Saturday, September 3, 2016
பெரியாரை மறந்த நிலை இப்போதில்லை
ரஞ்சித் அடுத்த படத்திலாவது பெரியாரை படத்தை வைக்கவேண்டுமென பரவலாக சொல்லபடுகிறது..
தேவையில்லை .. பெரியாரின் கருத்துக்களை ஏற்கவோ மறுக்கவோ ரஞ்சித்திற்கு உரிமை உண்டு
பெரியாரை விமர்சிக்க கூட செய்யலாம் அது அவர் விருப்பம்.. பெரியாரே நானே சொன்னாலும் உன் அறிவேற்காததை ஏற்காதே என்றுதான் சொன்னார்..
..
பெரியாரை விமர்சிக்கவே கூடாதா என்றால் விமர்சிக்கலாம் கேள்விகேட்கலாம் அது உங்களுக்கு சரியானதாக, அவரின் கொள்கை அரசியல் உங்கள் அறிவு ஏற்றுக்கொள்ளாததாக மாற்றுகருத்தில் பலமாக விசுவாசம் உள்ளவராக இருக்கவேண்டும்.. ஆனால் மதில்மேல் அமர்ந்துக்கொண்டு சஞ்சலத்தோடு இருநிலைப்பாட்டை எடுக்ககூடாது..
திரு.பா.ரஞ்சித் பெரியார் படத்தை வைக்க மறந்துவிட்டேன் என்பதை ஏற்கமுடியாது.. பெரியாரை எதிர்ப்பதோ ஆதரிப்பதோ அவரின் விருப்பம்.. ஆனால் தவறுதலாக விடுபட்டுவிட்டதென்பது சமாளிப்பதே தவிர வேறில்லை..
ஏனெனில் பெரியாரை மறந்த நிலை இப்போது தமிழகத்தில் இல்லை..
..
இப்போது கூட
தன் மகள் காதலித்தால் 24 மணிநேரத்திற்குள் தற்கொலை செய்துக்கொள்வேன் என்கிற மதவெறியர்கள் இருக்கிறார்கள்..
தன் மகள் தன் ஜாதி பையனையோ அல்லது தன்னைவிட மேல்ஜாதி பையனையோ காதலித்தால் சாகமாட்டான் தன்னைவிட தாழ்ந்தஜாதி பையனை காதலித்தால் உயிரைவிடுவானாம்.. இப்போது கூட பெரியார் தான் தேவைபடுகிறார்.. மத,சாதீய வெறியர்களின் பங்கை அவ்வளவு குறைவாக மதிப்பிட முடியாது மெல்ல கொல்லும் விசம் போல் அவர்களின் செயல் அதற்கு அரசியல் காரணத்தை/ஆதரவை பெற முயற்சிக்க தங்களின் உரிமைகளை இழந்தாலும் பரவாயில்லை மீண்டும் கற்காலத்திற்கு/அடிமைத்தனத்திற்கு சென்றாலும் பரவாயில்லை என நினைக்கிற கூட்டம் சிறிய அளவில் எனினும் மிகவும்,ஆபத்தானவர்கள்..
..
இவர்களின் சொல்,செயலுக்கு மக்கள் அரசியல் அங்கீகாரம் அளிக்கவில்லையென்றாலும் காலபோக்கில் சிறிய சலனத்தை மக்கள் மனதில் விதைத்திட்டே போகிறார்கள் சிறியளவில் மாற்றத்தை தரும்.. பெரியாரிய கருத்துக்களை சினிமாக்களில் என்றில்லை சமூகதளங்களில் பேச விவாதிக்க பெரிய அளவில் எடுத்துச்செல்லவேண்டும்..
..
மத ஜாதீய நிழலில் நின்றுக்கொண்டு பரந்தமன்மையோடு செயல்படுவதாக சொல்வது ஒருவகை போலித்தனம்.. எதிர்ப்பதோ ஆதரிப்பதோ வெளிப்படையான/உண்மையான செயலாக இருக்கவேண்டும்.. சினிமா நிறைய சமரசங்களுக்கு உட்பட்டே எடுக்கவேண்டிவரும் அதில் கிடைக்கிற சந்தர்ப்பத்தை பயன்படுத்த ரஞ்சித் என்றில்லை நல்சிந்தனையாளர்கள் சமூக அக்கறையுள்ளவர்கள், சமூகம் சமநிலையை அடையவேண்டும் என்பவர்கள் தாமாக முன்வரவேண்டும்..
..
ஆலஞ்சி மன்சூர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment