Monday, September 5, 2016
இலவச ஊழல்
இலவசங்களில் ஊழல்
ஜெயலலிதா அரசு இட்லி முதல் மடிகணனி வரை ஊழல் செய்திருப்பதாக மத்திய கணக்கு தணிக்கை துறை அறிவித்திருக்கிறது..
மின் வாரியத்தில் மட்டும் ₹5 க்கும் குறைவாக கிடைக்க கூடிய மின்சாரத்தை ₹ 7.20 வாங்கியிருக்கிறது இதில் மட்டும் ₹11679 கோடி இழப்பை ஏற்படுத்தியிருக்கிறது இதில் எவ்வளவு கமிஷன் கிடைத்திருக்கும் மாணவர்களுக்கு மடிகணனி லேப்டாப் வாங்கியதில் மட்டும் ₹242 கோடி ஊழல்..
இலவசமாக வழங்கப்பட்ட மிக்ஸி கிரைண்டர் மின்விசிறி .. எல்லாம் தரமில்லாத பொருட்களாக வாங்கி மிகப்பெரிய மோசடி நடந்திருக்கிறது..
என சிஏஜி அறிக்கை சொல்கிறது..
இதை ஊடகங்கள் வேண்டுமென்றே மறைக்கின்றன..
..
எதிலும் வெளிப்படையில்லாத நிர்வாகம்..
திறமையில்லாத முதல்வர் அதிகாரத்தில் வெளிநபர் தலையீடு இவையெல்லாம் மிகபெரிய ஊழலுக்கு காரணமாகி இருக்கிறது.. அம்மா கடை இட்லியில் கூட கொள்ளையடிக்கிற கூட்டம்..
..
திமுக ஆட்சியிலும் இலவசமாக டெலிவிஷன் கொடுக்கப்பட்டது ஆனால் அதை வெளிப்படையான டெண்டர் விடப்பட்டு அனைத்துகட்சி பிரமுகர்கள் அடங்கிய குழுவின் முன்னிலையில் திறக்கப்பட்டு மிக சிறந்த நிறுவனங்களிடமிருந்து ஆர்டர் கொடுத்து பெற்று விநியோகம் செய்யப்பட்டது..
ஒரு வெளிப்படையான ஊழலுக்கு முறைகேடுகளுக்கு இடம்தராத திட்டமாக இருந்தது..
ஆனால் ஜெயலலிதா அறிவித்த இலவசங்கள் விநியோகம் மர்மமானதாகவே இருந்தது எங்கிருந்து எவ்வளவு தொகைக்கு பெறப்பட்டது ..யார் யாரெல்லாம் டெண்டரில் பங்குபெற்றார்கள் என்பதை சிதம்பர ரகசியம் போல் இருந்தது இப்போது ஒவ்வொன்றாக வெளிவர தொடங்கியிருக்கிறது.. மிகப்பெரிய மோசடியை கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் செய்திருக்கிறது ஜெயலலிதாவின் தலைமையிலான அரசு..
..
ஊழல் கொள்ளை ஜெயலலிதாவிற்கு புதிதல்ல டான்சி தொடங்கி சொத்துகுவிப்பு வரை தண்டனை பெற்றும் கொஞ்சம் கூட கவலையோ வருத்தமோ கொள்ளாமல் கொஞ்சம் கூட வெட்கப்படாமல் மக்களை விலைபேசி வாங்கிவிடலாமென்ற ஒரே ஒரு நம்பிக்கையோடு வலம் வருகிறவர்.. இந்தியாவில் பதவியில் இருக்கிற போதே தண்டிக்கப்பட்ட #கவரிமான் பரம்பரை.. நடுத்தரமக்களுக்காக குறைந்த செலவில் ஒரு ரூபாய் இட்லி என சொல்லி கோடிகளில் கொள்ளையடிக்க தெரிந்தவருக்கு..எத்தனை சிஏஜி அறிக்கை வந்தாலும் கவலையில்லை.
..
#இலவசங்களில்_இலவசமாய்கொள்ளை..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment