Wednesday, September 21, 2016
உள்ளாட்சியில் பெண்கள்
உள்ளாட்சி.. ஜனநாயகம்
மக்கள் தங்கள் தேவைகளை தாங்களே நிறைவேற்றிக்கொள்ள ஜனநாயகம் தந்த சிறந்த அமைப்பு உள்ளாட்சி அதிகாரம்..
நிறைய ஆளுமைகள் இங்கிருந்துதான் பயிற்சி பெற்றார்கள்.. பெரியார் போன்ற மிகப்பெரிய ஆளுமைகளின் பயிற்சிகூடமாக இருந்தது..
உள்ளாட்சி அமைப்புகள்..
..
அதிகாரத்தில் பெண்கள் பங்கு மிக அவசியம் என்றார் பெரியார்.. நிறைய பெண்கள் அதிகாரத்தில் பங்குபெறவேண்டுமென்பதற்காகதான் நீண்டகாலமாக சட்டமன்ற நாடாளுமன்றங்களில் அவர்களுக்குரிய பங்கை 33 விழுக்காட்டை தரவேண்டுமென காங்கிரஸ் உட்பட பிரதான கட்சிகள் விரும்பியும் இன்னும் நிறைவேறாத கனவாகவே இருக்கிறது.. மகளிர் இடஒதுக்கீட்டைப்பற்றி பாஜக அரசு வாய் திறக்கவே மறுக்கிறது.. வேலைக்கு போகிற பெண்கள் விபசாரிகள் என்கிற ஆரிய/ ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை பின் தொடரும் பாஜக அரசால் மகளிர் இடஒதுக்கீட்டை கொண்டுவர முடியாது.. காணல் நீர் தான்..
..
உள்ளாட்சிகளில் 33 விழுக்காட்டை திமுக அரசுதான் கொண்டு வந்து இந்தியாவிற்கு வழிகாட்டியது.. இன்றைக்கு இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் மகளிருக்கென பிரதித்துவம் வழங்கப்பட்டிருக்கிறதென்றால் அது திராவிடத்தின் சாதனை..
..
நிறைய பேர் இந்த கேள்விகளை எழுப்பியிருக்கிறார்கள்.. பெண்கள் பதவி்க்கு வந்தாலும் அவரை பின்னின்று இயக்குவது அவர்கள் குடும்பத்து ஆண்கள்தான் .. சரிதான் அதற்காக இதை தவறென்று சொல்லமுடியாது..பல இடங்களில் இதுபோன்று நடக்கிறது குறிப்பாக ஊராட்சித்தலைவர் கவுன்சிலர் .. யூனியன் சேர்மன் போன்ற பதவிக்கு வருகிறவர்களின் குடும்பத்து ஆண்கள் ஏறக்குறைய பதவியை கையிலெடுத்து ஆடுகிறார்கள்.. நிறைய பெண்கள் சுயமாகவோ சுதந்திரமாகவோ செயல்பட விரும்பமிருந்தாலும் அதற்கான தகுதியிருந்தாலும் அனுமதிப்பதில்லை..
ஒரு சிலர் சுயமாக கம்பீரமாக செயல்படுகிறார்கள் என்பதையும் மறந்து கடந்துவிடமுடியாது..
..
இங்கே நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கூட சுதந்திரமாக சியசிந்தனையோடு செயல்பட முடியவில்லை என்கிற உண்மையை நாம் உணரவேண்டும்.. அதிகார பகிர்வு அல்லது பங்கு என்பது முழுமையானதாக இருக்கவேண்டும்..
சென்னை போன்ற மிக முக்கியத்துவம் வாய்ந்த
மாநகராட்சிகளை பெண்கள் அலங்கரிக்கபோய்கிறார்கள் எனும் போது உண்மையில் பெரும் #மகிழ்ச்சி.
..
எல்லா கட்சி மற்றும் அமைப்பு .. அமைப்புசாரா சுயங்கள்.. பெண்களை முழுமையான தனிச்சையாக செயல்பட அனுமதிக்கவேண்டும்..அவர்கள் மிகசிறந்த முறையில் செயல்படமுடியும் என்ற நம்பிக்கை கொள்ளவேண்டும்.. எந்த குறிக்கீடும் இல்லாமல் இருந்தால் மிகசிறந்தமுறையில் செயல்படுவார்கள்.
அப்போதுதான் பெரியார்கனவு நினைவானதாக பொருள்..
..
மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திடல் வேண்டும் என்ற #கவிமணியின் வரிகளோடு..
#வாழ்க_பெண்கள்..
..
ஆலஞ்சி மன்சூர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment