Tuesday, September 6, 2016
விலைபோன வாக்கு
தலைமை செயலாளராக நான் இருந்த காலத்தில் 7 முறை மட்டுமே ஜெயலலிதாவிடம் பேசியிருக்கிறேன். தலைமைசெயலராக இருந்த ஞானதேசிகன்..
சாதாரணமான விடயமல்ல அரசின் தலைமை செயலர் சொல்வதை கண்டுக்கொள்ளாமல் விட்டுவிட முடியாது.. முதல்வரின் செயலரும் அவருக்கு வேண்டப்பட்டவர்களும் அரசை இயக்குகிறார்கள் என்பது வெளிச்சமாகிறது..
முதலில் ஞானதேசிகனுக்கு இடைநீக்கம் செய்தவுடன் ஞானம் வந்தது அருவருக்கதக்கதாக இருக்கிறது.. உயர்பதவியில் இருந்துக்கொண்டும் செயல்பட முடியவில்லையெனில் அதை அப்போதே சொல்லியிருக்கவேண்டும்.. பதவி சுகத்தை அனுபவிக்க மௌனமாய் இருந்தது எந்தவகையில் நியாயம் என்பதை திரு.ஞானதேசிகன் அவர்கள் விளக்கவேண்டும்..
..
இரண்டு அதிகாரமையங்கள் ஜெயலலிதா ஆட்சிக்குவரும்போதெல்லாம் நடக்கிறது.. சசிகலாவிற்கு வேண்டியவர்கள் என தனி அரசே நடத்துகிறார்கள் முதல்வருக்கு எந்த செய்தி செல்லவேண்டுமென்பதை இந்த அதிகாரமையம் தான் முடிவு செய்கிறது.. ஜெயலலிதா அரசு அதிகாரிகள் சுயமாக சட்த்திற்குட்பட்டு செயல்படுதென்பது அரிதாகதான் இருக்கும்..
இது ஆபத்தான போக்கு என்றோ அல்லது முறையற்ற செயல் என்றோ ஊடகங்கள் எடுத்துரைப்பதே இல்லை..
..
தலைமை செயலகம் தலைமையில்லாமல் என ஜூவி சொல்கிறது செயலகம் மட்டுமல்ல தமிழகமே சரியான தலைமை இல்லாமல் அல்லாடுகிறது.. பாட்டு கூத்து டான்ஸை விட்டுவிட்டு பாமரனை கொஞ்சம் பாருங்கள் அவனுக்கு செயல்படுங்கள் என #ஹிந்துஸ்தான்_டைம்ஸ் எழுதுகிறது.. தமிழக நாளேடுகளும் தொலைகாட்சிகளும் தங்கள் வருவாயை பெருக்கி கொண்டால் போதுமென எண்ணி ஜெயலலிதா அரசின் அவலட்சனத்தை கண்டுக்கொள்வதில்லை.. மடிகணனி ஊழலை முறையற்ற செலவு என தினமலர் எழுதுகிறதென்றால் எவ்வளவு கரிசனம் ..
இழப்பை ஊழலென்று கூக்குரலிட்டவர்கள்... இப்போது அதிகமாக பணம் கொடுத்து தரமற்ற பொருளை வாங்கி ஊழல் செய்து கொள்ளையடித்ததை முறையற்ற செலவு என மெழுகுகிறார்கள்..
..
முறையற்ற, திறனற்ற, செயல்படாத பஜனை கோஷ்டிகளோடு வலம் வருகிற ஒரு ஆட்சி ஜெயலலிதா தலைமையிலான ஆட்சிதான்..
இங்கே ஜாதிய மோதல்கள் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே போவதும் இந்தியாவிலேயே இரண்டாவது இடத்திற்கு ஜாதிமோதலை கொண்டுவந்ததும் தான் ஜெ.வின் சாதனை..
..
#விலைபோன_வாக்கு..
..
ஆலஞ்சி மன்சூர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment