Thursday, September 22, 2016

ஊடக நெறி...

திலீபன்.. இவரின் பேச்சுக்களோடும் செயல்களோடும் ஏன் கொள்கையில் கூட நிறைய முரண் இருக்கிறது.. சட்டென்று உணர்ச்சியவயப்படும் சிறுப்பிள்ளைத்தனம் காண்கிறோம்.. அவர் செயல்களை விமர்சிக்க கூட செய்யலாம் தவறில்லை.. அவரை விவாதித்திற்கு அழைப்பது மிக கொடும் செயல் என்பதைப்போல பார்பனர்கள் கத்திக்கொண்டிருக்கிறார்கள்.. .. ஏதோ இவர்களுக்கு மட்டுமே தேசத்தின் மீது பற்றுள்ளதைப் போல.. இவர்கள் மகாகவி என்கிற சுப்ரமணிய பாரதி கூட மன்னிப்பு கடிதம் எழுதிக்கொடுத்த மாவீரர்தான்.. நாட்டை காட்டிக்கொடுத்தவர்களில்.. ஏன் வெள்ளையனுக்கு வெண்சாமரம் வீசியவர்களில் அதிகம் பேர் இவர்கள்தாம்.. தங்களின் உயர்வுக்காக விருந்துவைத்தவர்கள் தேசப்பற்றைப்பற்றி இவர்கள் பேசுகிறார்கள் . .. கருத்தோடு மோதுங்கள் அவனது செயலை விமர்சனம் செய்யுங்கள் தேசியகொடிக்கொண்டு மூக்குசிந்துபவனையும் .. காலில் போட்டு மிதித்த சங்பரிவார் கும்பலையோ கேள்வி கேட்க முடியதாவர்கள் திலீபனை கேட்கிறார்கள்.. .. திலீபனின் செயலோடு எக்காலத்திலும் ஒத்துபோக முடியாது என்பதற்காக அவரின் பேச்சை / கருத்தை செவிமடுக்ககூடாது என்பது பக்கா பாசிசம்.. திலீபனை செயலை கடுமையான கண்டித்திருக்கிறேன் அவரின் செயல்கள் இன்னமும் சரியாக #செதுக்கபடாதவைகளாகவே இருக்கிறது.. தமிழனின் மிகப்பெரிய பலவீனம் சட்டென்று உணர்ச்சியவயப்படல் ..ஒற்றுமையின்மை எதையும் ஆழ்ந்தாராயாமல் எடுக்கும் முடிவுகள் .. யார் எதிரி அவனின் பலவீனம் பலம் அறியாமல் இருப்பது.. .. மேக்கப் போடும் பெண்கள் விபச்சாரிகள் என்று பேசுகிறான் பாஜகவின் நாராயணன் .. அப்போது கடுமையாக எதிரிக்கவோ மன்னிப்பு கேட்க சொல்லவோ முடியாதவர்கள் ஒட்டுமொத்தமாக பெண்களை கேவலமாக பேசியவனை சமூகஆர்வலர் கல்வியாளர் என்றழைக்கிறீர்..இதையெல்லாம் மௌனமாக கடந்து செல்கிறவர்கள்.. இப்போது வாய் திறக்கிறார்கள் ராம்குமார் Accused குற்றம்சாட்டப்பட்டவராம்.. சங்கர்ராமன் கொலைவழக்கில் ஜெயேந்திரன் கூட தான் Accused அப்போது ஏன் வாய்மூடியிருந்தீர்.. .. எவரை பேசகூடாது எனச்சொல்ல எவனுக்கு உரிமையில்லை அவன் தவறாகவே பேசினாலும்.. பேச்சை தவறென்று சொல்வோமே தவிர... அழைக்கவோ பேசவோ கூடாதென்பதை ஏற்கமுடியாது.. .. ஆலஞ்சி மன்சூர்

No comments:

Post a Comment