Tuesday, September 6, 2016
காவிரி
கர்நாடகம் தர உத்தரவிட்டிற்கிற 13 டிஎம்சி.. வினாடிக்கு 15000 கனஅடிவீதம் 10 நாட்கள் .. அதுவும் ஒழுங்காக வந்தால் 13.4 டிஎம்சி கிடைக்கும்.. குடிநீர் மற்றும் பிற தேவைகளுக்கு போக மீதமுள்ளதை கொண்டு கடைமடை தவிர்த்து சம்பா பயிரிடலாம்.. இப்போதே காலம்தாழ்ந்த நிலைதான்.. எப்போதுமே முதல்மடை பகுதியினர் கரையோர விவசாயநிலங்கள்/ விவசாயிகள் பெரிதாக கண்டுக்கொள்வதில்லை .. வெள்ளப்பெருக்கிலோ,மழை வெள்ளத்திலோ எப்போதும் பாதிப்படைகிற திருவாரூர் நாகை ..கீழ்தஞ்சை பகுதி விவசாய நிலங்கள்..
தண்ணீர் இன்றி வருடாவருடம் விவசாயம் பொய்த்து போகிறது..
முதல் மடை பகுதி ..அதாவது காவிரி மற்றும் பிரதான கிளை ஆறு வெண்ணாறு குடமுருட்டியின் முதல் பாசன பகுதி மட்டுமே இரண்டரை லட்சம் ஹெக்டர்.. நாகை திருவாரூர் மற்றும் கீழ்தஞ்சை பகுதிகள் சென்ற ஆண்டு சம்பா பொய்தத்து ..இந்த ஆண்டும் அதே நிலைதான்.. நீரை வீணடிக்காமல் முறை பாசனம் வைத்து பகிர்ந்தால் மேற்சொன்ன இரண்டரை ஹெக்டர் பயிரிடலாம் கொஞ்சம் மழையும் கைக்கொடுக்கவேண்டும்..
..
எட்டு டிஎம்சி நீரில் ஒன்றும் செய்யமுடியாது மழை வந்து காப்பாத்தணும் இல்லையென்னா கொண்டுபோகணும் அதுதான் தமிழக விவசாயிகளின் இன்றைய நிலை.. நதிநீரை சரியான முறையில் கொண்டு செல்ல இன்னும் கால்வாய்களும், வாய்கால்களும் தூர்வாறப்படவில்லை..எப்போதுமே காலகடந்த சிந்தனையும் செயலும் ஒன்றுக்கும் உதவாது..வருடாவருடம் இதை பேசியே காலம் கடத்தினால் தஞ்சையில் இனி வயல்வெளி போய் கட்டங்களும் வீட்டுமனைகளும் தான் காட்சி தரும்..
..
#காலம்கடந்த_ஞானோதயம்..
..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment