Tuesday, September 13, 2016

திராவிடர்கள்

வாமனனை ஒருபோதும் கொண்டாடமாட்டோம்/ஏற்கமாட்டோம்.. மலையாளிகள்.. ஆர்எஸ்எஸ் தன் சித்தாந்தத்தை அதாவது ஆரியத்தை மற்றவர்கள் மீது திணிக்க எப்போதும் கையிலெடுக்கும் வித்தையை இப்போது அமிர்ஷா மூலம் எடுத்து மதரீதியான செயலாக மாற்ற முயற்சித்தது.. அறுவடை திருநாளை எப்படி இந்துக்களின் விழா என தலையில் கட்டியதை போல .. ஓணத்தை கைரளியர்கள் ( கேரளியர்) தேசிய பண்டிகையாக கொண்டாடுகிறார்கள் ..அதில் தங்கள் சித்தாந்தத்தை திணிக்க செய்த முயற்சி தோல்வியில் முடிந்தது.. நாங்கள் திராவிடர்கள் Dravidian legacy, Dravidian tradition எங்கள் மரபு பாரம்பரியம் வேறு.. எங்கள் அரசனை அழித்த வாமனை நாங்கள் ஏன் கொண்டாடவேண்டுமென கேட்டுஎதிர்ப்பை பலமாக பதிவு செய்திருக்கிறார்கள்.. பிராமணீயத்தை Brahmanism ஏற்றுக்கொள்ள முடியாது என தெளிவாக கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார்கள்.. கேரள முதல்வரும் பதிவை நீக்க வலியுறுத்தியிருக்கிறார் .. திராவிட மொழிகளின் தாய் என தமிழை கேரள பிரபலங்கள் தொடர்ந்து சொல்லிவருகிறார்கள் திரு.மம்மூட்டி அவர்கள் கூட மலையாளம் தமிழின் கிளை மொழி என சொல்லியிருக்கிறார்.. திராவிடத்தின் மீதான தாக்குதலை தொடர்ந்து ஆரியம் செய்துவருகிறது/ வரும்.. மொழிவெறியை திணிக்கும்.. தமிழின் கிளைமொழிகளை பிரித்து அரசியல் செய்யும் ..எல்லா வழிகளிலும் தன் சித்தாந்தத்தை திணிக்க தொடர்ந்து முயற்சிக்கிறது.. தமிழனை போல இடைசொருகலை (திபாவளி விநாயகர் சதுர்த்தி) ஏற்காமல் நாங்கள் வாமனஜெயந்தியை கொண்டாட ஆரியர்கள் இல்லை #திராவிடர்கள் என முகத்தில் கரியை பூசிய கைரளியர்களுக்கு பாராட்டும் வாழ்த்தும்.. ஓணம் ஆசம்சகள்.. Happy Onam.. .. ஆலஞ்சி மன்சூர்

No comments:

Post a Comment