Monday, September 26, 2016
அஞ்சும் வழக்கம் திராவிடர்கில்லை
நண்பர் ஒருவர் இனத்தின் அடையாளம் மொழி என்றார்.. இல்லை ஒரு இனத்தின் அடையாளங்களில் பிரதான பங்கை மொழி வகிக்கிறது..
மொழி என்பது ஊடகம் அல்லது தொடர்புக்கானது..
ஒரு இனத்தில் பல்வேறு மொழி பேசுகிறவர்களை வரலாற்று நெடுக காணமுடியும் ஆனால் இனத்தால் அவர்கள் தங்களை ஒருங்கிணைத்துக்கொண்டிருக்கிறார்கள்..
யூத இனத்தை எடுத்துக்கொண்டால்.. யூதர்கள் பாலஸ்தீனியர்கள் சாமாரித்தர்கள் இவர்கள் யாவரும் யூத இனத்தை சேர்ந்தவர்கள்.. இப்போது கூட பிரதான எதிரியாக இருக்கிற பாலஸ்தீனியர்களும் யூதர்களும் தங்களை யஹூத் என்றே அறியப்படுகிறார்கள்.. ஆனால் அவர்களின் மொழி வழக்கம் வெவ்வேறாக இருக்கும்.. யூதமொழியை அறிந்தவர்களாக ஆனால் அரேபிய மொழியை ஏற்றுக்கொண்டவர்களாக இருப்பார்கள் அவர்கள் மதநம்பிக்கையும் அவர்களை வெவ்வேறாக்கியது.. இப்போது கூட சில ஆய்வாளர்கள் யூதர்களின் வழிதோன்றல்கள் தான் ஆரியர் எனச் சொல்கிறார்கள்.. அதற்கவர்கள் சொல்லும் பிரதான காரணம்.. யூதர்களின் புனிதநூல் என அறிய படுகிற தோரா விலும் கிருஸ்துவர்களின் பழைய ஏற்பாடாகவும் யூதர்களின் நூலாகவும் இருந்த ஏபிரேய விவிலியம்
ஏன் இஸ்லாமியர்களின் வேதநூலான குர்ஆனிலும் யூத இனத்தை மேன்மையானவர்கள் என்கிறது.. அதைதான் யஜூர் வேதமும் ஆரியர்களை மேன்மையானவர் என சொல்லி வர்ணத்தை தருகிறது.. தலையில் பிறந்ததாக சொல்லப்படுகிறது
நம் விடயத்திற்கு வருவோம்
இனத்தின் நிறைய மொழிகளில் ஆதிக்கம் உண்டு
பார்ஸி இனத்தில் கூட பார்ஸி மொழி பேசுகிறவர்களும் தாரி மொழி மற்றும் அரபு பேசுகிறவர்களும் உண்டு.. ஆனால் அவர்கள் இனத்தால் பார்ஸிகள் என்றே அழைக்கப்படுகிறார்கள்.. இங்கே திராவிடர்களை குறிப்பிட வேண்டும் திராவிடர்கள் இயற்கை வணங்கிகள் என்றும் உலகின் முதல் இன தோன்றல் என்றும் சொல்லப்படுகிறது பழைமை நாகரீகம் என அறியபடுகிற சிந்து சமவெளி நாகரீகமே திராவிட நாகரீகம் என்றும் அங்கு வாழ்ந்தவர்கள் திராவிடர்கள் தமிழர்கள் என நிறைய ஆய்வு முடிவுகள் பறைசாற்றுகிறது..
திராவிடத்தின் மூலமொழியாக தமிழே இருந்தது என்றும் .. பின் வட்டார வழக்கு சொற்களால்..பிரிந்து கன்னடம் தெலுங்கு மலையாளம் ஒரிய என பல்வேறு மொழி ஒலி வடிவங்களை பெற்றதாக சொல்லப்படுகிறது..
..
உலகின் ஒவ்வொரு இனமும் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள எடுக்கும் முதல் ஆயுதம் கலாச்சாரம் என்கிறார் இலங்கை சேர்ந்த பண்பட்டு செயல்பாட்டாளர்
டாக்டர்.சி.சிவமோகன் ..
ஆம்..ஒரு இனத்தின் அடையாளம் என்பது அவர்களின் வாழ்வு முறை கலாச்சாரம் பண்பாடு அவர்களின் பழையான பழக்கவழக்கங்கள் அவர்களது நாகரீகம் இவைகளே அதோடு அவர்களின் வழக்கு மொழியும் பிரதான பங்கை வகிக்கும்..
..
#ஒருமனிதனின்அடையாளம்_இனம்..
#அஞ்சும்_வழக்கம்_திராவிடர்க்கில்லை
..
ஆலஞ்சி மன்சூர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment