Sunday, September 11, 2016

விருது

சு.சுவாமிக்கு தமிழ்ரத்னா.. விருது.. சிலர் கோவபடுகிறார்கள்.. இப்பெல்லாம் விருதுகள் விற்கபடுகின்றன அல்லது தங்களின் பிரச்சனைக்கு தீர்வாக, ஆதரவாக செயல்படுவோருக்கு வழங்கப்படுகிறது..விருதுகள் என்றாலேஅதுஅரசியலாகிப்போய்விட்டது .. .. தகுதியுள்ளவர்கள் மதிக்கப்படுதில்லை நிறைய பேர் தகுதியிருந்தும் அரசியல் மதம் ஜாதி போன்ற காரணங்களால் மறுக்கப்பட்டிருக்கிறது.. சு.சுவாமிக்கு தமிழ்ரத்னாவா.. என கேட்போருக்கு எம்ஜிஆருக்கு பாரதரத்னா விருது வழங்கப்பட்டதே அதேபோல இதுவும் அரசியல் கோமாளிக்கு வழங்கப்பட்டதாக கொள்வோம்.. தமிழில் சரிவர பேசதெரியவருக்காக என்கிறார்கள் தமிழனே அல்லாத ஆரியனுக்குதானே வழங்கப்பட்டிருக்கிறது.. பிராமணர்கள் தங்களை தமிழர்களாக அடையாளப்படுத்திக்கொள்வதில்லை தமிழரின் கலாச்சாரத்தோடும் திருவிழாக்களோடும் ஏன் பொங்கல் போன்ற தமிழர்திருநாளோடு கூட தங்களை இணைத்துக்கொள்வதில்லை.. தமிழரல்லாத ஒருவருக்கு வழங்கப்பட்ட விருதில் தமிழ்ரத்னா இருந்தால் என்ன.. .. விருதுகள் என்றவுடன் எனக்கு கலைஞரின் தென்பாண்டி சிங்கம் என்ற புதினம் ஞாபகம் வந்தது. தமிழக அரசின் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டிருந்தபோது அப்போதைய முதல்வர் மகோரா... தென்பாண்டி சிங்கம் நூலுக்கு விருது கொடுப்பதை தடுத்தார் அவ்வளவிற்கும் அது முதல் நூலாக பட்டியலில் இருந்தது.. விருது வழங்கினால் கலைஞரை சந்திக்க வேண்டுமென்று காரணம் சொல்லப்பட்டது இவ்வளவிற்கும் அந்தநூலை ஆய்வுசெய்து ஒருவர் முனைவர்(கலாநிதி/டாக்டர்) பட்டமும் இருவர் இளமுனைவர் பட்டமும் பெற்றிருந்தார்கள்.. இருந்தும் மறுக்கப்பட்டது.. விருதுகள் வேண்டிவருக்கு கொடுக்கும் பழக்கம் அப்போதுதான் உருவானது.. .. சு.சுவாமிக்கு வருவோம்.. தமிழ்ரத்னா... எப்படி காவிரித்தாய் பட்டமோ அதைப்போல இதுவும் ஒரு ரசிக்கதக்க நிகழ்வாக கருதி கடந்து போவோம்.. #தமிழுக்குவந்தசோதனை.. ஆலஞ்சி மன்சூர்

No comments:

Post a Comment