Saturday, September 10, 2016
காவிரி
காவிரி..
காவிரி பிரச்சனையில் தலையிட முடியாது வழிப்போக்கன். .
மோடி பிரதமரானால் நல்லது என்று சொன்ன வைகோ போன்ற அரைகுறைகளை தேடுகிறேன்..
காவிரி நீராதார பிரச்சனை தமிழகம் போல ஒரு மடைமையான செயல்பாடுகள் செய்கிற அரசு இதுவரை இந்தியாவில் இல்லை.. தண்ணீர் தர மறுத்து அனைத்துகட்சி கூடிய முழு அடைப்பிற்கு அழைக்கிறது அரசின் துணையோடு அதை வெற்றிப்பெற செய்கிறார்கள்.. தமிழகத்தில் ஒருமுறை முழுஅடைப்பிற்கு திமுக ஆட்சியில் அழைப்பு விடுக்கப்பட்டபோது அதற்கு அரசு ஆதரவு தரகூடாது என உயர்நீதிமன்றம் போய் முழுஅடைப்பு சட்டவிரோதம் என தீர்ப்பை பெற்றவர்தான் இந்த ஜெயலலிதா..
..
கர்நாடகாவில் தமிழன் அடங்கி கிடக்கவேண்டிய சூழல்.. ஆனால் தமிழகத்தில் யாவரும் அமைதியாக வாழ அனுமதிக்கிறோம்.. அது பெருந்தன்மை என பேசி திரிவதைதான் காண்கிறோம்..
திரைப்பட கலைஞர்கள் காவிரியைப்பற்றி எதுவுமே தெரியாதவர்கள் எல்லாம் வீரவசனம் பேசி உணர்ச்சியை தூண்டி பிழைப்பிற்கு வழிதேடிக்கொண்டார்கள்.
..
காவிரி பிரச்சனையில் முன்னாள் பிரதமர் தேவகவுடா (வழிப்போக்கனை) தெரியாதனமாக இந்தியாவிற்கு வந்துவிட்ட பாரதபிரதமரை சந்திக்கிறார்.. தலையிட முடிதென்கிறார் தமிழகத்திற்கும் சேர்த்து பிரதமராக இருக்கும் மோடி.. நலம் நலமறிய ஆவல் என கேட்டு கடிதம் எழுதுவதை தவிர வேறொன்றும் அறியாதவராக.
நாள்குறிக்கப்பட்டு பரப்பரப்பில் இயங்குபவராக இருக்கிறார்.. நம்முதல்வர்..
ஒரு கோடி இட்லி விற்று பெருமை பேசி திரிந்தால் காவிரியில் தண்ணீர் வந்துவிடுமா..
அனைத்துகட்சி தலைவர்களும் முதவ்வர் தலைமையில் டெல்லிக்கு அணிவகுக்க வேண்டாமா.. எதிர்கட்சிதலைவரும் தானும் வருவதாக சொல்லியும் காவிரிமகள் மௌனம் கலைத்தப்பாடில்லை.. 50 பாட்டுக்காரர்களை வைத்துக்கொண்டு காவிரிக்கரையிருக்கு எனதிருவையாற்று கரையில் பாட்டு கச்சேரி நடத்தி மக்களை மகிழ்விக்கலாம்..
..
காவிரியில் கலைநிகழ்ச்சி நடத்தி தமிழனை மகிழ்விப்போம்.. கோடைகாலங்களில் வசந்தவிழா நடத்தியவன்.. இனி எல்லா பருவங்களிலும் கூத்தடித்து வாழலாம்..
..
இனி
#காவிரி_பாழ்..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment