசதியாக மறந்து போகிறார்கள்.. .. ஆறு ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் அவர்கள் சொத்து வழக்கையும் பிற வழக்குகளையும் கவனித்துவந்தார்களே தவிர .. அதோடு இல்லாமல் எல்லாவற்றையும் நீதிமன்றத்தின் மூலமே தீர்த்துக்கொள்ளலாமென்ற விவரகேடுமே காரணம் .. மத்திய ஆட்சியாளர்களுக்கு அழுத்தம் தந்து தடையை ஓரேயடியாக நீக்க முடியாவிட்டாலும் தளர்த்தி நடத்தி காட்டியிருக்கலாம்.. பாவம் அவர்கள் தலைமீது தொங்கும் கத்திக்கு அஞ்சியே ஆட்சி நடத்தவேண்டிய அவலம்.. .. இப்போது கூட திருமதி தமிழிசை போன்றோர் தேன்தடவிய வார்த்தை சொல்லி நம்பவைத்து கடைசியில் நீதிமன்றம் மறுக்கிறது என சொல்லி ஏமாற்றுவதையே வழக்கமாக்கி கொண்டிருக்கிறார்கள்.. சட்டதிருத்தத்தை இரண்டாண்டுகளில் கொண்டுவந்திருக்கலாம்.. அதை செய்ய மறுப்பது ஏன் .. .. தளபதியாரின் அலங்காநல்லூர் போராட்டம்.. மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.. லட்சக்கணக்கானோர் கலந்துக்கொண்டிருப்பதலிருந்தே மக்களின் உணர்வுகளை புரிந்துக்கொண்டு தடையை தளர்த்தி இந்தாண்டே நடத்த வழிவகை செய்யவேண்டும்.. தமிழர்களின் பண்பாட்டின் மீதான தாக்குதலை இந்த பாசிச பாஜக அரசு கைவிடவேண்டும்.. அமைதியாக இருப்பதாக எண்ணிக்கொண்டிருப்பதாக எண்ணவேண்டாம் நீறுபூத்த நெருப்பாக .. தமிழர் நெஞ்சில் புகைந்துக்கொண்டிருக்கிறது.. அது எரிமலையாய் ஆவதற்குள்.. ஜல்லிக்கட்டின் தடையை நீக்க மத்திய அரசு முயலவேண்டும்.. .. #ஜல்லிக்கட்டுதடையை_நீக்கவேண்டும்.. .. ஆலஞ்சி மன்சூர்

Monday, January 2, 2017

ஜெயலலிதாவின் துரோகிகள்

மக்கள் பன்னீர் செல்வத்திற்கு வாக்களிக்கவில்லை தம்பிதுரை.. ஒரேயொரு சந்தேகம் சசிகலாவிற்கு வாக்களித்து தேர்வு செய்தார்களா என்பதை தம்பி விளக்கவேண்டும்.. அரசியல் அநாதையாகவே காலம் தள்ள முடிவெடித்துவிட்டபிறகு அவர்களிடம் அறிவார்ந்த விளக்கங்களையோ நேர்மையான பதிலையோ எதிர்பார்க்கமுடியாது.. திடீரென சிலர் தமிழச்சியை ஆதரிக்கவேண்டும் என்கிறார்கள்.. சரி இதுவரை ஜெயலலிதாவை எதன் அடிப்படையில் ஆதரித்தீர்கள்.. அப்போது தமிழரல்லாத ஆரிய மங்கையென தெரியவில்லையா.. .. ஜெயலலிதா முன் பேசவே அஞ்சிய வளர்மதி ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா மட்டும் அப்ரூவராக மாறியிருந்தால்.. அம்மாவின் கதை எப்போதோ முடிந்திருக்கும் என்கிறார்.. இதிலிருந்தே இவர்களின் உண்மையாக முகம் கொடூரமானது என்பது தெரிகிறது.. அதிமுகவிற்குதான் வாக்களித்தார்கள் ஜெயலலிதாவிற்காக அல்ல என தம்பிதுரை சொல்வது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்.. அப்படியே அதிமுகவிற்காக தான் எனில் ஏன் தேர்தலை சந்திக்க கூடாது அப்போதும் அதிமுகதானே இருக்கும்.. மக்கள் அதிமுகவிற்கு வாக்களித்து உங்கள் புதிய சின்னம்மாவை ஆட்சியில் அமர்த்தலாமே.. .. இவர்களின் செயல்களை பார்க்கும் போது மறைந்த ஜெயலலிதா பாவம் என்று தோன்றுகிறது.. கலப்படமற்ற சுயநலமற்ற நட்பை/உறவை நான் என் வாழ்நாளில் சந்தித்ததே இல்லையென்ற ஜெயலலிதாவின் வார்த்தை எத்தனை நிஜமானதென்று எத்தனை வலிகள் அந்த சொல்லில் என புரிந்துக்கொள்ள முடிகிறது.. மிக மோசமான சுயநல கிருமிகளோடே வாழ்ந்திருந்திருக்கிறார்.. சுற்றியிருந்தவர்கள் பதவிக்காக எதையும் செய்ய துணிந்தவர்கள் என்பதை அறிந்துதான் அடிமைகளாகவே வைத்திருக்கிறார்.. .. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுககாரர்களின் முகம் தெளிவாக தெரிகிறது பணம் சம்பாதிக்கவேண்டும் அதற்காக இறுதி சந்தர்ப்பம் இது இதைவிட்டால் இனி எப்போதும் நடக்காது/முடியாது என்பதை உணர்ந்து எந்த நிலைக்கும் செல்ல தயாராக இருக்கிறார்கள்.. மானம் மரியாதை கௌரவம் தான் வகிக்கும் பதவியின் மரியாதை எதைவேண்டுமானாலும் அடகுவைக்க தயாராகும் கூட்டமிது.. நோக்கம் சம்பாதிக்கவேண்டும் சுரண்டியதை காப்பாற்றிக்கொள்ளவேண்டும் வேறொன்றுமில்லை... இவர்களை இப்படியே அனுமதிப்பது.. மாபெரும் இழிவு தமிழ்நாட்டிற்கு ஏற்படும்.. .. ஜெயலலிதா தன் வாழ்நாளில் எது சரியாக இருந்ததோ தெரியவில்லை..ஆனால் சரியான நேர்மையான எதிரியை பெற்றிருந்தார்.. ஆம் திமுகழகமும் கலைஞரும் நேர்மையான எதிர்கட்சியாக எதிராளிகளாக இருந்திருக்கிறார்கள்.. .. #ஜெயலலிதா_துரோகிகளோடே_வாழ்ந்திருக்கிறார்… .. ஆலஞ்சி மன்சூர்