Monday, September 19, 2016
மௌனம் கலைப்பாரா
இங்கே ஒருவிடயம் திரும்ப திரும்ப மறைக்கப்படுகிறது..
தமிழ்நாட்டில் நிகழும் கொலை கொள்ளைகள் .. சர்வசாதாரணமாக நம்மில் கடந்துபோகிறது.. இவையனைத்தும் விவாதிக்கபடுகிறது ஆனால் மிக எச்சரிக்கையோடு உள்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வரை விமர்சிக்கவோ அல்லது ஏன் விளக்கம் தரவில்லையென்று கேட்கப்படுவதே இல்லை..
..
இந்தியாவிலேயே முதல்முறையாக மின்சார வயர் கடித்து சிறையில் நீதிமன்ற காவலில் இருந்தவர் இறந்துபோகிறார் .. சம்பவத்தின் உண்மைநிலை எதுவாகவோ இருக்கட்டும் .. நிறைய சந்தேகங்கள் எழுப்பிய ஒரு வழக்கில் கைது செய்யபட்டவரை இவ்வளவு அஜாக்கிரதையாக இருந்திருக்கிறார்களா.. சிறை அதிகாரி போனில். பேசியது வெளியில் வந்திருக்கிறது அதில் உடல் நிலை சரியில்லையென ராயபேட்டைக்கு அழைத்துச்செல்வதாக கூடவே சிறை மருத்துவரும் செல்வதாகவும் இந்த தகவலை கைதியின் குடும்பத்தாரிடம் தெரியபடுத்தியதாக சொல்கிறார்..
..
இதுவரை உள்துறையின் அமைச்சர் என்ற முறையில் முதல்வர் விளக்கம் அளிக்கவில்லை.. விரைந்து பிரேதபரிசோதனை என நகர்வதை உயர்நீதிமன்ற தடை செய்திருக்கிறது..
ஏற்கனவே சிபிஐ விசாரணை கோரியபோது அதற்கு அவசியமில்லை என்று நீதிமன்றம் முடிவு செய்தது ஒரு உயிரின் முடிவிற்கு கொண்டுவந்திருக்கிறது..
சுவாதி கொலையில் மர்மமுடிச்சுக்கள் இன்னும் அவிழவில்லை.. கொலையுண்ட சுவாதி தரப்பினர் விசாரணைக்கு உட்படுத்தபடவே இல்லை வழக்கில் ஆர்வம் காட்டவில்லை மாறாக குற்றம் சாட்டபட்டவர் தரப்பு தொடர்ந்து சிபிஐ விசாரணை வேண்டுமென்றும் ...குற்றத்தின் பின்ணணி குறித்த தகவல்களை தந்துக்கொண்டே இருந்தது.. வீணான சந்தேகங்கள்.. நிறைய மர்மங்கள் புதிரான விடயங்கள்
இதற்கெல்லாம் முடிவு கட்ட அரசே சிபிஐக்கு மாற்றி உத்தரவிடவேண்டும்.
..
இனியேனும் மௌனம் கலைப்பாரா..
..
ஆலஞ்சி.மன்சூர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment