Friday, September 16, 2016

முழுஅடைப்பு

முழுஅடைப்பு. கடைகள் அடைக்கப்பட்டிருக்கின்றன.. சாலைகள் வெறிச்சோடி ..வீம்புக்கு இயக்கும் பேருந்துகள் கூட ஆளில்லாமல். பள்ளிகளுக்கு குழந்தைகளை வலுகட்டாயமாக அழைத்துவந்தாலும். மக்களின் ஒருமித்த உணர்வின் முன் மண்டியிட வேண்டியிருந்தது அரசுக்கு.. காரணம் ஜெயலலிதா தான் திமுக ஆட்சியில் நடந்த முழுஅடைப்பு சட்டவிரோதமென கோர்ட்க்கு சென்றவர் முதல்வர் கலைஞரே உண்ணாவிரத்தில் கலந்துக்கொள்கிறார் என்றவுடன் அவசரவழக்காய் பதிவுசெய்து முழுஅடைப்பை அரசே முன்னின்று நடத்தகூடாது என தீர்ப்பை பெற்றார்.. இப்போது திருப்பி அடிக்கிறது.. .. கர்நாடகாவில் முழுஅடைப்பு கேரளாவில் முழுஅடைப்பு என நடக்கிறதே அது அரசியல் சாசனத்தை மீறிய செயல் இல்லையா.. இங்கே தனிநபரின் உரிமைகள் பறிக்கப்படுவதாக சிலர் உயர்நீதிமன்றம் சென்று தடைபெறுகிறார்களே. ஏன் கர்நாடகாவில் பெறவில்லை.. கேரளாவில் இன்னும் பிற மாநிலங்களில் தடைபெற முடியவில்லை.. இங்கே சிலர் தங்களை தமிழர்கள் என சொல்லிக்கொள்கிற பார்பனர்கள் இதற்கெல்லாம் முட்டுகட்டை போடுகிறார்கள் ஆனால் மற்றமாநிலங்களுக்கு போனால் வாய்மூடி இருப்பார்கள்.. .. முழுஅடைப்பு பிரதான கட்சி கலந்துக்கொண்டதும் சில உதிரிகட்சிகளை களத்தில் காணோம்.. சில இடங்களை தவிர்த்து அநேக இடங்களில் இலையில் மறைந்து போனார்கள்.. இவர்கள் தான் மிகவும் ஆபத்தானவர்கள்..எதிர்கட்சித்தலைவர் திரு.ஸ்டாலின் உட்பட பல்லாயிரம் கணக்கில் கைதாகியிருக்கிறார்கள்.. முழுஅடைப்பும் ரயில்மறியலும் பெரியளவில் வெற்றியடைந்திருக்கிறது.. மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மத்திய மாநில அரசுகள் இனியேனும் காவிரியில் தண்ணீரை பிரச்சனையின்றி வர ஆவணசெய்யவேண்டும்.. .. இன்றும் வெகுசிலர் கடைகளை திறந்திருக்கிறார்கள்..ஆளும்கட்சிக்கு ஆதரவாக.. இவர்களை இனதுரோகி என்றெல்லாம் அழைக்கமாட்டேன்.. சமூகத்தின் மீது அக்கறையில்லாதவர்கள்.. அடுத்தவனுக்குதானே காயம் வலி எனக்கில்லையே என எண்ணுகிறவர்கள்.. அவர்களை புறந்தள்ளுவோம்.. அமைதியான முறையில் உணர்வோடு உணர்ச்சிமேலிட்டு பலிகொடுக்காமல் நடக்கிற அறப்போர் .. .. கலந்து கொண்டு கைதான அனைத்துகட்சி/அமைப்பை சேர்ந்தவர்களுக்கு அவர்களின் தமிழுணர்வுக்கு நன்றி.. .. ஆலஞ்சி.மன்சூர்

No comments:

Post a Comment