Monday, September 19, 2016

ஆடுகள் ஜாக்கிரதை

கடக்கநினைக்கிறேன் வம்பிற்கு இழுக்கிறீர்.. ஆசை காட்டி. என்னை வலையில் சிக்கவைக்கிறீர் .. நானறிவேன்.. வழிநெடுக ஓநாய்களின் ஊளையிடல் கடித்து குதறும்.. ரத்தம் குடிக்காமல் விடாது.. .. பார்பதற்கு கொஞ்சம் அழகானதால் .. ரசித்து தொலைத்தேன்.. பின்னால்... மின்சாரகம்பிகளை கடக்கவேண்டியிருக்குமென அறியாமல் போனேன்.. .. கறுப்பாய்.. கொஞ்சம் கலையாய் உழைத்து உழைத்து திமிரேறிய உடலாய் இருந்தது குற்றமா.. பார்த்ததும் ரசித்ததும்.. கொஞ்சம் சிரித்ததும் அவ்வளவு பெரிய இழிசெயலா.. .. இழிவானவன் என்கிறீர்.. உங்கள் செயல் அதனினும் இழிவானதை யாரறிவார்.. சிலநேரம் சில்லறை சில்மிஷங்கள் சிக்கலாய் போகுமென.. யாரறிவார். .. பாவங்களின் தலைகள் மீது உங்கள் பாதங்கள்.. சிறிய நூல் கொண்டு #சிரச்சேதம் செய்யலாம் இரும்பு கம்பிகளை சிறிய நூல்கொண்டு அறுக்கலாம் இங்கே.... நீதி நூல்களை சிறிய நூல் கொண்டு கட்டலாம்.. #நூல்_வலிமையானது.. .. வழிநெடுக ஓநாய்கள்... .. #ஆடுகள்_ஜாக்கிரதை… ************************** ஆலஞ்சி மன்சூர்

No comments:

Post a Comment