Friday, September 16, 2016

எம் எஸ்

எம் எஸ்.சுப்புலெட்சுமி.. மதுரை சண்முகவடிவு சுப்புலெட்சுமி.. இன்று நூற்றாண்டு காணும் இசைக்குயில். மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பிறந்த கர்நாடக இசை உலகில் கொடிகட்டி பறந்தவர்.. இசைவேளாளரில் ஒரு பிரிவினர் தாயின் பெயரையே தங்கள் பெயரோடு இணைத்துக்கொள்வர் அப்படி தன் தாயின் பெயரை இன்சியலாக்கி கொண்டு வலம் வந்தவர் எம் எஸ் சுப்புலெட்சுமி அம்மையார்.. .. கடைசிவரை மங்காத குரல் வளத்தோடு வலம்வந்தவர் தன் உதவியாளராக இருந்த சதாசிவ அய்யரை திருமணம் செய்துக்கொண்டார் .. கல்கி கிருஷ்ணமூர்த்தி விகடனிலிருந்து வெளியேறி கல்கியை துவங்க பணமில்லாமல் அல்லாடியபோது சதாசிவம் சுப்புலெட்சுமியை நாரதர் வேடத்தில் நடிக்கவைத்தார் அதில் கிட்டிய பணம் கொண்டுதான் கல்கி உருவானது.. கல்கி சதாசிவமானார்.. .. இசை உலகில் தனி ஆவர்த்தனம் செய்தவர் இவரோடு வந்த திருமதி பட்டம்மாள் எம் எல் வசந்தகுமாரி போன்றோரெல்லாம் காலபோக்கில் விலகிவிட கடைசி வரை கச்சேரி செய்தவர்.. காற்றினிலே வரும் கீதம் இன்றும் எல்லா கச்சேரிகளிலும் எல்லா கலைஞர்களும் பாட மறப்பதில்லை.. சென்னை சங்கீத் அகாதமி என்று நினைக்கிறேன் நண்பர் சந்திரசேகரோடு சென்றிருந்தேன்.. சில கீர்த்தனங்களை தெலுங்கில் பாடிக்கொண்டிருந்தார்.. அரங்கம் சலசலப்பாக இருந்தது.. சிறிது நேரத்திற்கு பிறகு குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா என்றார்.. அரங்கம் அவ்வளவு அமைதியாக ரசித்தது.. .. கலைஞர் பெருமகனோடு சிநேகம் காட்டியவர் அமைதியான வாழ்வும் அற்புதமான இசையோடு வலம்வந்தவர்.. நிறைய உயரிய விருதுகள் இவரால் பகழ்ப்பெற்றது..இன்றைக்கும் கர்நாடக இசைகச்சேரிகளில் ஒன்றிரண்டு தமிழ்பாடல்கள் ஒலிக்கிறதென்றால் அதன் முழு கிரிடிட் இவருக்குதான்.. எல்லா கச்சேரிகளிலும் தமிழ்பாடல்கள் பாடாமல் இருந்ததில்லை.. பிற்படுத்த சமூகத்திலிருந்து வந்து உயரிய இடத்தில் இசைத்துறையில் பெருவதென்பது கொஞ்சம் சிரமமான காலத்தில் அதுவும் #மூன்று_இசைபெண்மணிகளில் முதன்மையானவராய் இருந்தார்.. .. கலைஞர் மொழியில் சொல்லவேண்டுமெனில் #இசையரசி.. #எம்எஸ்சுப்புலெட்சுமி_நூற்றாண்டு… .. ஆலஞ்சி மன்சூர்

No comments:

Post a Comment