Tuesday, September 20, 2016

கலைஞர் எனும் பெருமகன்

கலைஞர் என்ற ஒருவார்த்தை தமிழகத்தை ஆட்டுவிக்கும், ஆடவைக்கும், அலங்கரிக்கும், சுடர்தரும், சுட்டெரிக்கும், சுகம்தரும், கவிசொல்லும், கனிவுதரும், காப்பாற்றும், எதிரிக்கும்வாழ்வுதரும் அன்புதரும், அரவணைக்கும் நெஞ்சில் ஆர்ப்பரிக்கும்.. .. கலைஞர் எனும் கிழட்டுசிங்கம் வாழும்பெரியார் வயதில்மட்டுமல்ல சிந்தனையில் செய்து முடிப்பதில் அவர் #வாழும்பெரியார் .. கலைஞருக்கும் ஸ்டானினுக்கும் பிரச்சனை என சிலர்.. எப்போதெல்லாம் தேர்தல் வருகிறதோ அப்போதெல்லாம் இவர்களின் சூழ்ச்சி செய்வார்கள்.. one India இன்றைக்கு கனிமொழியை முன்னிறுத்தி செயல்படுவதாக சொல்லி தங்கள் அரிப்பை தீர்த்துக்கொண்டிருக்கிறது... மாவட்ட செயலாளர் கூட்டத்திற்கு காலதாமதமாக வந்தாராம்.. கலைஞரை கலக்காமல் வாசனோடு பேசினாராம். .. கலைஞர் பெருமகனும் .. பேராசிரியர் பெருந்தகையும் மிக தெளிவாக பலமுறை சொல்லிவிட்டார்கள்.. இயக்கத்தின் நான்காம் தலைமுறையை வழிநடத்த ஸ்டாலினே தகுதியானவர்.. ஏற்கனவே அண்ணனை கொம்பி சீவி அது அடிமாடாய் போனதால்.. வேறொன்றை கையிலெடுக்கிறார்கள்.. கலைஞர்தான் தலைவர் வழிநடத்துவார் இதில் எள்ளளவும் சந்தேகமில்லை.. ஆனால் காலமும் உடல்நிலையும் ஒத்துழைக்க மறுக்கிறது அதனாலேயே ஸ்டாலின் எல்லாவற்றிலும் முன்னெடுக்கப்படுகிறார்.. கலைஞரின் அறிவோடு.. .. இன்றைக்கும் கலைஞரின் சொல்தான் எழுத்துதான் தமிழகத்தை விழிக்கசெய்கிறது.. ஜனநாயகப் படுகொலையை நிகழ்த்துவோருக்கு கொலைகளும், தற்கொலைகளும் சாதாரணம்தான் கலைஞர்.. இரண்டடி கூர்மை.. கிழித்து தொங்கவிடுகிறது.. இந்த கிழவனின் செயல்தான் தமிழகம்.. .. கலைஞர்_தமிழர்களின்அரசியல்_வாழ்வியல் .. ஆலஞ்சி மன்சூர்

No comments:

Post a Comment