Tuesday, September 20, 2016
காவிரி கலைஞர்
காவிரி மேலாண்மை வாரியமும், ஒழுங்காற்று வாரியமும் 4 வாரத்தில் அமைக்க உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது வரவேற்கதக்கது.
இதனை அமைப்பதற்கு அடிப்படையான
#காவிரிநடுவர்மன்றம்...
முதலில் கலைஞருக்கும் மறைந்த பிரதமர் வி.பி.சிங்கிற்கும் காவிரிக்காரன் என்ற வகையில் #நன்றிகள்..
..
ஆட்சியாளர்கள் ஒன்று நினைக்க அது வேறொன்றாதில் மகிழ்ச்சி.. காவிரி நடுவர் மன்றம் அமைத்தபோது இதனால் ஒரு பயனுமில்லை .. என்று கூப்பாடு போட்டவர் இடைக்கால நதிநீர் பங்கீடுயாக 205 டிஎம்சி யை வழக்கின் இறுதி தீர்ப்பு வரை செயல்படுத்தவேண்டுமென்ற நடுவர்மன்ற ஆணையை கேலிசெய்தவர்.. பின்னாளில் ஆட்சிக்கு வந்தபோது இறுதி தீர்ப்பை வந்ததால் காவிரித்தாயானார்..
..
89 ல் நடுவர்மன்றம் அமைத்தற்கு தஞ்சையில் விவசாயிகள் தங்கள் நன்றியை தெரிவிக்கும் பொருட்டு திலகர்திடல் என்று நினைக்கிறேன் .. விழா எடுத்தார்கள்.. அப்போது பேசிய கலைஞர் எனக்கு சேர்த்துதான் மன்றம் அமைத்தது என்றார்..
அந்த விழா வி.பி .சிங்கிற்கான பாராட்டுவிழாவாக மாற்றினார்.. உண்மையில் சமூகநீதிக்கான செயலாக்கங்களை திரு.வி.பி சிங் பிரதமராக இருந்தபோதுதான் நடந்தது.
மண்டல் பரிந்துரை... கிடப்பில் போட்டிருந்தார்கள்..
பார்பனர்கள் எதிர்ப்பை காரணம் காட்டி.. நியாயமாக பிற்படுத்தபட்ட மக்களின் உரிமைகளையும் களவாடிக்கொண்டிருந்தார்கள் ..
27 சதவிகித இடஒதுக்கீட்டை சட்டமாக்கிய பிறகுதான் கொ்சமேனும் எல்லாமதங்களிலும் உள்ள பிற்படுத்தபட்டோர் தங்களுக்கான இடஒதுக்கீட்டை பெற முடிந்தது .. மாணவர்களை தூண்டி தீக்குளிப்பெல்லாம் நடத்தினார்கள் கடைசிவரை உறுதியோடிருந்து நிறைவேற்றினார்.
அதற்காக பதவியை இழந்தார்..
ஆனால் மனநிம்மதியோடு போகிறேன் என்றார்..
..
காவிரி பிரச்சனை உணர்வுபூர்வமாக மாற்றி அதை அரசியலாக்கும் லாபம் நேடும் கடைந்தெடுத்த அயோக்கியத்தனமான அரசியலை கடந்து ..
நியாயமாக பல்வேறு கட்டங்களிலும் போராட்டமும் கவனஈர்ப்பும் தந்து போராடியவர்கள் நிறைய உண்டு.. கல்லெறிந்தவன் ஒருவன் காயை பொறுக்கினவன் என்பதை போல எதையுமே செய்யாமல் செய்த நல்லவிடயங்களை அரசியலுக்காக குறைகூறியும் திட்டியும் ..வசைபாடியும் நான்காம்தர அரசியல்செய்து .. கடைசியில் ஆட்சியில் இருந்தபோது இறுதி தீர்ப்பு வந்ததால் .. காவிரித்தாய் பொன்னியின் செல்வி என்றெல்லாம் பட்டம் பெற்றுக்கொண்ட ஜெயலலிதாவை .. சிறிய நகைப்போடு கடந்து போவோம்..
..
காவிரி நடுவர் மன்றம் அமைய காரணமான
இருபெரும் தலைவர்களைகளுக்கும் நன்றி சொல்வோம்..
..
ஆலஞ்சி மன்சூர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment