Sunday, September 4, 2016

ஆசான்

#ஆசான்.. நிறைய பேரை எழுதவேண்டிவரும்.. என்னுள் அகரத்தை எழுதிய பூலாபாய் தொடங்கி.. .. ஒரு குழந்தையின் முதல் ஆசான் தாய்.. தாயிடமிருந்து 3000 சொற்களை பள்ளிக்கு செல்வதற்கு முன்பே கற்றுக்கொள்கிறது குழந்தை.. அறத்தை அன்பை அர்ப்பணிப்பை அக்கறையோடு நம்மில் விதைக்கிற தாயே நம் முதல் ஆசான்.. பள்ளிகளில் போதிக்காத நிறைய விடயங்களை தாய் தன் செய்கையில் போதித்துவிடுவாள். அன்பின் மிகுதியால் நம்மை வழிநடத்தி சரிசெய்ய மறந்து போவாள்.. .. #பள்ளி.. ஆரம்பத்தில் பயத்தையும் பின் அக்கறையும் அறிவுசுடர் கொண்டு நம்மில் விதைக்கிற.. இல்லையில்லை நடுகிற இடம்.. நாற்றை பிடிங்கி வேறிடத்தில் நடுவதைப்போல பாத்திக்கட்டி பயிரை காப்பது போல வீணான களைகளை களைந்து .. நம்முள் நம்மை அறியாமல் வந்துவிழும் கொல்லிகளை.. கெட்டவிடயங்களை கொன்று நம்மை செழிப்போடும் சிறப்போடும் வளர்த்தியெடுக்கும் நெடுவயல்.. .. #ஆசான். நம்முள் அறிவெனும் விதையை விதைக்கிறவர்கள்.. அது சரியாக விளைகிறதா என நம்மை கவனித்து அடுத்த நிலைக்கு கொண்டுபோகும் அறம் செய்பவர்கள்.. ஆசிரியர்பணி அறப்பணி.. கற்பித்தல் எனும் அரிய சேவையாற்றுகிறவர்கள்.. .. என் ஆசான்கள் அறிவில் சிறந்த சான்றோர்கள்.. அன்பை அறிவை பகுத்தாயும் திறனை சுயமரியாதையை..சோர்ந்துவிடாமல் இயங்கும் ஆற்றலை எனக்கு கற்றுதந்தவர்கள்.. மிகசிறந்த நல்லாசிரியர்களோடு நட்போடுபழகும் வாய்ப்பினை பெற்றிருக்கிறேன்.. அன்பிற்குரிய அறிவாசான்கள்.. .. இந்த ஆசிரியர் தினத்தில் என்னை செம்மைப்படுத்தி வாழும் வழிமுறையை அறத்தோடும் அன்போடும் ஈகை குணத்தோடும் கற்றுதந்த.. என் முதல் ஆசான் எங்கள் தாயாரின் நினைவோடு.. .. ஆலஞ்சி மன்சூர்

No comments:

Post a Comment