Sunday, September 11, 2016
நடந்தாய்...வாழி..
காவிரி..
எப்போதுமில்லாத அளவிற்கு குரோதமனபான்மையோடு இம்முறை அதிகமாக கடும்சொற்களாலும் மோசமான செயல்களாலும் தமிழர்களை / தமிழ்நாட்டை தாக்குகிறார்கள்..
என்ன காரணம்..
அரசியல் லாபத்திற்காக தேவகவுடா கட்சியும் பாஜகவும் போராட்டத்தை தூண்டிவிடுவதாக எடுத்துக்கொண்டாலும் அது அரசியல் லாபத்திற்காக இருக்கும் .. கர்நாடக தீர்ப்பு வந்தபோதும் வருடாவருடம் தண்ணீர் திறப்பு நடக்கிற போதெல்லாம்.. ஏன் 83 ல் நடந்த வன்முறைகளை விட இப்போது மிக மோசமாக நடக்கிறதே என்ன காரணம்..
..
கர்நாடக தேர்தல் நெருங்குவதால் தேவகவுடா இதை வைத்து அரசியல் செய்யநினைப்பதும் இழந்ததை மீட்க பாஜக வன்முறைகளுக்கு மறைமுக ஆதரவை தருவதும் பிரச்சனை பூதாகரமாகிக்கொண்டிருக்கிறது.. கௌட சமூகத்தினர் பெருபான்மையாக இருந்தும்.. மிகவும் பிற்படுத்தப்பட்டவர் அதிகாரத்தில் இருப்பதை விரும்பவில்லை..
லிங்கா மற்றும் ஒக்காலியா போன்ற ஆதிக்க சமூகத்தைசேர்ந்தவர்கள் போராட்டத்திற்கு மறைமுகமாக எண்ணெய் ஊற்றுகிறார்கள்.. மிகவும் பிற்படுத்தப்பட்ட மிக சிறுபான்மையான குருபா சமூகத்தை சார்ந்த சித்தராமையாவை முதல்வர் ஆக்கியதிலிருந்தே கௌட சமூகமும் ஒக்காலிய சமூகமும் பகைமையோடே இருக்கிறது..
..
சித்தராமையாவை மாற்றிவிட்டு ஆதிக்க சமூகத்திலிருந்து முதல்வரை நியமிக்கும் வரை காவிரி என்றில்லை எந்த விடயமானாலும் வன்முறையை/வன்மத்தை விதைத்துக்கொண்டுதான் இருப்பார்கள் என்கிறார் பத்திரிக்கை நண்பர் ஒருவர்.. தனிநபர்களை தாக்குதல் போன்ற விடயங்களில் ஏன் திரையுலகினரை கட்டாயப்படுத்தி போராட்டத்தில் களமிறக்கி எப்போதுமில்லாமல் இப்போது அதிக சுரத்தோடு பேச வைத்ததின் பின்னில் ஒக்காலிய சமூகத்தை சேர்ந்த திரைபடத்துறையினர் இருப்பதாக சொல்லபடுகிறது.
..
காவிரி பிரச்சனை கர்நாடகாவில் வேறுவடிவம் பெற்றிருக்கிறது.. மிகவும் முக்கியமாக அரசியலை தாண்டி இனமொழிவெறியை கடந்து .. ஆதிக்கசெலுத்தும் சாதீயநிலையை அடைந்திருக்கிறது..
இதன் பின்னில் இருப்பவைகள் மிகபெரிய ஆபத்தை விளைவிக்கும்..
ஒன்றுமட்டும்தான்.. சொல்லவேண்டும்..
காவிரி தண்ணீர் மட்டுமல்ல
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment