Wednesday, September 28, 2016
வழிகேட்டில்
கோவை கலவரத்தில் ஈடுபட்டவர்கள் வங்கதேசத்தினர் எச்.ராசா..
புத்தி சுவாதீனமில்லாதவரின் கூற்றாக கருதமுடியாது.. உளறல் என்பதை விட குற்றவாளிகளை காப்பாற்றும் தந்திரம் என்பதுதான் சரி.. அதைவிட இந்த மத அமைப்புகளின் முகம் வெளுக்க தொடங்கியதும் .. சரியான வழிகாட்டுதல் இல்லாத மூளைச்சலவை செய்து மற்றொரு மதத்தினர் மீதோ அல்லது மற்றொரு பிரிவினர்மீதோ தாக்குதலை தொடரவேண்டுமென்ற நோக்கம் மட்டுமே கொண்டு தயாரிக்கப்பட்டவர்கள் ..
..
பாவம் தோன்றுகிறது இவர்கள் சுயமாக சிந்திக்கிற ஆற்றலை இழந்து நிற்கிறார்கள்.. மதம் ஜாதி பிரிவு அதிகார பேராசை இவைகளை காட்டி சட்டென்று உயரத்திற்கு ஏற்றிவிடுவதாக வாக்குறுதி தந்து கடைசியில் வழிகெட்டு நிற்க இளைஞர்கள்.. மிக சமார்த்தியமாக பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியவர்களை தயார் செய்கிறார்கள்..காரணம் அவர்களுக்கு பின்னால் பணபலமோ ஆள்பலமோ இருக்காது அவர்களுக்கு யாரும் வக்காலத்து வாங்கமாட்டார்கள் எதிலாவது மாட்டிக்கொண்டு சிறைக்கு சென்றால் கூட யாரும் அவர்களைப்பற்றி கவலைப்படமாட்டார்கள்.. இப்படிபட்டவர்களை தான் மத ஜாதி அமைப்புகள் பயன்படுத்துகின்றன..
..
தூண்டிவிடுகிறவர்கள் அல்லது வழிநடத்துகிறவர்கள் சர்வ பாக்கியத்தின் செல்வாக்கோடு அவர்கள் குழந்தைகள் உயர்தர கல்வி நிறுவனங்களில் பயில்கிறார்கள் அவர்கள் குடும்பத்தினர் அமைதியான சூழலில் இருக்கிறார்கள்.. பாவம் மூளைச்சலவை செய்யப்பட்ட யாரும் வேண்டாதவராய் குற்றவாளியாக நிற்கிறார்கள் .. இளைஞர்கள் .. இது எல்லா மத அமைப்புகளிலும் நடக்கிறதென்பது தான் பெரும் சோகம்..
நூறு இளைஞர்களை கேட்டார்.. சுவாமி விவேகானந்தர்... ஆனால் இன்றோ வழிகாட்ட யாருமில்லாமல் ...
ஆயிரம்கணக்கானோர்.. வழிதவறிய செம்மறிகளாய்..
..
#வழிகேட்டில்_இளைஞர்கள்..
..
ஆலஞ்சி மன்சூர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment