Monday, September 26, 2016

மிகசிறந்த தலைவராக...

நான் திராவிடன்.. திராவிட சிந்தனையாளன் என்ற நிலையில் பணியாற்றி இருக்கிறேனே தவிர அரசியலில் எனது பங்கு என்பது மிககுறைவு.. தேர்தல் முறை எண்ணிக்கை அடிப்படையிலான ஜனநாயகநாட்டில் இனத்தின் பங்கு வெளிப்படையாக வேண்டுமென்பதற்காகவும் பாசிச சக்திகளின் கையில் அதிகாரம் சென்றுவிட கூடாதென்பதற்காகவும் ..அரசியலை முன்னெடுக்கிறோம்.. .. ஒருவர் அரசியலில் எப்படி சேவைமனபாண்மையோடு செயலாற்றவேண்டுமென்று திரு.ஸ்டாலின் அவர்கள் நடவடிக்கையை கண்டு படிக்கவேண்டும்.. எதிராளிகளையும் மதிக்கும் போக்கும் தனக்கு மக்கள் தந்த அங்கீகாரத்திற்கு உண்மையாளனாக இருக்கவேண்டுமென்பதை ஸ்டாலின் நடவடிக்கைகள் உணர்த்தும்.. மிக சிறந்த அரசியல் தலவனுக்கான தகுதிகளை ஒருங்கே பெற்றவர்..முழுநேரமும் மக்கள் பணியில் தன்னை முழு ஈடுபாடோடு இணைத்துக்கொண்டு செயலாற்றும் வீரர்.. ஆனால் திமுகவின் மற்ற உறுப்பினர்கள் இதுபோல் செயலாற்றுகின்றரா என்றால் ஒரு சிலரை தவிர சிலர் மிக மந்தமாகவே செயல்படுகிறார்கள்.. இப்போது கூட தன் தொகுதி சார்ந்த பகுதிகளை மழைகாலத்தில் நீர்தேங்கும் என அச்சப்படும் பகுதிகளை ஆய்வு செய்து வடிகால்கள் தூர்வாறபட்டிருக்கிறதா என ஆய்வு செய்கிறார்.. மக்களுக்கான சேவை என்பது அவர்களின் எண்ணத்திற்கேற்க தேவைகளுக்கேற்ப செயலாற்றுவது. அதை செவ்வனே செய்பவராக ஸ்டாலின் இருக்கிறார்..அவரை மற்றவர்களும் பின்பற்றவேண்டும்.. .. திரு.ஸ்டாலின் அவர்கள் கொள்கை கட்சி இதையெல்லாம் கடந்து மக்கள் சேவையாற்றுகிற மாபெரும் தலைவராக தன்னை நிலைநிறுத்துகிறார்.. தமிழகம் கண்ட சிறந்த தலைவர்களில் ஒருவர் ஸ்டாலின் .. தமிழகம் செய்த தவறின் காரணமாக இன்று ஆட்சியில் அமர்த்தப்படவில்லை நாளடையில் இதற்காக வருந்தும் நிலை வரும் இப்போதே இந்தநிலை தொடர்கிறது.. .. மிக சிறந்த தலைவர்கள் கொள்கைகளால் மட்டும் வடிவமைக்கப்படுவதில்லை.. மக்கள் சேவையில் மக்கள் நலன் சார்ந்த தன் இனம் மொழி சார்ந்த சிந்தனை/செயல்களால் உண்மையான உழைப்பால் கட்டியெழுப்படுகிறார்கள்.. தமிழகம் கண்ட /காணும் மிகசிறந்த தலைவர்களில் ஒருவராக ஸ்டாலின் நிச்சயம் இடம் பெறுவார்.. .. ஆலஞ்சி மன்சூர்

No comments:

Post a Comment